Friday, July 18, 2008

1...2...3...பாராளுமன்ற & சட்டமன்ற பன்னிகளை பிடியுங்கள்!

அடிமைசாசனமான 123 ஒப்பந்தத்தை தங்களது எஜமானன் அமெரிக்காவின் ஆணைப்படி இந்திய ஓட்டுப்பொறுக்கிகள் நிறைவேற்றி தற்போது அமுலுக்கு வரவிருக்கிறது.

நீங்கள் கேட்கலாம், ஒப்பந்தத்தை காங்கிரஸ்-திமுக-ராஷ்ரிய சனதா-பாமக போன்றவர்கள் தானே ஆதரிக்கின்றனர். சி.பி.எம், சி.பி.ஐ தான் அதனை எதிர்த்து தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறி வந்துட்டாங்க. பாசகாவும் அதன் அணிகளும் கூட எதிர்த்து வருகின்றனர். அப்பறம் எப்படி இந்திய ஓட்டுப்பொறுக்கிகள் அனைவரையும் அமெரிக்காவின் அடிமைகள் என்று சொல்ல முடியும் என்று.

இதனை விளக்க விவரங்களை கொடுக்கும் முன் ஒரே ஒரு கேள்வியினை போட்டு பதிலை தேடினாலே போதும்.

அந்த கேள்வி:

இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக வரும் இந்த 123 ஒப்பந்தம் 2005ம் ஆண்டு மத்திய அரசு கையெழுத்துயிட்டது. அப்போது இதனை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரமோ, கூட்டணி விலகலோ எந்த ஓட்டுப்பொறுக்கிக் கட்சி செய்தது?

இதற்கு பதிலை தேடினால் வருவது 'இல்லை'

இன்று எல்லா வேலைகளும் முடிந்து 123 ஒப்பந்தம் அமுலுக்கு வர வேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.

இப்ப 123 ஒப்பந்தம் மூலம் நம் நாடு அடையப்போவதை முதலில் பார்த்துவிட்டு ஓட்டுப்பொறுக்கிகளின் முகத்திரைகளை கிழிப்பது சரியாக இருக்கும்.

தற்போது மொத்த மின்சக்தி தேவையில் 3% ஆக உள்ள அணுமின்சார உற்பத்தியினை இன்னும் 15 ஆண்டுகளுக்கு பிறகு தேவையான மின்சக்தி தேவையில் 7% ஆக மாற்ற 3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அணு உலைகளை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்குவது.

உலகம் முழுவதும் விற்காத இந்த அணு உலைகளை வெறும் 4% அளவு மின்சாரத்தை அதிகரிப்பதற்காக 3 லட்சம் கோடியினை கொடுத்து எந்த மடையனாவது வாங்குவானா...உலகிலேயே தோரியம் அதிகமாக இருக்கும் இரண்டாவது நாடான இந்தியாவில் தோரியத்தை விடுத்து யுரேனித்தை இப்படி வாங்குவானா... இதல மின்சாரத்தேவை அதிகரிக்கும் என்று மக்கள் வரிப்பணத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்வானா... என இந்திய ஓட்டுப்பொறுக்கிகளை சட்டையினை பிடிக்க வேண்டிய அளவிற்கு மேலே உள்ள பொருளாதார ரீதியான காரணம் ஒன்றே போதும்.

ஆனால் 123 ஒப்பந்தத்தின் - தாய் ஒப்பந்தமான இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தம் என்பது இந்தியாவை அமெரிக்காவின் அரசியல் ரீதியில் நிரந்தர அடிமையாக மாற்றும் பல்வேறு சரத்துகளுடன் அமுலுக்கு வருகிறது.
1. அமெரிக்காவிற்கு எவன் எதிரியோ அவன் இந்தியாவிற்கும் எதிரி, எவனெல்லாம் அமெரிக்காவின் நண்பனோ அவனெல்லாம் இந்தியாவின் நண்பன்.
இதனடிப்படையில் தான் ஈரானுக்கு எதிராக 2 முறை இந்தியா வாக்களித்தது.
2. நிமிட்ஸ் போன்ற அணுசக்தி கப்பல்களை இந்திய கடலோரத்தில் அனுமதிக்க வேண்டும்.
3. அவன் படைகள் தங்கும் இடமாக பேட்டை ரவுடியாக இந்தியா இருக்க வேண்டும்.
4. அவனுடன் ராணுவ ரீதியில் உதவிக்கு இந்திய படைகளை அனுப்ப வேண்டும்.

இப்படி பல சரத்துகளை கொண்டது.... சொல்லி மாளாது என்பதால் இத்துடன் முடிக்கலாம். இப்ப சொல்லுங்க, இவ்வளவு அடிமைத்தனங்களை கொண்டு உள்ள ஒப்பந்தத்தை நிறைவேற்றிய ஓட்டுப்பொறுக்கிகளை சட்டையினை மட்டும் பிடித்தால் போதுமா?

கல்வி கிடைக்கலை, வேலைவாய்ப்பு கிடைக்கலை, மருத்துவம் கிடைக்கலை, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு - பெட்ரோல் டீசல் விலையில் பாதி அளவு வரி - வீட்டுவாடகை உயர்வு இவை அனைத்தையும் மனதில் ஓட்டுவிட்டு மேலே உள்ள கேள்வியினை மனதில் எழுப்பி பாருங்கள்.... மானம் உள்ள ஒவ்வொருவரின் ரத்தமும் கொதிக்காமல் இருக்காது.

சரி ஓட்டுப்பொறுக்கிகளின் முகத்திரை இதோ..

பாஜக :

இவன் தான் 123 ஒப்பந்ததின் ஆரம்ப கட்ட வேலைகளை பார்த்தவன். தற்போது கூட நாங்கள் ஆட்சிக்கு வந்தா இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற மாட்டோம் என்றா சொல்லுகிறான். கிடையாது, தற்போது உள்ள வடிவத்தில் நிறைவேற்றமாட்டோம் என்று தான் சொல்கிறான். அதிமுகவின் நிலைப்பாடும் இதுதான்.

போலிக்கம்யூனிஸ்டுகள் :

4 ஆண்டுகளாக ஒப்பந்தத்தின் வேலைகள் அனைத்தும் நிறைவேறுவதற்கும், தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கும் ஆட்சியினை ஆதரித்து துணை புரிந்த கட்சி. தற்போது கூட ஒப்பந்தத்தை விளக்கும் இவன், இவையெல்லாம் மறுகாலனியாக்கத்தின் வெளிப்பாடு தான் என்பதை மட்டும் சொல்ல மாட்டான். மேலும் தான் ஆளும் மாநிலங்களில் இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தி மக்களை நேரிடையாக கொலை செய்தும் வருகிறான்.

திமுக,பாமக,ராஷ்ரிய ஜனதாதளம்:

இவைகள் பலமுறை ஆட்சிக்கு வந்து கொள்ளையடித்த பணத்தை விட மறுகாலனியாக்கத்திலேயே உச்சகட்ட ஒப்பந்தமான 123 ஆதரிப்பதன் மூலம் கொள்ளையடிக்க முடியும் என்பதால் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நிரந்தர அடிமைகள்.

இதனாலதான் இன்று

சமாஜ்வாதி கட்சி- பணமும், அம்பானிக்கு சில சலுகைகளும் கொடுத்ததும் 'கோமாளி' கலாம் ஆதரிக்கும் ஒப்பந்தம் என தனது முந்தைய முடிவை மாற்றுகொண்டனர்.

தரகு முதலாளி அம்பானி எம்பிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் தருகிறான்.

கொலைகாரன் சிபு சோரன் அமைச்சர் பதவி கொடுத்ததும் ஆதரிக்கிறான்.

வானுர்தி நிலையத்திற்கு சரண்சிங் பெயரை வைத்தது அஜித் சிங் ஆதரிக்கிறார்.

இப்ப கூட எவனும் ஒப்பந்தத்தினை எதற்கு எதிர்க்கின்றோம் என்றோ, எதற்கு ஆதரிக்கிறோம் என்றோம் சொல்ல மாட்டேன் என்கிறானுங்க. காங்கிரசை நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கிறோம், எதிர்க்கிறோம் என சுருக்கி அடக்கி வாசித்து மக்களை ஏமாற்றும் தங்கள் மோசடிகளை தொடர்கின்றனர்.

இதுல கூடுதல் சேதி இது போன்ற ஒப்பந்தங்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை என்பது.

இப்போது சொல்லுங்கள் இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதையினை. பாராளுமன்றம் என்பது பன்றி தொழுவம் தான் என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா?

ஒன்று மட்டும் உறுதி:

ஓட்டுப்பொறுக்கிகள் இன்று தப்பித்து கொள்ளலாம், ஆனால் இந்த நாட்டையும் மக்களையும் நேசிக்கும் கைகள் வசம், அன்று பாரிசிலிருந்து இன்று காத்மாண்டு வரை உயர்ந்து நிற்கும் கைகள் வசம் இந்திய நாடு வரும் போது ஏற்படுத்தப்படும் மக்கள் சர்வாதிகார மன்றங்கள் முன் தப்பிக்க முடியாது.

அப்போது பிறப்பிக்கப்படும் ஆணைதான் :

1....2.....3..... பாராளுமன்ற & சட்டமன்ற பன்னிகளை பிடியுங்கள்!