Wednesday, November 21, 2007

அமெரிக்க - இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கிவெறிவோம்!

அமெரிக்க - இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கிவெறிவோம்!
அமெரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தத்தைக் கிழத்தெறிவொம்!!
"தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம்

அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவின் அடியாளாகவும் அடிமையாகவும் இந்தியாவை மாற்றியிருக்கிறது, மன்மோகன் சிங் அரசு. நமது அணு மின்நிலையங்களையும் ÷தாரியத்தைப் பயன்படுத்தி சுயசார்பாக நம் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் அணு தொழில்நுட்பத்தையும் முடக்கவும் திருடவும் அமெரிக்காவுக்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் வழிசெய்து கொடுத்திருக்கிறது.

இது வெறும் அணுசக்தி ஒப்பந்தமல்ல; ஜூலை 2005இல் இந்திய அரசு அமெரிக்காவுடன் இரகசியமாகச் செய்து கொண்ட இராணுவ ஒப்பந்தத்தின் ஓர் அங்கம். அதன்படி, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இந்திய இராணுவத்தை ஒரு காலாட்படையாக அனுப்பி வைக்க மன்மோகன் அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. இதனடிப்படையில்தான் ஈரானைத் தாக்குவதற்காக அனுப்பப்பட்ட நிமிட்ஸ் கப்பல் சென்னை துறைமுகத்தினுள் அனுமதிக்கப்பட்டது.அமைச்சரவைக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு, இனி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை நிராகரித்தாலும் இதனை ரத்து செய்ய முடியாது என்று திமிராகப் பேசுகிறார், பிரதமர். இப்படித்தான் மறுகாலனியாக்கம் என்ற படுகுழிக்குள் இந்தியாவைத் தள்ளிய ""காட்'' ஒப்பந்தமும் 1994இல் இதேபோல திருட்டுத்தனமாக நம்மீது திணிக்கப்பட்டது. அந்த மறுகாலனியாதிக்க அடிமைத்தனத்தின் உச்சகட்டம்தான் இந்த அடிமை ஒப்பந்தங்கள்.

இந்த உண்மைகளை விளக்கியும், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராட அறைகூவியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழகமெங்கும் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன. இவ்வமைப்புகளின் சார்பில் வெளியிடப்பட்ட பல்லாயிரக்கணக்கிலான துண்டுப் பிரசுரங்களும், ""அடிமைஅடியாள்அணுசக்தி!'' எனும் சிறுவெளியீடும் உழைக்கும் மக்களிடம் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்று, இப்பிரச்சார இயக்கத்துக்கு வலுவூட்டின. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்டு, 29ஆம் தேதியன்று தமிழகமெங்கும் இப்புரட்சிகர அமைப்புகள் செயல்படும் பகுதிகளில் இத்துரோக ஒப்பந்தத்திற்கு எதிராக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

செங்கொடிகள் உயர்ந்தோங்க, விண்ணதிரும் முழக்கங்களுடன் சென்னை, திருச்சி, தஞ்சை, மதுரை, கோவை, ஓசூர், திருப்பத்தூர், சிவகங்கை, தருமபுரி, சேலம், கடலூர் மற்றும் புதுவை மாநிலத்தின் காரைக்கால் ஆகிய நகரங்களில் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஜனநா யக உணர்வும் கொண்ட பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், தொழில்நுட்பவாதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்டு இவ்வ மைப்புகளின் முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அரங்கக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் மூலமாக கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் இவ்வமைப்புகள் இப்பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன.

பு.ஜ. செய்தியாளர்கள்.

Thursday, November 15, 2007

சர்வதேச அணுசக்தி கழகத்துடன் பேச்சு நடத்தலாம்....போலிகளின் வளர்ச்சி!



"கருத்து ஒற்றுமை" ஏற்படுத்துவோம் என்று மக்களை ஏமாற்றி வந்த போலிக் கம்யூனிஸ்டுகள் தற்போது 'சர்வதேச அணுசக்தி கழகத்திடம் பேச்சு நடத்தலாம்', ஆனால் அதன் அம்சங்களை எங்களுடன் விவாதிக்கனும் என்று அறிவித்து உள்ளனர். எதிர்க்கிற மாதிரியே 123-யை நிறைவேற்றிட எப்படியெல்லாம் வேலை செய்கிறார்கள் இந்த எதிரிகள் என்பது தெரிகிறது.

நந்திகிராமில் நாங்கள் எங்கள் குண்டர் படையை வைத்துத்தான் போராடும் மக்களை தாக்கி வருகிறோம் என புத்ததேவ் அறிவிச்சுட்டார். 123 -லேயும் அப்படி வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது தானே போலிகளே !!