Tuesday, September 4, 2007

123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !

பிரணாப் முகர்ஜி போட்ட கள்ளத்தனமாக இராணுவ ஒப்பந்தம் 2005-இலேயே அம்பலமாகிவிட்டது. அமெரிக்காவின் ஆணைப்படிதான் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது என்பதும் அடுத்து அம்பலமானது. எனினும் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அப்போதெல்லாம் மார்க்சிஸ்டுகள் திரும்பப் பெறவில்லை. மாறாக, அமெரிக்க இராணுவமும் இந்திய இராணுவமும் மே.வங்களத்திலேயே கூட்டு போர் ஒத்திகை நடத்துவதற்கு போலீசு பாதுகாப்புக் கொடுத்தாரக்ள்.
..
"அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு எதிராகப் எதிராகப் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்போவதாக" என்ற சென்ற ஆண்டு பூச்சாண்டி காட்டினார் பிரகாஷ் காரத். "அப்படி தீர்மானம் கொண்டு வந்தால் இந்த அரசே இருக்காது" என்று பிரணாப் முகர்ஜி மார்க்சிஸ்டுகளை மிரட்டினார். உடனே சரணடைந்தார்கள்.இன்றைக்கு சவடால் அடிக்கிறார்கள்.

"உலகமயமாக்கத்தை எதிர்க்கவில்லை, அது மனிதமுகத்துடன் இருக்கவேண்டும்", "சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்க்கவில்லை, விவசாயிகளுக்கு போதுமான நட்ட ஈடு கொடுத்து நிலத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்". "பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்குவதை எதிர்க்கவில்லை, தொழிலாளர்களின் வேலைக்கு உத்திரவாதம் தரவேண்டும்" - இதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல். இப்போது , "அணுசக்தி ஒப்பந்தம் வேண்டாம் என்று சொல்லவில்லை, நாட்டின் இறையாண்மைக்கு பெரும் பாதிப்பு வந்துவிடக் கூடாது" என்று பசப்புகிறாரக்ள்.

"தனிப் பெரும்பான்மை இல்லாத ஒரு சிறுபான்மை அரசு துரோகத்தனமான ஒப்பந்தத்தைத் திருட்டுத்தனமாக இந்திய மக்கள் மேல் திணித்திருக்கிறது. இந்த அரசைக் கவிழ்ப்பதில் என்ன குற்றம்?" என்று நாடாளுமன்ற அரசியலின் வரம்புக்குட்பட்டு கேள்வி எழுப்பும் தைரியமும்கூட இவர்களுக்கு இல்லை.
..
"இந்த அரசு நிலைக்குமா என்பதை நாங்கள் ஏன் சொல்ல வேண்டும், அதை காங்கிரசு முடி செய்து கொள்ளட்டும்" என்று பேடித்தனமாக மழுப்புகிறார்கள்.
..இந்த பசப்பல்களுக்கும், மழுப்பல்களுக்கும் காரணம் இருக்கிறது. "பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் சலுகைகளை வாரி வழங்குவதன் மூலம் தான் நாட்டைத் தொழில்மயமாக்கி முன்னேற்ற முடியும்" என்ற கருத்தில் மன்மோகனுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.அதனால்தான் சிங்கூரிலும் நந்திக்கிராமிலும் எத்தகைய அட்டூழியங்கள் நடந்தாலும் மார்க்சிஸ்டுகளுக்குக் கொள்கை பூர்வமாக ஆதரவுக் கரம் நீட்டுகிறார் மன்மோகன் சிங், " அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்குமாறு புத்ததேவைத் தொலைபேசியில் கூப்பிட்டு உரிமையோடு கோரிக்கை வைக்கிறார்.கட்சித் தலைமை கூடி முடிவெடுப்பதற்கு முன்னதாகவே "காங்கிரசு அரசை கவிழ்க்க மாட்டோம்" என்று முந்திக் கொண்டு அறிக்கை விடுகிறார் ஜோதிபாசு.

அது மட்டுமல்லல் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் முகம் சுளித்து வருத்தப்படும் படியான காரியம் எதையும் மார்க்சிஸ்டுகள் ஒருக்காலும் செய்ய மாட்டார்கள்.மேலும், அமெரிக்காவின் வால் மார்ட்டையும் கொலைகார யூனியன் கார்பைடையும் மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க பாக்கு வைத்து அழைக்கும் மார்க்சிஸ்டு கட்சி, அமெரிககாவுக்கு எதிராக அத்து மீறிப் பேச முடியுமா? அதனால்தான் அடக்கி வாசிக்கிறார்கள்.

"முழுவதும் நனைந்த பின் முக்காடு எதற்கு?" என்கிறார் மன்மோகன் சிங். "முக்காட்டை எடுப்பதற்கு மட்டும் நாங்கள் அனும்திக்கவே மாட்டோம்" என்று முழங்குகிறார்கள் மார்க்சிஸ்டுகள் இதுதான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருவருக்கும் உள்ள 'கொள்கை' வேறுபாடு.இன்றைக்கு 'பாஸ்' பொத்தானைத்தான் அமுக்கினோம் என்கிறார் யெச்சூரி.நெருக்கடி எப்ப வந்தது என்று கேட்கிறார்.

இவர்களுடைய வலைப்பதிவர் சந்திப்பு சொல்கிறார்...இந்த ஒப்பந்தமே நாங்கள் எதிர்த்தது (?) காரணமாகத்தான் மக்களுக்கு தெரியவந்துருக்கிறது என்கிறார்.

இது குறித்து தோழர் சந்திப்புக்கு சின்ன கட்டபொம்மன் அவர்கள் போட்ட பதில் பின்னூட்டத்தை கருத்து சுதந்திரம் மிக்க சந்திப்பு அவர்கள் பிரசுரிக்காமல் விட்டதால் அதனை இங்கு இணைத்துள்ளோம்.

தோழர் சந்திப்பு அவர்களே!

அணு சக்தி ஒப்பந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்தியதில் இடதுசாரிகள் எனக் கருதிக்கொள்பவர்களின் பங்களிப்பை ஒத்துக்கொள்ளும் முன் ஒரு விசயம்.. இது ஏதோ தனியானதோர் ஒப்பந்தம் போலவும் இதற்கும் அமெரிக்க ராணுவ உடன்பாட்டுக்கும் சம்பந்தமில்லாதது போலவும் தோற்றத்தை உருவாக்குவது ஏன்? 2005இலேயே அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது..அதன் தொடர்ச்சியாகத்தானே 123?

இதெல்லாம் ஏதோ இன்றைக்குதான் தெரிந்தது போல பாராளுமன்றத்தில் சவடால் அடித்தது தவிர போலிகள் சாதித்தது என்ன?

கடந்த 2 ஆண்டுகளாக இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லாமல் இருந்தது ஏன்?

நாட்டை அடிமையாக்குகிறது இந்த அரசு என்பது தெளிவான பின்னும் ஆதரவை திரும்பப்பெறுவதில் என்ன தயக்கம்? தேர்தலை சந்திக்கத் தயங்குவதுதானே? வங்காள விவசாயிகள் சிந்திய ரத்தம் வரும் தேர்தலில் காவு கேட்டு விடும் எனும் பயமா? காரத்தும், யெச்சூரியும் மாத்தி மாத்தி அடித்த சவடால்கள் கடைசியில் "வாபஸ் பெறுவதைப் பற்றி காங்கிரசு முடிவெடுக்கட்டும்" என்று பிளேட்டையே மாத்திப் போட்டதைப் பார்க்கும்போது, தப்பித்தவறி யெச்சூரியோ, காரத்தோ கோடம்பாக்கம் பக்கம் வந்தார்களென்றால் வடிவேலுவின் மார்க்கெட் சரிந்து விடும் என்பது நிச்சயம்!
10 Comments:

சந்திப்பு said...
கம்யூனிச எதிர்ப்பு அமெரிக்க ஏஜன்டுகளே... இதோ கீழே இருக்கும் அறிக்கையை படியுங்கள்.... இடதுசாரிகள் 2005ஆம் ஆண்டு வெளியிட்ட கூட்டறிக்கை. இந்திய - அமெரிக்க இராணுவ உடன்பாட்டிற்கு எதிரானது. கண்ணை மூடிக் கொண்டு கம்யூனிச அவதூறை பரப்புவதன் மூலம் நீங்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகளாகி விடமுடியாது. காட்டுக்குள்ளே இருப்பவர்களக்கு நாட்டுக்குள் நடப்பது என்ன வென்று புரியாது. அதனால்தான் கல்லை கண்ணாடி வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு எரிகிறீர்கள்.
LEFT PARTIES PROTEST INDO-US AGREEMENT Reject This Framework Of Indo-US Relations: Karat Characterising the new framework for India-US defence relationships as against the security and ...........................................

சின்ன கட்டபொம்மன் said...
..
சந்திப்பு வலைதளத்தில் அணுசக்தி ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பதிவிற்கு நான் மறுப்பெழுதி,சந்திப்பு பிரசுரிக்க மறுத்த பின்னூட்டத்தை இங்கே வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
################################
தோழர் சந்திப்பு அவர்களே!
..
அணு சக்தி ஒப்பந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்தியதில் இடதுசாரிகள் எனக் கருதிக்கொள்பவர்களின் பங்களிப்பை ஒத்துக்கொள்ளும் முன் ஒரு விசயம்.. இது ஏதோ தனியானதோர் ஒப்பந்தம் போலவும் இதற்கும் அமெரிக்க ராணுவ உடன்பாட்டுக்கும் சம்பந்தமில்லாதது போலவும் தோற்றத்தை உருவாக்குவது ஏன்? 2005இலேயே அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது..அதன் தொடர்ச்சியாகத்தானே 123?இதெல்லாம் ஏதோ இன்றைக்குதான் தெரிந்தது போல பாராளுமன்றத்தில் சவடால் அடித்தது தவிர போலிகள் சாதித்தது என்ன?கடந்த 2 ஆண்டுகளாக இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லாமல் இருந்தது ஏன்?நாட்டை அடிமையாக்குகிறது இந்த அரசு என்பது தெளிவான பின்னும் ஆதரவை திரும்பப்பெறுவதில் என்ன தயக்கம்? தேர்தலை சந்திக்கத் தயங்குவதுதானே? வங்காள விவசாயிகள் சிந்திய ரத்தம் வரும் தேர்தலில் காவு கேட்டு விடும் எனும் பயமா? காரத்தும், யெச்சூரியும் மாத்தி மாத்தி அடித்த சவடால்கள் கடைசியில் "வாபஸ் பெறுவதைப் பற்றி காங்கிரசு முடிவெடுக்கட்டும்" என்று பிளேட்டையே மாத்திப் போட்டதைப் பார்க்கும்போது, தப்பித்தவறி யெச்சூரியோ, காரத்தோ கோடம்பாக்கம் பக்கம் வந்தார்களென்றால் வடிவேலுவின் மார்க்கெட் சரிந்து விடும் என்பது நிச்சயம்!###################################

சந்திப்பு...மே.வங்காளத்துல 15 பேரை சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்தி சென்னை பகுதியில் பலத் தெருமுனை கூட்டங்கள் போட்டு பேசத் தெரியுது.ஆனா நாட்டை அடமானம் வைக்கிற ஒப்பந்தத்தை எதிர்க்குறோம் என்று அறிக்கை மட்டும் விட்டுட்டு பாருங்க என்கிறீர்களே...மக்களிடம் இந்த ஒப்பந்தத்தை அம்பலப்படுத்த விடாமல் தடுத்த சக்தி எது?
4:59 PM
..
கோபா said...
மக்களிடம் இந்த ஒப்பந்தத்தை அம்பலப்படுத்த விடாமல் உங்களை தடுத்த சக்தி எது ?
5:05 PM
சந்திப்பு said...
..
கோபா இந்திய நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இந்த விசயத்திற்காக நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டம் - பிரச்சார இயக்கங்களை நடத்தி வருகிறோம். மேலும் நாளைய தினம் தமிழகத்தில் நடைபெறும் மறியல் இயக்கத்தின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று இந்த உடன்பாடு. எங்களைப் பொறுத்தவரை தத்துவமும் - நடைமுறையும் இணைந்தே இருக்கும்.
5:33 PM
..
கோபா said...

சந்திப்பு,2 ஆண்டுகளாக 123 ஒப்ப்ந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்த என்ன செய்தீர்கள் என்று கேட்டால்; போன வாரம் நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டம் போட்டோம் என்கிறீர்கள்.அதுதான் தெரிந்ததுதானுங்க, இப்பத்தான் எதிர்க்கிறீரக்ள் அதுகூட சும்மாதான் என்று தானுங்க நாங்க சொல்கிறோம்.
..
நேற்று நிலவரம் தெரியுமா !!
..
காங்கிரசுடன் இடதுசாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை முடிவில் 'கருத்து வேறுபாட்டை போக்க கூட்டுகுழு' அமைக்க முடிவு என்று அறிவித்து உள்ளனர்.அடிமைச் சாசனம் என்று ஒத்துகொள்கிறீர்கள், அதுல திருத்தம் பண்ண 'மண்'மோகனும் சரி அவருடைய பாஸ் புஷ்-ம் சரி ஏத்துக்கிற மாட்டோம் என்று தெளிவுபட சொல்லிட்டாங்க.
..
அதுனால கூட்டுக்குழு- வின் நோக்கம் என்ன?
..
பி.ஜே.பி நேற்றே சொல்லிட்டார்கள் 'நாங்க 123 யை எதிர்க்க மாட்டோம்' என்று.
..
உங்களால் அப்படி நேரடியாக சொல்ல முடியாது என்பதால் கூட்டுகுழு, அது, இது என்று பசப்புகிறீர்கள்.
9:14 AM

பாவெல் said...
தோழர் கட்டபொம்மன்எதுக்கு இந்த 'சந்திப்பு' கோமாளிக்கு 'தோழர்'என்ற மதிப்புக்குறிய வார்த்தைகளையெல்லாம்பயன் படுத்துகிறீர்கள்?
சந்திப்பு ஒரு கூலிக்குமாரடிக்கும் "அப்பாவி"அவருக்கு டாடாஸ்டுகளின்நிலைபாடுகளை கூட சரியாகவிளக்கி பேசத் தெரியாது,கேட்டு தான் சொல்வார்.CPM கட்சியில் உள்ள உண்மையானதொன்டனுடைய உணர்வை,அந்த தலமையின் துரோகத்தனத்தைஅறியாத 'தோழர்களின்' உணர்வை நாம்சந்திப்பிடம் எதிர்பார்க்க கூடாது.ஏனெனில் சந்திப்பு CPM என்கிற தனியார்நிறுவனத்தில் "தொழிலாளி"யாக பணிபுரிகிறார்.எனவே அவருக்கு தெரிந்த "அமெரிக்க ஏஜென்ட், காடு,துப்பாக்கி, நக்சலைட்" போன்ற வார்த்தகளை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பார் அப்ப தானே அவருக்கு"கூலி" கிடைக்கும்.எனவே நான் சொல்ல வருவது என்ன என்றால்,அண்ணன் சந்திப்புக்கு நாம் புரிய வைப்பதற்குஒன்றுமே இல்லை என்பது தான் !
..
ஏம்பா சந்திப்பு நீம் பாட்டுக்கு ஏன் தத்துவம், நடைமுறைன்னெல்லாம்பேசிக்கிட்டிருக்க,இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா தெரியல ?
10:00 PM