<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837</id><updated>2012-02-09T03:40:55.815-08:00</updated><category term='ஓட்டுப்பொறுக்கிகள்'/><category term='மறுகாலனியாதிக்கம்'/><category term='அடிமை சாசனம்'/><category term='hindutva'/><category term='போலிகக் கம்யூனிஸ்டுகள்'/><category term='கோமாளி'/><title type='text'>அடிமை ! அடியாள் !! அணுசக்தி !!!</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://123-agreement.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>23</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-8420697421283766974</id><published>2008-09-08T05:30:00.000-07:00</published><updated>2008-09-08T05:32:05.135-07:00</updated><title type='text'>அணு ஒப்பந்தம் குறித்து... பாகம் I</title><content type='html'>அணு ஒப்பந்தம் குறித்து பொதுவாகவே ஆதரவான கருத்து நிலவுகிறது. அது குறித்து சரியான விவாதம் தமிழ்சூழலில் நடந்தேறாமலேயே போய்விட்டது. ஒவ்வொருவரும் தமது அரசியல் நிலைப்பாடுகளுக்கேற்ப இந்த பிரச்சினையை அனுகுவது என்பதும், உண்மையிலேயே இதை புரிந்து கொள்ள முயற்சி செய்யும் ஜனநாயக சக்திகளுக்கோ பக்க சார்பான தகவல்களே இலகுவாக கிடைக்கப் பெறுகிறது என்ற நிலையும் நிலவுகிறது. இந்த நிலையை கலையும் சிறு முயற்சியாக இரண்டு பாகங்களாக அணு ஒப்பந்தம் குறித்த விசயங்கள் இங்கு பேசப்படவுள்ளன. முதல் பாகம் இது அணு ஒப்பந்தம் சம்பந்தப்பட்டது என்ற பொது கருத்து நிலையிலிருந்தே அலசுகிறது. இரண்டாவது பாகம் இந்த ஒப்பந்தத்தின் உண்மையான பொருள், நோக்கம் அணுவை கடந்தது என்பதை அலசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;__________________________________________________________&lt;br /&gt;&lt;br /&gt;அணு ஒப்பந்தம் குறித்து நிலவும் கருத்துக்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;#1) இந்தியாவின் மின்சாரத் தேவைக்காகவே இது போடப்படுகிறது&lt;br /&gt;#2) இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இது தேவைப்படுகிறது&lt;br /&gt;#3) இதை எதிர்ப்பவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரிகள்&lt;br /&gt;#4) இதை கம்யுனிஸ்டுகள் எதிர்ப்பதன் காரணம் அமெரிக்க எதிர்ப்பு அரசியல்&lt;br /&gt;#5) அணு ஒப்பந்தம் வேறு நாடுகளுடன் போடப்படவில்லையா? ஏன் இந்தியாவுடன் போடுவதை மட்டும் எதிர்க்கிறார்கள்?&lt;br /&gt;#6) அமெரிக்கா ஏற்கனவே நாட்டை பாதி அடிமையாகிவிட்டது. தலைக்கு மேல் வெள்ளம் போகும் போது ஜாண் போனால் என்ன முழம் போனால் என்ன?&lt;br /&gt;#7) அபாயகரமான கதிரியக்கம் என்பது பெட்ரோல் உற்பத்தி முதல் பல்வேறு விசயங்களில் வெளிப்படும் ஒன்றுதான். அணுவைப் பொறுத்தவரை இது ஊதிப் பெருக்க வைக்கப்பட்ட வதந்தி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில கருத்துக்கள் விடுபட்டிருக்கலாம். அணு ஒப்பந்தம் குறித்து பெரும்பாலனவர்களுக்கு தெரியவில்லை என்பது வெள்ளிடை மலை. பெரும்பாலான கட்டுரைகள் யானையை விவரிக்க முயன்ற ஐந்து கண்பார்வையில்லாதவர்களின் கதையை நினைவூட்டுகின்றனர். 123 என்றால் என்ன? 123 ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டதா இல்லையா?, IAEA என்றால் என்ன? ஹைட் சட்டத் திருத்தம் என்றால் என்ன? எப்படி இந்த ஒப்பந்தம் இந்தியாவை அடிமைப்படுத்தும் என்கிறார்கள்? இப்படி பல கேள்விகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர்த்து, இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிடமிருந்து அணு உலைகளையும், அதற்கு தேவையான யுரேனியத்தையும் பெறுவதற்கே போடப்படுகிறது, CPM இந்தியாவின் இறையாண்மைக்காக தியாகம் செய்துள்ளது என்பது போன்ற பல்வேறு மூட நம்பிக்கைகள் வேறு பரவலாக உலாவுகின்றன. இவை குறித்து ஓரளவு புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஆக விளக்கமாக, எளிமையாக எடுத்துரைப்பதே இந்த கட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அணு என்றால் என்ன, அணு சக்தி என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்:&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பொருளை உடைத்துக் கொண்டே சென்றால் ஒரு கட்டத்திற்க்கு மேல் உடைக்கும் போது அது இனிமேலும் அந்த குறிப்பிட்ட பொருள் என்பதற்க்கான பண்புகளை இழக்கும். அந்த கடைசி அளவிலான பொருளே அந்த குறிப்பிட்ட தனிமத்தின் அணு என்று புரிந்து கொள்ளலாம் #1. அணுவை உடைக்கும் போதோ அல்லது இணைக்கும் போது சக்தி உருவாகிறது. இதனை ஆங்கிலத்தில் Nuclear Fission, Nuclear Fusion என்று குறிப்பிடுகிறார்கள். இதில் உடைப்பதன் மூலம் சக்தி உருவாக்கும்(fission) தொழில் நுட்பமே பரவலாக பயன்பாட்டில் உள்ளது. இணைவின் மூலமான தொழில்நுட்பம் வெகு சில நாடுகளிடமே உள்ளது (ஹைட்ரஜன் குண்டுகள்).&lt;br /&gt;&lt;br /&gt;அணு உடைப்பின் மூலம் அதிக சக்தி பெறுவதற்க்கு அந்த குறிப்பிட்ட அணுவின் எடை அதிகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் எடை அதிகம் கொண்ட அணுவின் பிணைப்பு விசை(Binding energy) அதிகமாக இருக்கும். எனவே இந்த அணு உடைக்கப்படும் போது இந்த பிணைப்பு விசை சக்தியாக வெளியிடப்படுகிறது #2. அந்த வகையில் அதிகமான அணு எடை கொண்ட தனிமங்களே அணு உடைப்பிற்கு பயன்படுத்தப் படுகின்றன. இது போல அணு எடை அதிகமான தனிமங்களை கதிரியக்க தனிமங்கள் என்கிறோம். இவை யுரேனியம், தோரியம், புளுட்டோனியம் இன்னபிற. இவற்றில் யுரேனியமே எடை அதிகமுள்ளது. எனவே யுரெனியத்திலிருந்துதான் அணு சக்தி பெரும்பாலும் பெறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தனிமம் அணு உடைப்பிற்கு தகுதியானதா என்பதை முடிவு செய்வதில் அந்த தனிமத்தின் அணு உடைப்பு ஐசோடோப்பு பண்பு (Fissile Isotope) முக்கிய பங்கு ஆற்றுகிறது. எடுத்துக்காட்டுக்கு யுரேனியம் அணு பரவலாக u238 என்ற வடிவில்தான் கிடைக்கிறது. ஆனால் U235 என்கிற வடிவம்தான் அணு உடைப்பு ஐசோடோப்பு பண்பு கொண்டதாக இருக்கிறது. இந்த பண்பு கொண்ட அணுதான் நீடித்த அணு உடைப்பு சங்கிலி விளைவை ஏற்படுத்தும்(Sustained Chain reaction). இது நடந்தால்தான் யுரேனியம் அணுக்கள் அடுத்தடுத்து வெடித்து சக்தி அபரிமிதமாக கிடைக்கும் #3. இதில் 235, 238 என்பவை அணு எடையைக் குறிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஐசோடோப் என்றால் என்ன?#4. ஐசோடோப்பு குறித்து பேசும் முன்பு அணு எண், அணு எடை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு அணுவின் அணு எண்தான் அது எந்த தனிமம் என்பதை குறிக்கிறது. அணு எண் என்பது ஒரு அணுவில் உள்ள நேர்மின் துகள்களை குறிக்கிறது(எதிர் நேர் மின் துகள்கள் அணுவில் சமமாகவே இருக்கும்)#5. அணுவின் மையப்பகுதியான நியுக்ளியசில் புரோட்டானும்(நேர்மின்), நிய்ட்ரானும் இருக்கும், இது தவிர்த்து எல்க்ட்ரான்(எதிர்மின்) நியுக்ளியசுக்கு வெளியே சுற்றி வரும். அணு எடை என்பது நியூக்ளியசில் உள்ள நேர்மின் துகள்(புரோட்டான்), நியுட்ரானின் எண்ணிக்கையாகும் #6. ஐசோடோப் என்பது வெவ்வேறு அணு எடை கொண்ட ஆனால் ஒரே அணு எண்ணை உடைய அணுக்கள். அதாவது ஒரே தனிமத்தின் வெவ்வேறு அணு எடை கொண்ட அணுக்களே ஐசோடோப்புகள். U235 என்ற அணு எடை கொண்ட யுரேனியம் ஐசோடோப்பின் நீயுக்ளியசில் அணுச் சமன்பாடு குலைக்கப்பட்டுள்ளதால் இதனை உடைப்பது எளிது, இதிலிருந்து உருவாகும் சக்தி சுற்றியுள்ள பிற U235 அணுக்களை உடைப்பதன் மூலம் நீடித்த சங்கிலி விளைவை உருவாக்குகிறது. அணு, அணு சக்தி குறித்த அடிப்படை விஞ்ஞானம் இதுதான். அணு சக்தியின் நன்மை தீமை குறித்து இப்போது பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அணு சக்தியின் நன்மை, தீமை:&lt;br /&gt;&lt;br /&gt;அணு வெடிப்பின் மூலம் சக்தி இரு வழிகளில் வெளிப்படுகிறது. ஒன்று கைனடிக் சக்தி(சுழற்சி விசை என்ற மொழிபெயர்ப்பு சரியா?) இன்னொன்று கதிரியக்கமாக வெளிப்படுகிறது. இந்த கதிரியக்கம் தன்னைச் சுற்றியுள்ள பொருட்களின் அணுக்களையும் பாதித்து கதிரியக்க தன்மைவாய்ந்ததாக மாற்றி விடுகிறது. இப்படி உருவாகுபவை அணு உலைகளில் பயன்படுத்தும் கையுறை முதலான பொருட்களில் இருந்து அனைத்தும் அடங்கும். அணு உடைப்பிற்கு பிற்பாடு மிச்சமிருக்கும் கதிரியக்க பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள இந்த அனைத்துவிதமான பொருட்களையும் அணுக் கழிவுகள் என்று குறிப்பிடுகிறார்கள். விலை குறைவாக, வீரியமான முறையில் சக்தி கிடைக்கிறது, கார்பன் மாசுபாடு மிகக் குறைவு என்பது அணுவின் நன்மை எனில், அதனால் உருவாகும் இந்த கழிவுகள் மிக அபாயகாரமானதாக இருக்கின்றன#7.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக அணு உலைகள் தவிர்த்து பிற தொழிற்சாலை உற்பத்திகளில் குறிப்பாக, எண்ணெய் உற்பத்தி நிலையங்களில் மிக அதிகளவில் கதிரியக்க கழிவுகள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு அபாயகராமானவைதான் என்றாலும் இவை குறை சக்தி கதிரியக்க கழிவுகள்(LLW/ILW). அதாவது பிற தொழிற்சாலை கழிவுகள் போன்றதே இது. இப்படி சொல்வதன் அர்த்தம் இந்த கழிவுகள் குறித்து நாம் குறைத்து மதிப்பிடுவது என்பது அல்ல. இன்று மனித குலத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ள உலக வெப்பமடைதலுக்கு பின்னால் உள்ள அராஜக ஏகாதிபத்திய உற்பத்தி முறையை இந்த பிரச்சினைக்கும் காரணம். இவை நமது கடும் கண்டனத்திற்க்கும் எதிர்ப்பிற்கும் உள்ளாகும் விசயமாகவே உள்ளது. ஆயினும் ஒரு குற்றத்தை காரணம் காட்டி அதை விட பல மடங்கு பெரிய தவறை நியாயப்படுத்த முயலும் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தும் போது பெரிய தவறு உண்மையில் பெரிய தவறு என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டியுள்ளது. ஏனேனில் HLW எனப்படும் அதி உயர் கதிரியக்க கழிவுகளில் அணு கழிவு மட்டும்தான் வருகிறது. இப்படி ஒரு வருடத்திற்க்கு உருவாகும் HLW கழிவுகள் 12,000 மெட்ரிக் டன். அதாவது நூறு இரண்டு அடுக்கு பேரூந்து நிறைய கழிவுகள் உருவாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அணு வெடிப்பின் மூலம் கதிரியக்க தன்மை வாய்ந்தவையாக வெளிவரும் அணுக்களின் கதிரியக்க வாழ்நாள் வேவ்வேறாக உள்ளது ஒரு எடுத்துக்காட்டுக்கு ஐயோடின் உப்பின் கதிரியக்கம் 8 நாட்களில் வடிந்துவிடுகிறது. ஆனால் யுரெனியம் வெடிப்பில் பயன்படுத்தப்படும் புளோட்டனியம்-239 கழிவு வாழ்நாள் பல நூறு-ஆயிரம் வருடங்கள் நீடித்திருக்கும் தன்மை வாய்ந்தது. இன்ன பிற கழிவுகளின் வாழ்நாள் பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கும் மேல் நீடித்திருக்கும். இதுதான் அணுக் கழிவுகளை மிக அபாயகரமானதாக மாற்றுகிறது. ஆக, மனித சமுதாயத்தின் தொடர்பிலிருந்து, புவியின் உயிர் சூழலின் தொடர்பிலிருந்து இந்த அணுக் கழிவுகள் சுத்தமாக தனிமைப்படுத்தப்பட்டு பல நூறு-ஆயிரம்-மில்லியன் வருடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியிருக்கிறது. இப்படி பாதுகாப்பதற்க்கான தொழில் நுட்பம் எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற கழிவுகளை ஒழித்துக்கட்டும் தொழில்நுட்பம் இன்றி அவற்றை மூட்டைக் கட்டி சேர்த்து வைக்கும் வேலையையே தற்போது செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் யுகா(Yucca) மலையை இப்படி அணு குப்பைக் கூடையாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இது கடும் எதிர்ப்புகளை கடந்து வந்து கொண்டிருக்கிறது. இப்படி சேமித்து வைக்கப்படுவதற்க்கும் இடங்கள் இன்றி தற்போது தவித்து வருகிறார்கள். இது அணுக் கழிவுகள் என்ற அபாயம் குறித்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒருபக்கம் என்றால் இந்த அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பது மிக அபாயகரமானதாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அணு எந்தளவுக்கு சக்தி கொண்டது எனில் நிலக்கரி, டிஎண்டி போன்றவற்றிலிருந்து பெருவதைவிட குறைந்தது 10மில்லியன் மடங்கு அதிகமான உபயோகிக்ககூடிய சக்தி அணுவிலிருந்து கிடைக்கிறது #8. ஹிரோசிமாவில் போடப்பட்ட அணு குண்டில் இருந்த யூரேனியம்-235 அணுவின் அளவு 60கிலோ இதில் 828 கிராம்தான் வெடித்தது, இதிலும் 6கிராம்தான் சக்தியாக உருமாறியது #9. இதிலிருந்து வெளிப்பட்ட சக்தியின் அளவு 13கிலோடன் டிஎண்டி வெடித்ததற்க்கு இணையாக இருந்தது. இதுவே ஒரு முழு நகரத்தை உடனடியாக அழித்தது எனில் இதன் சக்தியை புரிந்து கொள்ளலாம். இந்த தோல்விகரமான குண்டு வெடித்ததில் உடனடியாக 1.6 கிலோமீட்டர் சுற்றளவு அழிந்து விட்டது. இதனால் ஏற்பட்ட தீ 11.2 சதுர கிலோமிட்டர் பரப்பளவிற்கு பரவியது. ஹிரோசிமாவின் 90% நகரம் முற்றிலும் அழிந்தது #10. நாகசாகியில் வெடித்த குண்டு உருவாக்கிய காளான் புகையோ 18 கிலோமீட்டர் உயரம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாகசாகியில் இடப்பட்ட புளூட்டோனியம்-239 குண்டு 6.4 கிலோதான். இதிலிருந்து வந்த சக்தி 21 கிலோடன் டிஎண்டிக்கு இணையாக இருந்தது. உருவான வெப்பம் 3900 டிகிரி செல்சியஸ், காற்றின் வேகம் 1005கிமீ/மணி. உடனடி அழிவு 1.6 கிமீ சுற்றளவிலும், இதனால் ஏற்பட்ட தீ 3 கிமீ சுற்றளவுக்கு பரவியது. இந்த இரண்டு குண்டு வெடிப்பிலும் உடனடியாக இறந்தவர்கள் லட்சங்களில். கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு அடுத்த சில மாதங்களில் இதே அளவில் இறந்தார்கள். இது தவிர்த்து இதன் கதிரியக்க விளைவுகள் இன்று வரை கூட தொடர்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அணு விபத்துக்கள் என்றால் அவ்வப்போது சிறிய அளவில் இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலும் உண்மை நிலவரங்களை யாரும் வெளியிடுவதில்லை. அணு விபத்துக்களில் முக்கியமானவை எனில் ரஸ்யாவில் நிகழ்ந்த செர்னோபிள்ளும், அமெரிக்காவில் நிகழ்ந்த மூன்று மைல் தீவு விபத்தும் உள்ளன. இதில் செர்னோபிள் விபத்தில் 56 பேர் சொச்சம் இதுவரை இறந்துள்ளனர். கதிரியக்க பின் விளைவுகள் குறித்து முரன்பாடான தகவல்கள் உலாவுகின்றன. மூன்று மைல் தீவு விபத்தில் யாரையுமே கதிரியக்கம் பாதிக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆயினும் இந்த உலை மூடப்பட்டது. குறிப்பாக செர்னோபிள் விபத்தில் கதிரியக்க சாம்பல்களும், தூசுகளும் 1000மைல்களுக்கு அப்பால் ஐரோப்பிய நாடுகளில் காற்றில் பரவி கதிரியக்க பாதிப்பை ஏற்படுத்தும் அளவு இருந்தது. செர்னோபிள்லிருந்து சில கிமீ தள்ளியிருந்த பிரிபியாட் நகரமே மொத்தமாக காலி செய்யப்பட்டது. வெறும் கட்டங்களுடன் பேய் நகரமாக அது நிற்கிறது. செர்னோபிளில் வெடித்த அணு உலையை மறைக்கும் வகையில் ஒரு பெரிய சுவர் ஒன்று கட்டப்பட்டது. பிறகு அந்த வெடித்த அணு உலையில் அபாயகரமான கழிவுகள் இருப்பதை முன்னிட்டு தற்போது 105மீ உயரம், 200 மீ நீளத்தில், 257மீ அகலத்தில் ஒரு பெரிய வளைவு உலோக மூடி ஒன்றை தயாரித்து 2011ல் இந்த அணு உலையை மூடப் போகிறார்கள். இந்த இரண்டு விபத்துக்களும் அணு உலை குறித்த சர்வதேச கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு ஆற்றின. குறிப்பாக மேற்கு நாடுகள் புதிதாக அணு உலைகள் திறப்பதையே இத்துடன் நிறுத்திக் கொண்டன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனைத்துமே தம்மிடம் ஏற்கனவே உள்ள அணு உலைகளின் வீரியத்தை அதிகப்படுத்தி தமது மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டனர் #11, #12.&lt;br /&gt;&lt;br /&gt;அணுவின் நன்மை தீமைகள் குறித்து இங்கு பார்ப்பதன் முக்கியத்துவம் ஒன்று உள்ளது. விஞ்ஞானிகள் மனித குலத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காகவே அரிய பல கண்டுபிடிப்புகளை செய்கிறார்கள். ஆயினும் மனிதர்களிடையே இருக்கின்ற முரன்பாடுகளும், முதலாளித்துவ லாப வெறியும் அந்த கண்டுபிடிப்புகளை மனித குலத்திற்கே எதிராக பயன்படுத்தச் செய்து விடுகிறது. எய்ட்ஸை சோதனைச் சாலையில் உருவாக்கி தனது சொந்த நாட்டு மக்கள் மீதே பரிசோதித்த அமெரிக்க முதல் இன்று பரிசோதனைச் சாலை எலிகளாக அப்பாவி இந்தியா ஏழைகளை அரசு மருத்துவமனைகளில்(AIIMS Children killed in Medical trial) கொன்று குவிப்பது வரை இவர்களின் லாப வெறியும் போட்டி பொறாமையும் மனிதர்களை மதித்ததே இல்லை என்பதுதான் உண்மை. இங்கு கேள்வி நாம் ஒரு சமூகமாக அணு சக்தியை பயன்படுத்தும் பொறுப்பு உடையவர்களாக இருக்கிறோமா என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விபத்துக்கள் எல்லாமே மிக முன்னேறிய நாடுகளில் ஏற்பட்ட விபத்துக்கள். எடுத்துக்காட்டுக்கு செர்னோபிள் விபத்தில் வெளியேறிய மக்களுக்காக பல கோடிகளில் புதிய குடியிருப்புகளும், பள்ளிக் கூடங்களும், மருத்துவமனைகளும் இன்ன பிற நகர்ப்புற அத்தியாவசிய உள்கட்டுமானங்களும் புதிதாக கட்டியமைக்கப்பட்டன. உள்ளூரில் கிடைக்கும் மரத்தை எரித்தால் கதிரியக்கம் வரும் என்று நம்பியதால் இந்த இடங்களுக்கான எரிபொருள் தேவைக்காக 8,980 கிமீ நீளத்திற்க்கு புதிதாக எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டன. உள்ளிருந்தே சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்த சோசலிச கட்டுமானத்தைக் கொண்டு அன்றைய ரஸ்ய ஏகாதிபத்தியம் இவற்றை சமாளித்தது. இதே போன்ற விபத்து இந்தியாவில் ஏற்பட்டால் என்ன ஆகும்? இந்தியாவில் அணு உலைகள் மக்கள் வாழும் இடங்களின் அருகிலேதான் வைக்கப்பட்டுள்ளன- கல்பாக்கம் அணு உலை முதற் கொண்டு. இந்தியா தனது மக்களை எந்தளவிற்கு மதிக்கிறது என்பதற்க்கு ஆதாரங்கள் தேவையில்லை. அணு விபத்து அல்ல மாறாக ஒரு சாதரண ராசயண விபத்து இந்தியாவில் போபாலில் நிகழ்ந்தது. யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க உளவு கம்பேனி நடத்திய சோதனையின் விளைவாக ஆயிரக்கணக்கில்(அரசு சொல்வது - 3000 பேர், ஓரளவு நம்பத்தகுந்த விவரம் - 8000 பேர், ஒட்டு மொத்தமாக இது வரை கிட்டத்தட்ட 20,000 பேர் வரை) போபால் மக்கள் இறந்து போயினர். இன்று வரை இந்த அமெரிக்க கம்பேனியின் பொறுப்பாளர் எவனையும் கைது செய்யவோ தண்டனை கொடுக்கவோ இல்லை இந்த அரசு. இது வரை அந்த தொழிற்சாலை கழிவுகள் அகற்றப்படவில்லை. வாழும் வெடி குண்டாக அந்த தொழிற்சாலைக் கழிவுகள் நீர், நிலம், காற்றை நஞ்சாக்கி பல்வேறு உடல் கேடுகளை உருவாக்கி வருகிறது. இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணம் தரப்படவில்லை. விசயம் இப்படி இருக்க யூனியன் கார்பைடு மீது உள்ள வழக்கை விலக்கிக் கொள்ள தயார் என்று முழங்குகிறார் மன்மோகன் சிங். இதுதான் இந்திய அரசு தனது மக்களை மதிக்கும் விதம். சென்னை அருகில் உள்ள கல்பாக்கம் அணு உலை உலகின் மிக அபாயகரமான உலைகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது, அடிப்படை குளிர்விக்கும் வசதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இல்லாத அணு உலை அது என்பது இங்கு கவனிக்கத்தக்கது #13.&lt;br /&gt;&lt;br /&gt;அணு சக்தி என்பது மிக மிக அற்புதமானதொரு/அபாயகரமானதொரு சக்தி அதனை பயன்படுத்துவது என்பதற்க்கு குறைந்த பட்ச ஜனநாயக பண்பு கொண்ட சமூகத்தாலேயே முடியும் இல்லையேல் அது அபாயகரமானது. அணு சக்தி தயாரிப்பு தொழில் நுட்பம் குறித்து இப்போது பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அணு சக்தி உற்பத்தி தொழில் நுட்பம்: (Sensitive Nuclear Technology - SNT)&lt;br /&gt;&lt;br /&gt;அணு சக்தி தொழில் நுட்பத்தில் மூன்று தொழில் நுட்பங்கள் மிக முக்கியமானதாக சொல்லப்படுகின்றன(SNT).&lt;br /&gt;அவை முறையே #14,&lt;br /&gt;#1) யுரேனியம் செறிவூட்டுதல் - Uranium Enrichment,&lt;br /&gt;#2) மறு பயன்பாட்டுக்கான தயாரிப்பு - Nuclear Fuel Reprocessing,&lt;br /&gt;#3) கன நீர் தாயாரிப்பு - Heavy water manufacturing.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்று தொழில் நுட்பங்களை தெரிந்த கொண்டுள்ள நாடு அணுவிலிருந்து சக்தி எடுப்பதைப் பொறுத்தவரை சுயச் சார்பான நாடாகும் தகுதி படைத்தது. இந்த மூன்று தொழில் நுட்பம் தெரிந்த நாடு சொந்தமாக அணு குண்டுகளையும் தயாரிக்கலாம். எனவேதான் இந்த தொழில் நுட்பங்கள் பிற நாடுகளுக்கு பரவுவது ஏகாதிபத்தியங்களுக்கு பிடிப்பதில்லை. இப்பொழுது இந்த மூன்று தொழில் நுட்பங்கள் குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;யுரேனியம் செறிவூட்டுதல் எனப்படுவது இயற்கையில் U238 என்ற அணு எடை கொண்ட ஐசோடோப்புகள் அதிகம் இருக்குமாறு கிடைக்கும் கச்சா யுரேனியத்தை U235 என்ற அணு எடை கொண்ட யுரெனியம் ஐசோடோப்பு அதிகம் கொண்டதாக மாற்றுவதே யுரேனியம் செறிவூட்டுதல் எனப்படுகிறது. இதுதான் எரிப்பதற்க்கு ஏற்ற அணு எரிபொருள் வடிவம் ஆகும் #15.&lt;br /&gt;&lt;br /&gt;மறு பயன்பாட்டுக்கான தாயாரிப்பு (N Fuel Reprocessing) எனப்படுவது ஒரு முறை பயன்படுத்தப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரி பொருள் கலவையிலிருந்து புளூட்டோனியம், கச்சா யுரேனியம்(U238) போன்றவற்றை பிரித்தெடுப்பது ஆகும். இதனுடன் யுரெனியம் செறிவூட்டுதலில் கிடைக்கும் தரம் குறைந்த யுரேனிய எரிபொருளை(Depleted Uranium) கலந்து, இது மீண்டும் இன்னொரு முறை எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது குறை செறிவு யுரேனிய எரிபொருளுக்கு இணையான சக்தியை கொடுக்கும் தன்மை கொண்டது. உலகிலுள்ள பெரும்பாலான அணு சக்தி உலைகள் குறை செறிவு யுரேனியத்தில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டவையே (குறிப்பாக ரஸ்ய வகைகள்). இந்த மறுபயன்பாட்டு எரிபொருள் கலவையை ஆக்சைடு எரிபொருள் கலவை என்கிறார்கள்(Mixed Oxide Fuel) #16, #17. இந்த தொழில் நுட்பத்தின் மூலமும் அணு ஆயுதம் தயாரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கன நீர் தாயாரிப்பு குறித்து. சாதாரண நீர் என்பது H2O. கன நீர் என்பது D2O. இதில் D என்பது ஹைட்ரஜன் ஐசோடோப்பு. அணு உலையில் எரிக்கப்படும் அணுவிலிருந்து கிடைக்கும் வெப்பத்தால் கனநீர் ஆவியாக்கப்பட்டு அந்த அழுத்தமான ஆவி டர்பைனில் மோதவிடப்பட்டு அது ஒரு ஜெனெரேட்டரை இயக்கி மின்சாரம் தாயார் செய்யப்படுகிறது. கன நீர் தயாரிப்பு தொழில் நுட்பத்தின் மூலம் யுரெனியம் செறிவூட்டுதல் தொழில் நுட்பம் இன்றியே (புளுட்டோனியம்)அணு ஆயுதம் தயாரிக்க முடியும். #18.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன மூன்றில் ஏதேனும் ஒரு தொழில் நுட்பம் இருந்தாலே அதன் மூலம் அணு ஆயுதத்திற்க்கு தேவையான புளூட்டோனியமோ அல்லது செறிவூட்டப்பட்ட யுரேனியமோ எரிபொருளாக தயாரிக்க முடியும் என்பதால் இவற்றை மிக முக்கிய தொழில் நுட்பங்களாக வகைப்படுத்தியுள்ளனர் ஏகாதிபத்தியங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்று தொழில் நுட்பங்களுமே இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. நாம் யாரிடமும் யுரேனியம் சம்பந்தப்பட்ட இந்த தொழில் நுட்பங்களுக்காக கையேந்தி நிற்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உண்மை கடந்த 30 வருடங்களாக புதிய அணு உலைகளை மேற்கு நாடுகள் நிறுவாததால் அந்த அரதப் பழசான விற்காத தொழில்நுட்பங்களை, உலைகளை 3 லட்சம் கோடிக்கு நம் தலையில் கட்டுகிறார்கள் அமெரிக்க யுரெனிய உலை முதலாளிகள். இன்னொரு உண்மை இந்த தொழில் நுட்பங்களும் நம்மிடம் ஏற்கனவே இருக்கின்றன. இன்னொரு உண்மை இதே போல இந்தியா விஞ்ஞான வளர்ச்சியடைந்து சுயசார்பு அடைவது என்பதை, அமெரிக்கா எப்போதுமே திட்டமிட்டு முடக்கி வந்துள்ளது அல்லது இணைந்து வேலை செய்யலாம் என்று தொழில் நுட்பங்களை திருடி வந்துள்ளது. வெகு சுலபமான உதாரணங்கள் ராணுவ தளவாடங்கள், ராக்கெட், இலகு ரக விமான தயாரிப்புகளில் எப்பொழுதெல்லாம் இந்தியா அடுத்தக்கட்ட தொழில் நுட்ப வளர்ச்சியடைகிறதோ அப்பொழுது அந்த தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்கு வரவிடாமல் தடுத்து தன்னிடம் உள்ள இணையான-பழைய தொழில் நுட்பத்தை தலையில் கட்டும். ஈராக்கிற்கு ஒரு ஸ்கட் என்றால் இஸ்ரேலுக்கு ஒரு பேட்ரியாட். பேட்ரியாட்தான் சக்தி வாய்ந்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமெரிக்காவுடனான நமது இதுவரையான வணிக உறவுகளில் நம்மை அவர்கள் ஏமாற்றியதுதான் வரலாறாக உள்ளது. தராப்பூர் அணு மின் நிலையம், பசுமைப் புரட்சி, கோதுமையில் பார்த்தீனியச் செடி, செயற்கைகோள் மூலம் பார்த்து வளங்கள் இல்லை என்று பொய் சொன்னது, முதல் சமீபத்திய ராணுவ தளவாட வியாபாரங்கள் வரை. அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பது பற்றிய நமது இந்த கருத்து ஒரு அம்சம் மட்டுமே. இதுவும்கூட மையமான நமது எதிர்ப்பிற்க்கு காரணம் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர்த்து அணு சக்தி தாயாரிப்பில் தோரியத்தை எரிபொருளாக பயன்படுத்தும் தொழில் நுட்பம் வேறு உள்ளது #19. தோரியத்தை எரிபொருளாக பயன்படுத்தும் போது அது U233 என்ற யுரேனியம் ஐசோடோப்பாக மாறி பின்பு எரிகிறது. U233 என்பதும் U235யை போலவே அணு உடைப்பு பண்பு கொண்ட ஐசோடோப்பு ஆகும் (Fissile Isotope). எனவே யுரேனியத்தை பயன்படுத்தும் முன்பு அதனை U235 ஆக மாற்றுவது போல தோரியத்தை பயன்படுத்தும் போது செய்ய வேண்டியது இல்லை. அதாவது யுரேனியம் செறிவூட்டல் என்று தனியாக எதுவும் செய்யத் தேவையில்லை. மேலும் தோரியத்திலிருந்து உருவாகும் அணு கழிவு குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொழில்நுட்பத்திலும் இந்தியா சுயச்சார்பானதாகவே உள்ளது. தோரியத்தை அடிப்படை எரிபொருளாக பயன்படுத்தும் ஆராய்ச்சியில் மூன்று கட்டத் திட்டம் ஒன்றை இந்தியா கடைபிடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கன நீர் தயாரிப்பு தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதன் மூலமும், Reprocessing மூலமும் பூளூட்டோனியம் தயாரிப்பது, உயர் அழுத்த கன நீர் உலைகளை தொழில்நுட்பத்தில் சுயச்சார்படைவது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது கட்டமாக இந்த புளூட்டோனியத்தை, தோரியத்துடன் சேர்த்து யூரேனியம் U233ஆக மாற்றி அணு உலையில் எரிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவதாக இந்த வகை அணு உலையிலிருந்து தோரியத்தை நேரடியாக U233 ஆக மாற்றி பிறகு அதனை எரிபொருளாக பயன்படுத்துவது #20.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர்த்து இதே தோரியம் தொழில் நுட்பத்தில் இயங்கும் அணு உலைகளை இந்தியாவிற்க்கு விற்பதற்க்கும் அமெரிக்காவில் உள்ள சில கம்பேனிகள் தயாராக உள்ளன. ஆனால் அந்த கோரிக்கைகள் அமெரிக்க இந்திய அரசுகளால் ஊக்கப்படுத்தப்படவில்லை. அந்த தொழில் நுட்பம் கிடைத்தால் இந்தியா வெளிநாடுகளை நம்பியிராமல் தனது சொந்த தோரியம் இருப்பைக் கொண்டே அணு சக்தி தயாரிக்கலாம் (''Thorium to give India an edge'' எக்னாமிக் டைம்ஸ் - 4 Jan, 2007). ஆனால் அவ்வாறு நடந்தேறாமல் யுரேனியம் என்ற துருப்புச் சீட்டின் மூலம் மட்டுமே இந்த ஒப்பந்தம் நடந்தேற வேண்டும் என்பதில் அமெரிக்காவும், இந்திய அரசும் உறுதியாக நிற்கின்றன. ஏனேனில் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் அணு சக்தி கிடையாது. இது பின்னர் விரவாக பார்க்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் அமெரிக்க கம்பேனியின் தோரியம் தொழில் நுட்பமும் நமக்கு தேவையில்லை. நாமே இந்த துறையில் போதிய தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;செப்டம்பர் 1970லேயே டிராம்பேயில் உள்ள பாபா அணு சக்தி மையம் தோரியத்திலிருந்து U233 யுரேனியம் ஐசோடோப்பை வெற்றிகரமாக பிரித்தெடுத்தது #21.&lt;br /&gt;&lt;br /&gt;1995-ல் காக்ரபுர்-ல் இரண்டு அணு உலைகளில் குறை செறிவு யுரேனியத்திற்கு பதிலாக உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தோரியம் வெற்றிகரமாக உபயோகிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக ஆகஸ்டு 2005ல் மும்பை பாபா அணு ஆய்வு மையம் தோரியத்தை புளூட்டோனியத்துடன் வினையூட்டி U233 எரிபொருள் உருவாக்கி அணு சக்தி தயாரிக்கும 600MW திறன் கொண்ட இரண்டாம் கட்ட அணு உலையை வடிவமைத்து அறிவித்தனர் #22. உலகிலேயே மிக பாதுகாப்பான அணு உலையாக இதனை பெருமையுடன் அறிவித்தனர். ஏனேனில் யுரேனியம் செறிவூட்டல் தேவையில்லை. இரண்டு வருடத்திற்க்கு எரிபொருள் தேவையின்றி, எந்த தலையீட்டுக்கான அவசியமுமின்று சுலபமாக சக்தியை உருவாக்கும் இந்த அணு உலை. அணு உடைப்பு சுமுகமாக நடந்தேறுவதால் அணு உலையில் எரிபொருளை தாங்கி நிற்கும் Core எனப்படும் பகுதியின் வாழ்நாள் இரண்டு வருடங்களாக அதிகரிக்கிறது. எனவே அணுக் கழிவுகளை கையாள்வதும் யுரேனியம் அணு உலைகள் போன்று அடிக்கடி இல்லாமல் இலகுவானதாக உள்ளது. இதிலிருந்து அணுக் கழிவுகளும் குறைவாக வருகிறது. வடிவமைப்பில் இருந்த இந்த அணு உலை 2008ல் கல்பாக்கத்தில் நிறுவப்பட்டு கடைசி கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இது தோரியம் அணு உலையை நோக்கிய இரண்டாவது கட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோரியம் தொழில் நுட்பத்தின் கடைசி கட்டமாகிய மூன்றாவது கட்டம் வரை இந்தியா வெற்றி கண்டுள்ளது(AHWR). AHWR வகையில் 75% தோரியம் எரிபொருளாக இருக்கும். இது தவிர்த்து மூன்றாவது கட்டத்தில் முற்றிலும் தோரியத்தை மட்டுமே பயன்படுத்தும் ADS (Accelerator Driven Systems) உலைகளை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் சோதனை அளவில் வெற்றி பெற்றுள்ளது. கல்பாக்கத்தில் காமினி(KAMINI)-கல்பாக்கம் மினி என்ற பெயரில் 30KW உலை நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.300MWல் புதிய தோரிய அணு உலை நிறுவும் வேலைகள் நடந்து வருகின்றன #23.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது கட்டத்தில் உள்ள ஒரு பிரச்சினை தோரியத்துடன் சேர்ந்து புளூட்டோனியத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. புளூட்டோனியம் நமக்கு இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒன்று வெளிநாடுகளிடமிருந்து வாங்குவது. மற்றொன்று Reprocessing மூலமும், கன நீர் தயாரிப்பு தொழில்நுட்பத்தின் மூலமும் புளுட்டோனியம் தயாரிப்பது. இதில் முதல் வகையை நாம் நம்ப இயலாது. மேல்நிலை வல்லரசுகள் நமது சுயசார்பை ஒழித்துக்கட்ட வசதியாக புளூட்டோனியம் கிடைப்பதை தடுக்கவே செய்வார்கள். ஆனால் நம்மிடம் ஏற்கனவே உள்ள Reprocessing தொழில்நுட்பத்தின் மூலமும், கன நீர் தொழில் நுட்பத்தின் மூலமும் நமக்கு தேவையான புளூட்டோனியத்தை நாமே தயாரித்துக் கொள்ளலாம் (இதுவும் கூட மூன்றாவது கட்டமாகிய ADS முழுமையாக வியாபார பயன்பாட்டுக்கு வரும் வரைதான். அதற்க்கு பிறகு இந்த பிரச்சினைகளும் கிடையாது).&lt;br /&gt;&lt;br /&gt;இதன் அர்த்தம் SNT எனப்படும் அணு தொழில்நுட்பங்களில் இந்த இரண்டு தொழில்நுட்பங்கள் இந்தியா தனது அணு விஞ்ஞானத்தை அடுத்தக்கட்டத்திற்க்கு சுதந்திரமாக வளர்த்தெடுப்பதற்க்கு இன்றியமையாததாக உள்ளது என்பதே ஆகும். தற்போதைய 123 ஒப்பந்தம் இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதற்க்கும், வளர்த்தெடுப்பதற்க்கும் ஆப்பு அடிப்பதாக இருப்பதாலேயே விஞ்ஞானிகள் இதனை எதிர்க்கிறார்கள் #24. இப்பொழுது இந்தியாவில் அணு தொழில் நுட்பம் வளர்ந்த பாதையையும், இந்தியாவின் மின்சாரத் தேவை குறித்தும், இந்தியாவில் உள்ள யுரேனியம், தோரியம் எரிபொருள்களின் எதிர்காலம் குறித்தும் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் அணு தொழில் நுட்பத்தின் வளர்ச்சிப் பாதை, எரிசக்தி தேவை, எரிபொருள் இன்னபிற:&lt;br /&gt;&lt;br /&gt;22 ஜனவரி 1965-ல் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி புளூட்டோனியம் ரிபுரோசசிங் ஆலையை டிராம்பேவில் திறந்து வைத்தார். அமெரிக்காவின் கருத்தில் அப்போதைய இந்தியா ஒரு வருடத்திற்க்கு 100 அணு குண்டுகள் தாயாரிக்க தேவையான புளூட்டோனியம் ரிபுரோசஸ் செய்யத் தேவையானவற்றை கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செப்டம்பர் 1970லேயே டிராம்பேயில் உள்ள பாபா அணு சக்தி மையம் தோரியத்திலிருந்து U233 யுரேனியம் ஐசோடோப்பை வெற்றிகரமாக பிரித்தெடுத்தது #25.&lt;br /&gt;&lt;br /&gt;22 May 1972-ல் பூர்ணிமா-I ஆய்வு உலை பாபா அணு சக்தி மையத்தில் நிர்மாணிக்கப்பட்டது. முற்றிலும் பாபா அணு சக்தி மையத்தின் இந்திய விஞ்ஞானிகளாலேயே தயாரிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது. 21 கிலோ புளூட்டோனியத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது இந்த உலை #26.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காலகட்டத்தில் அணு ஆயுதம் குறித்த இந்தியாவின் கருத்து அமைதிக்காக அணு ஆயுதம் பரிசோதனை செய்வது என்ற நிலையை அடைந்தது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடமிருந்து அணு உதவிகளை பெற்று வந்தது. ஆயினும் வெளிப்படையாகவே அணு வெடிப்பு சோதனைக்கு தயாராகி வருவதை அறிவித்தே வந்துள்ளது இந்தியா. பாராளுமன்றத்திலும் இவை குறித்து அடிக்கடி மயிர் பிளக்க விவாதிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1974-ல் IAEAன் நிர்வாகக் குழுவில் இந்தியா உறுப்பினராக தொடர்ந்து 18வது வருடமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. காரணம் அணு சக்தி தொழில் நுட்பம் உள்ள உலகின் 9 நாடுகளில் ஒன்றாக அன்று இந்தியா இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;18 மே 1974-ல் இந்தியா பொக்ரானில் அணு குண்டு வெடிப்பு சோதனை செய்கிறது. அணு இணைப்பு(Fusion) தொழில் நுட்பத்திற்க்கான ஆய்வுகளையும் இந்திய விஞ்ஞானிகள் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்க்கு பிறகும் கூட ஜூன் 1974ல் தராப்பூர் அணு மின் நிலையத்திற்க்கு யுரேனியம் அனுப்புகிறது அமெரிக்கா. இந்தியாவின் அணு குண்டு சோதனை எந்த ஒப்பந்தத்தையும்(1963 ஒப்பந்தம்) மீறிவிடவில்லை என்று அமெரிக்க கூறியது #27.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் கூட செப்டம்பர் 1974ல் இந்திய அணு சக்தி கமிசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியது அமெரிக்கா. இது அடுத்தக்கட்ட யுரேனியம் அனுப்புவதற்க்கு புதிய உறுதிமொழிகளையும், பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் கோருவதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;25 ஆகஸ்டு 1975-லோ இன்னும் ஒரு படி மேலே போய் அமெரிக்க உளவு பிரிவினர் பின் வரும் அறிக்கை அளித்தனர் அதாவது, இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து அணு குண்டு தயாரிக்க இந்தியாவின் உதவியை வேண்டி இருப்பதாக அறிக்கை அளித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தீடிரென்று ஜனவரி 31 1976-ல் தாராப்பூர் அணு உலையில் கதிரியக்க கசிவு அபாயம் இருப்பதாக சொல்லும் GE(General Electricals என்ற ரத்தவெறி கம்பேனி)யின் குற்றச்சாட்டை அமெரிக்க செனட் கமிட்டி ஆய்வு செய்ய இருப்பதாக அமெரிக்க செனட்டர் ஜான் க்லன் கூறினார். அமெரிக்க அணு கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த டாக்டர் ஸ்டீவன் ஹனயுர் தராப்பூர் அணு உலை பெரிய அபாயாத்தை எதிர்நோக்கி இருப்பதாக கூறினார். இத்தனைக்கும் இந்த அணு உலையில் புதிய எரிபொருள் நிரப்புவதும் அதனை ஒட்டி பராமரிப்பு பணிகள் முழுவதும் சில வாரங்களுக்கு முன்புதான் செய்து முடிக்கப்பட்டிருந்தன. இந்த புதிய எரிபொருள் கூட அணு குண்டு வெடிப்பிற்கு பிறகு அமெரிக்கா இந்தியாவிற்கு அனுப்பியதுதான். விசயம் அணு வெடிப்பு அல்ல மாறாக எகிப்து உடனான இந்திய அணு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டதே பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் இந்தியாவின் உறுதிமொழியை ஒட்டி கனடா மீண்டும் உதவிகள் செய்ய ஒத்துக் கொண்டது(பிறகு உடனடியாக பின்வாங்கியும் விட்டது). ஒப்பந்தத்தை இந்தியா மீறிய போதும் கூட வலியுறுத்தி கேட்ட போது கனடா ஒத்துக் கொண்டது. ஆனால் போட்டுக் கொண்ட 1963 ஒப்பந்தத்திற்க்கு சம்பந்தமில்லாமல் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தனக்கு விரோதமாக இருப்பதாலேயே இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்தது அமெரிக்கா. ஏப்ரல் 1974-ல் NSG வழிகாட்டுதல்களுக்கு கட்டுப்படுவதாக எழுதிக் கொடுக்கச் சொல்லி இந்தியாவிற்க்கு புதிய நிபந்தனைகளை விதித்து மிரட்டுகிறது அமெரிக்கா. குறிப்பாக உயர் அணு தொழில்நுட்பங்களை இந்தியா ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துவதுதான் அமெரிக்காவின் இந்த நெருக்குதலுக்கு காரணம். கடைசியில் 1963 ஒப்பந்தத்தை தூக்கி குப்பையில் போட்டு மூடியது அமெரிக்கா. காரணம் அணு குண்டு வெடிப்பு என்று அமெரிக்காவும் சொல்லவில்லை. உண்மையும் அதுவல்ல. தராப்பூர் ஆலை தனக்கான எரிபொருள் தேவைக்கு மாற்று வழிகளை வேண்டி நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் வேறு எங்குமே இல்லாத புதிய தொழில் நுட்பத்தில் ரிபுரோசசிங் செய்யும் ஒரு ஆலையை 1974-ல் ஹைதராபாத்தில் நிறுவப்பட்டது. இதனிடையா இந்தியா ஈரான், எகிப்து, லிபியா போன்ற நாடுகளுக்கு அணு சக்தி தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்க்கான வேலைகளில் இறங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிற்கு அணு எரிபொருள் தொடர்ந்து வேண்டுமென்றால் முழு அணு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்றும், ரிபுரோசசிங் தொழில்நுட்பத்தை தலைமுழுக வேண்டுமென்றும் அமெரிக்கா நிர்பந்தித்தது. இந்த அடிப்படையில் அணு எரிபொருளை அனுப்பியும் வைத்தது. ரிபுசோசசிங் தொழில் நுட்பத்தையும், கன நீர் தயாரிப்பு தொழில் நுட்பத்தையும் விட்டொழித்தால் எல்லா காலத்திற்க்கும் இந்தியா மேல் நிலை வல்லரசுகளிடம் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டியதுதான். ஏனேனில் நமது அணு எரிபொருள் சுயச்சார்பை உறுதிப் படுத்தும் துருப்புச் சீட்டு இந்த இரண்டு தொழில் நுட்பங்கள்தான் என்பதை நாம் மேலே ஏற்கனவே விளக்கியிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் இந்த காலகட்டம் முழுவதும் தராப்பூர் அணு உலைக்கு தேவையான யுரேனியத்தை அமெரிக்க அனுப்பியே வந்தது(தாமதமாகவேனும்). காரணம் வேறொன்றுமில்லை, இந்தியாவிடமே இருக்கும் யுரேனியம் 1980-ல் கண்டுபிடிக்கப்பட்டதும். அதனை செறிவூட்டுவதற்க்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளை இந்திய விஞ்ஞானிகள் 1980களில் உடனடியாகவே தொடங்கிவிட்டதுமே காரணம். அமெரிக்கா 1980 மத்தியில் யுரெனியம் அனுப்புவதற்க்கு முரண்டு பிடித்த வேளையில் இந்தியா தான் சொந்தமாக தாயரித்த யுரேனியத்தின்(உத்தரபிரதேசத்திலிருந்து) மூலமே அணு உலைகளை நடத்தும் வேலைகள் தொடங்கிவிட்டது. 1981-ல் ரீகன் அரசு தராப்பூர் அணு உலைக்கு யுரேனியம் அனுப்புவதை நிறுத்திக் கொள்வதற்க்கு அடிப்படையாக இருந்த 1963 ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. தராப்பூர் அணு உலைக்கு தேவையான உதிரி பாகங்கள் வழங்குவதற்க்கு GE கம்பேனிக்கு அமெரிக்க அரசு அனுமதியளிக்க மறுத்துவிட்டது. ஒப்பந்தப்படி அனுப்ப வேண்டிய 19 டன் யுரேனியத்தை கடைசி வரை அனுப்பாமலும் ஏமாற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே இந்திய விஞ்ஞானிகள் ரிபுரோசசிங் தொழில் நுட்பம், கன நீர் தொழில் நுட்பம், யுரேனியம் செறிவூட்டுதல் தொழில் நுட்பங்களையும், அவற்றை நடைமுறையில் பயன்படுத்துவதற்க்கான பல்வேறு அணுக் கூடங்களையும் நாடு முழுவதும் கட்டியிருந்தனர். யுரேனியம் வளங்களும், தோரிய வளமும் இந்தியாவில் கிடைக்கும் இடங்களும் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. பிற நாடுகளுடன் அணு தொழில்நுட்ப வியாபாரம் செய்யும் அளவு இந்தியா வளர்ந்திருந்தது. இந்த காலகட்டத்தில் 1963 ஒப்பந்தத்தின் படி இந்தியாவுக்கு அமெரிக்க அனுப்பியிருந்த 250டன் எரிபொருள் பயன்படுத்தப்பட்டு அது மீண்டும் ரிபுரோசசிங்குக்கு செய்து புளூட்டோனியம் எடுப்பதற்க்கு தயாராக இருந்தது. தாராப்பூர் அணு உலைக்கு தேவையான எரிபொருளை அமெரிக்கா அனுப்பாததை இந்திய விஞ்ஞானிகள் சமாளித்துவிட்டனர். ஆனால் யுரெனியம் அணு உலைகளில் அடிக்கடி தேய்ந்து போகும் உதிரி பாகங்களை அமெரிக்கா அனுப்பாமால் கழுத்தறுத்தைத்தான் இந்திய விஞ்ஞானிகளால் சமாளிக்க இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1983ல் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் முதல் உலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் இந்திரா காந்தி. இது 235MW திறன் கொண்ட அணு உலை இது.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ 2008 ஜூன் 25ல் வந்த செய்தி என்ன சொல்கிறது என்றால் இந்தியாவிலேயே தாயாரான பாதுகாப்பு குழாய் (Safety Vessel) கல்பாக்கம் அணு உலையில் நிறுவியுள்ளனர். இந்த குழாயை தயாரித்ததன் மூலம் அதி வேக பெருக்கி அணு உலைகள்(Fast Breeder) தொழில் நுட்பத்தில் முன்னேறிய தொழில்நுட்பம் கொண்ட வெகு சொற்பமான நாடுகளின் வரிசையில் நாமும் இருக்கிறோம் இப்போது #28.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்தியிலேயே உள்ள வேறு சில விசயங்கள், முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 500MW மின் திறன் கொண்ட அதி வேக பெருக்கி அணு உலை கல்பாக்கத்தில் நிறுவப்பட்டு கடைசி கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. 2005-ல் மும்பையில் பெருமையுடன் அறிவிக்கப்பட்ட தோரியம் இரண்டாம் கட்ட அணு உலைதான் இது. இது போல இன்னும் பல அணு உலைகளை நிறுவும் வேலையில் இந்திய அணு சக்தி கழகம்(NPCIL) உள்ளது. மேலும் உலகிலுள்ள முன்னேறிய தொழில் நுட்பங்களில் ஒன்றாக இந்தியாவிடம் உள்ள அணு சக்தி தொழில்நுட்பம் உள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதி வேக பெருக்கி அணு உலைகள்(FBR) ஏற்னகவே குறிப்பிடப்பட்ட தோரியம் தொழில்நுட்பத்தின் இரண்டாவது கட்டத்தை உபயோகப்படுத்துகின்றன. மூன்றாவது கட்டத்திற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. நம்மிடம் தோரியம், செறிவூட்டப்பட்ட யுரேனியம், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எரிபொருளிலிருந்து தயாரிக்கப்படும் ஆக்ஸைடு கலவை எரிபொருள் இவையணைத்தையும் உபயோகித்து மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகள் பயன்பாட்டில் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா சர்வதேச அணு உதவி கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டதால் சொந்தமாகாவே அணு சக்தி உற்பத்தி செய்தது. இதனால் உலகிலேயே வீரியம் குறைவான அணு உலைகளைக் கொண்ட நாடாக இந்தியா 1990களில் இருந்தது. ஆயினும் இந்த தொழில்நுட்ப தடங்களை கடந்து 2002ல் 85% வீரியம் கொண்டவையாக தனது அணு உலைகளை மாற்றிக் காட்டியது. இந்த அணு உலைகளின் வீரியம் இன்னும் அதிகப்படுத்தப்படும். பொதுவாகவே இது போலத்தான் உலகம் முழுவதும் செய்யப்படுகிறது. அணு உலைகளின் எண்ணிக்கையை கூட்டமாலேயே அவற்றின் வீரியத்தை கூட்டியே தமது அணு மின் உற்பத்தை அளவை மேற்கு நாடுகள் கடந்த 30 வருடங்களாக அதிகரித்து வந்துள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;தாராப்பூரில் உள்ள 3வது, 4வது உலைகள் இந்திய அணு சக்தி கழகத்தால்(NPCIL) இந்தியவிலேயே தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டது. இது தவிர்த்து Kaigaவில் உள்ள அணு உலைகள், ராவாபாட்டாவில் உள்ள சில உலைகள் இவையும் NPCILஆல் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டன. இவையெல்லாம் தற்போது இயங்கிக் கொண்டுள்ளவை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே கால வரிசைப்படி கொடுத்துள்ள விவரங்கள் நமக்கு காட்டுவது அணு விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை நாம் சுயச்சார்பானவர்களாக மாறியதுடன், அதனை ஏற்றுமதி செய்யும் அளவு தொழில்நுட்பம் தெரிந்த நாடாக நாம் மாறிய அடுத்த நிமிசத்திலிருந்து அமெரிக்கா நமக்கு தொந்தரவு கொடுக்கத் தொடங்கிவிட்டது என்பதுதான். அன்றிலிருந்து இந்தியாவை சர்வதேச ஒப்பந்தங்களிலும், NPTயிலும் கையெழுத்திடச் சொல்லி தொடர்ந்து நிர்ப்பந்தித்து வந்துள்ளது அமெரிக்கா. 1963-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை ஒருதலை பட்சமாக தூக்கி குப்பையில் கடாசிவிட்டு தனது அனைத்துவிதமான தந்திரங்களையும் பயன்படுத்தி வந்துள்ளது அமெரிக்கா. யுரேனிய அணு உலைகளில் அணு உடைப்பு தோரியத்தில் நடப்பது போல சுமூகமாக நடப்பதில்லை எனவே யுரெனிய அணு உலைகளின் உதிரிபாகங்கள் அடிக்கடி மாற்றப் பட வேண்டியுள்ளது. இவர்களை நம்பி நாம் இங்கு கட்டிய தராப்பூர் யுரேனியம் அணு உலைக்கு தேவையான உதிரி பாகங்களை தராமல் முடக்கியது அமெரிக்கா. இதனால் அந்த அணு உலை பல காலத்திற்க்கு தனது பாதி வீரியத்திலேயே இயங்கியது. தற்போது இருப்பில் உள்ள யுரேனியமும் முடிந்துவிட்டதால் இயங்காமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்நாட்டு யுரெனியத்தின் மூலம் இயங்கி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலேயே முன்னேறிய அணு சக்தி தொழில் நுட்பம் கொண்ட நாடாக இந்தியா இருந்தும்(குறிப்பாக தோரியம் தொழில்நுட்பம்) இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்க்கு, இந்த அணு ஒப்பந்தத்தை வேறு வழியே இல்லை என்று நியாயப்படுத்துவதற்க்கு பயன்படும் முக்கியமான வாதம் இந்தியாவின் யுரெனியம் இருப்பு போதாமான அளவு இல்லை என்கிற வாதம். தொழில் நுட்பம் சிறப்பாக இருந்தாலும் மூல வளம் இல்லையே என்ற இந்த வாதம் குறித்து இந்த பகுதி பதில் சொல்லும். இந்தியாவில் உள்ள யுரேனியத்தின் அளவு எவ்வளவு? மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள உலைகள் எல்லாமே தனது மொத்த திறனில் பாதியளவே ஓடுகின்றன. காரணம் யுரெனியம் தட்டுப்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை பயன்படுத்த தகுதியானது என்று உறுதிப்படுத்தப்பட்ட யுரேனியத்தின் அளவு 61,000 டன்னிலிருந்து 90,000 டன்வரை இருக்கிறது #29 பக்கம் 23. தோரியம் 2,15,000 டன்னிலிருந்து 3,60,000 டன் வரை இருக்கிறது #30. தோரியம் உலகிலேயே நம்மிடம்தான் அதிகம் உள்ளது என்றும், நாம் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த நிலையிலிருக்கிறோம் என்றும், நாம் உலகில் நான்காவது பெரிய தோரியம் வளம் உள்ள நாடு என்றும் பல்வேறு புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. ஆனால் இவையணைத்தும் பிற நாடுகளின் தோரியம் அளவில் ஏற்படும் முரன்பட்ட தகவலினாலேயே வேறுபடுகின்றன. இந்தியாவின் தோரியம் இருப்பைப் பொறுத்தவரை இவர்கள் அனைவரும் ஒரே அளவையே சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"The potential of Nuclear resources is about 93% of the total potential based on the proven reserves of all the energy resources in the country" - இப்படி சொல்கிறது NPCILன் 2006-07க்கான ஆண்டு அறிக்கை. இதே ஆண்டறிக்கை 2006ல் இயக்கத்தில் இருந்த அணு உலைகளின் உண்மையான திறனாக 58478MW என்று குறிப்பிட்டுள்ளது #31 பக்கம் 56. இதன் அர்த்தம் இந்தளவுக்கு அதிகபட்சம் அவை அணு சக்தி உருவாக்கும் திறனுள்ளவை. அதாவது இதுவரை நிர்மாணிக்கப்பட்ட அணு உலைகளின் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொண்டு சென்றாலே போதும், புதிதாக நிர்மானிக்கப்படும் அணு உலைகளை தோரியம் அடிப்படையிலானதாக கூட நாம் செய்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது 4120MWதான் அணு சக்தியிலிருந்து பெறப்படுகிறது. இது மொத்த உற்பத்தியில் 3% கொஞ்சம் கூட வரும். மேலும் 2660MWத்திற்க்கான அணு உலைகளை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர்த்து 6800MW உற்பத்தி செய்யும் அளவு அணு உலைகளை கட்டுவதற்க்கான வேலைகள் நடந்து வருகின்றன #32. இவையணைத்திற்க்கும், அதாவது 10,000MW உற்பத்தி செய்ய 50 வருடத்திற்க்கு தேவையான யுரேனியத்தை இந்தியாவிலிருந்தே எடுத்துக் கொள்ளலாம். எந்தவொரு வெளிநாட்டையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று 2005ல் இந்திய அணு சக்தி கழகத்தின் தலைவர் S.K. ஜெயின் கூறுகிறார் ('We can meet India's electricity demands' - Frontline Mar 12-25, 2005 ). 2020-ல் அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் மூலம் நாம் உற்பத்தி செய்யவுள்ள அணு சக்தி 6%தான். இதே அளவை அவர்களின் உதவியின்றியே அடைய முடியும் என்று சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிசினஸ் இந்தியாவில் மார்ச் 2006ல் ஒரு விரிவான கட்டுரை வந்திருந்தது "What can't we Produce? - Business India, March 12, 2006 பக்கம் 40" #33. இதில் அணு சக்தி கமிசனின் தலைவர் அனில் ககோதரிடம் இந்திய அமெரிக்க அணு ஒத்துழைப்பின் பயன் குறித்து கேட்ட போது பின்வருமாறு கூறுகிறார்: "இந்தியா தனது மூன்று கட்ட அணு திட்டத்தில் முதல் கட்டத்தில் 10,000 MW அணு சக்தியை இந்தியாவிலேயே உள்ள யுரேனியத்தைக் கொண்டு உற்பத்தி செய்யும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதை விட பத்து மடங்கு உற்பத்தி செய்யப்படவுள்ள அடுத்தடுத்த கட்டங்களுக்கோ உபரியாக யுரேனியம் எதுவும் தேவையில்லை. இந்த ஒப்பந்தத்தை பொறுத்தவரை மலிவு விலை யுரேனியம் அதிகப்படியான பயன்பாட்டுக்கு கிடைக்கும் வாய்ப்பு மட்டுமே இந்தியா பார்க்கக் கூடியதாக இருக்கிறது." இந்த காலகட்டத்தில் அணு ஒப்பந்தம் உயிராதாரமானது என்பதை இவர்கள் எங்குமே வலியுறுத்தவில்லை. மாறாக நமது சொந்த திறனில் சாதிக்க முடியும் என்பதை பல்வேறு கட்டங்களில் இவர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் இந்தியாவிற்கு யுரேனியம் கிடைப்பதற்க்கும், பரஸ்பரம் ஏற்றுமதி இறக்குமதிக்கு உதவும் ஒரு ஓப்பந்தமாக இருப்பதையே இவர்கள் வலியுறுத்துகிறார்கள். மாறாக அது அப்படியில்லை என்பதுடன் அதன் உண்மையான நோக்கம் பிரதானமாக யுரேனியமோ, அணுவோ சம்பந்தப்பட்டதாகவோ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகப்படியான மின்சாரம் எதிர்காலத்தில் தேவைப்படுகிறது என்கிறார்கள். இது யாருக்கான பொருளாதாரம் என்ற கேள்வியை இப்போதைக்கு தவிர்த்துக் கொண்டு பார்த்தால் கூட இந்தியாவின் எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்வதற்க்கு அணு சக்தி தவிர்த்து இந்தியாவின் நீர் மின்சக்தியும், காற்று மின்சக்தியும், சூரிய சக்தியும், இயற்கை வாயுவும் பெரிய அளவில் பயன்படுத்தப்பாடாமலேயே உள்ளது. இவற்றிலிருந்து மிக அதிகப்படியாகவே மின்சாரம் எடுக்க முடியும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கட்டுரையின் விரிவு அஞ்சி அவற்றை இங்கு கொடுக்காமல் தவிர்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு நாம் இது வரை பார்த்த விசயங்களை முடிவாக பட்டியலிட்டுக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;#1) புதிய அணு உற்பத்திக் கூடங்கள் எதையும் கடந்த 30 வருடங்களில் மேற்கு நாடுகள் கட்டவில்லை விற்க்காத பழைய சரக்கை நம் தலையில் கட்டுகிறார்கள்.&lt;br /&gt;#2) உலகிலேயே அதிகமான யுரேனியம் உள்ள நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் மின்சாரம் தயாரிக்க ஒரு அணு உலைகூட கிடையாது.&lt;br /&gt;#3) யுரேனியம் அடிப்படையிலான அதி அழுத்த கன நீர் உலைகள் ஏற்கனவே இருப்பவையே போதும், அதற்கு அடுத்தகட்ட தொழில்நுட்பங்களை விரிவாக நாம் நிறுவ வேண்டிய நிலையில் தற்போது உள்ளோம் எனும் போது அமெரிக்காவிடமிருந்து பழைய தொழில் நுட்பத்தை வாங்குவது நமது சுயசார்பை ஒழிக்கும் தந்திரம். அதாவது நம்மிடம் ஏற்கனவே இருக்கும் காலவதியான விசயத்தையே நாம் திரும்ப வாங்குகிறோம் என்பதுதான். அதுவும் 3லட்சம் கோடிக்கு எனும் போது யார் முட்டாள் என்பதை புரிந்து கொள்ளலாம். நமக்கு இனிமேலும் தேவையில்லாத தொழில்நுட்பத்தை வாங்குவதன் மூலம் நமது அணு சக்தி தேவையை அடுத்தக்கட்டத்திற்கு வளர்க்காமல் முடக்குகிறோம், மேலும் நாம் அவர்களை நம்பியிருக்குமாறு செய்துவிடுகிறோம்.&lt;br /&gt;#4) அணு சம்பந்தப்பட்ட தொழில் நுட்பம் அணைத்தும் நம்மிடமே உள்ளது. கனநீர் உற்பத்தியிலும், அணு தொழில்நுட்பத்திலும் நாம் ஏற்றுமதி செய்யும் நாடு. இந்த தொழில்நுட்பங்களை நாம் இன்னும் வீரியமாக வளர்த்தெடுக்க இந்த 3 லட்சம் கோடியை பயன்படுத்தலாம்.&lt;br /&gt;#5) எதிர்கால, நிகழ்கால மின்சாரத் தேவைகளை அமெரிக்க ஒப்பந்த்தை நம்பியிராமலேயே இந்திய அணு சக்தி திட்டங்கள் மூலமே சாதிக்க முடியும். இது தவிர்த்து பிற மூல வளங்களை முழுமையாக பயன்படுத்தும் திட்டங்களை நாம் ஆழமாக பரிசீலிக்க வேண்டும்.&lt;br /&gt;#6) யுரேனியம், தோரியம், புளுட்டோனியம் போன்ற அடிப்படை அணு எரிபொருட்களுக்கு நாம் பிறரை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இல்லை. நம்மிடம் இருப்பதை வைத்தே சமாளிக்க இயலும். ஒருவேளை நமது எதிர்காலத்திற்கு ஆபத்தில்லாத வகையில் யுரெனியம் கிடைத்தால் கொஞ்சம் வசதி அவ்வளவுதான்.&lt;br /&gt;#7) நிலக்கரி, இயற்கை வாயு உள்ளிட்டவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்க வசதியாக இவற்றை அதிகமாக இறக்குமதி செய்யும் முயற்சிகளில் இந்தியா இறங்க வேண்டும். நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவை மேற்கு நாடுகள் மட்டுமே பயன்படுத்துவதற்க்கான மூல வளங்கள் அல்ல. நாமும் பயன்படுத்தலாம்.&lt;br /&gt;#8) ஏற்கனவே அமெரிக்க இந்தியாவை தனக்கு கீழ்படிய வைக்க 1963 அணு ஒப்பந்தத்தை வைத்து ப்ளாக்மெயில் செய்து மிரட்டியுள்ளது. இந்தியா அடிபணிய மறுத்த பொழுது தாராப்பூர் அணு உலையை கை கழுவி நமக்கு நஸ்டம் ஏற்படுத்தியுள்ளது. இன்னிலையில் 3 லட்சம் கோடி முதலீடு செய்து பிறகு நமது காலை வாரிவிட்டால் நமக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. மேலும் இதனை ஒட்டி போடப்படுகிற சர்வதேச ஒப்பந்தகளிலிருந்து நாம் எந்த காலத்திலும் விலக முடியாது. ஏனேனில் பிற சர்வதேச ஒப்பந்தங்களை 123 ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரை பார்த்துள்ள விசயங்கள் எல்லாமே இந்த ஒப்பந்தம் அணு சக்தி, தொழில்நுட்பம், யுரெனியம் சம்பந்தப்பட்டது என்பதை கருத்திக் கொண்டு ஆய்வு செய்தது. இதன் முடிவுகள் அணு ஒப்பந்தம் ஒரு மொள்ளமாறித்தனமான ஒப்பந்தம் என்பதைத்தான் தெளிவாகச் சொல்கின்றன. ஆனால் இன்னொரு பெரிய உண்மை இந்த ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவின் அல்லக்கை தேசங்களில் ஒன்றாக மாற்றி அமெரிக்காவின் உலகாளாவிய ரவுடித்தனங்களுக்கு அடியாள் வேலை செய்ய இந்தியாவைச் சேர்த்துக் கொள்வதையே பிரதான நோக்கமாக கொண்டுள்ளது என்ற அம்சம். இது குறித்து அடுத்து பார்க்க இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அசுரன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி http://poar-parai.blogspot.com/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-8420697421283766974?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/8420697421283766974'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/8420697421283766974'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2008/09/i.html' title='அணு ஒப்பந்தம் குறித்து... பாகம் I'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-6558932364009256556</id><published>2008-08-09T08:53:00.000-07:00</published><updated>2008-08-11T04:56:46.889-07:00</updated><title type='text'>அடிமையாக்குகிறது அணுசக்தி ஒப்பந்தம் ! அரங்கக் கூட்டம்!! ஆக்ஸ்ட் 14,2008</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_lh78FA00hMw/SKAo2owMr4I/AAAAAAAAABc/DS9BuV5dccA/s1600-h/aug+1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5233227686122139522" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_lh78FA00hMw/SKAo2owMr4I/AAAAAAAAABc/DS9BuV5dccA/s320/aug+1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_lh78FA00hMw/SKAo2_7FV1I/AAAAAAAAABk/3DXZnbH3tEw/s1600-h/aug+2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5233227692341811026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_lh78FA00hMw/SKAo2_7FV1I/AAAAAAAAABk/3DXZnbH3tEw/s320/aug+2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;நன்றி &lt;a href="http://rsyf.blogspot.com/"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-6558932364009256556?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/6558932364009256556'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/6558932364009256556'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2008/08/142008.html' title='அடிமையாக்குகிறது அணுசக்தி ஒப்பந்தம் ! அரங்கக் கூட்டம்!! ஆக்ஸ்ட் 14,2008'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_lh78FA00hMw/SKAo2owMr4I/AAAAAAAAABc/DS9BuV5dccA/s72-c/aug+1.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-1116116673137287134</id><published>2008-08-02T07:35:00.000-07:00</published><updated>2008-08-02T07:39:36.435-07:00</updated><title type='text'>அணுசக்தி ஒப்பந்தம்: அம்பலமானது நாடாளுமன்ற போலி ஜனநாயகம்! தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சார இயக்கம்!</title><content type='html'>&lt;a href="http://bp0.blogger.com/_lh78FA00hMw/SJRxlnkUCYI/AAAAAAAAABM/kyz2Eu8Sscs/s1600-h/a1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5229929958374377858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_lh78FA00hMw/SJRxlnkUCYI/AAAAAAAAABM/kyz2Eu8Sscs/s400/a1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_lh78FA00hMw/SJRxl6CYLsI/AAAAAAAAABU/5ocLxtbAoB8/s1600-h/a2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5229929963332316866" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_lh78FA00hMw/SJRxl6CYLsI/AAAAAAAAABU/5ocLxtbAoB8/s400/a2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-1116116673137287134?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/1116116673137287134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/1116116673137287134'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2008/08/blog-post.html' title='அணுசக்தி ஒப்பந்தம்: அம்பலமானது நாடாளுமன்ற போலி ஜனநாயகம்! தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சார இயக்கம்!'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_lh78FA00hMw/SJRxlnkUCYI/AAAAAAAAABM/kyz2Eu8Sscs/s72-c/a1.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-8723988462862998482</id><published>2008-07-18T07:15:00.000-07:00</published><updated>2008-07-20T04:33:07.693-07:00</updated><title type='text'>1...2...3...பாராளுமன்ற &amp; சட்டமன்ற பன்னிகளை பிடியுங்கள்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;அடிமைசாசனமான 123 ஒப்பந்தத்தை தங்களது எஜமானன் அமெரிக்காவின் ஆணைப்படி இந்திய ஓட்டுப்பொறுக்கிகள் நிறைவேற்றி தற்போது அமுலுக்கு வரவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் கேட்கலாம், ஒப்பந்தத்தை காங்கிரஸ்-திமுக-ராஷ்ரிய சனதா-பாமக போன்றவர்கள் தானே ஆதரிக்கின்றனர். சி.பி.எம், சி.பி.ஐ தான் அதனை எதிர்த்து தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறி வந்துட்டாங்க. பாசகாவும் அதன் அணிகளும் கூட எதிர்த்து வருகின்றனர். அப்பறம் எப்படி இந்திய ஓட்டுப்பொறுக்கிகள் அனைவரையும் அமெரிக்காவின் அடிமைகள் என்று சொல்ல முடியும் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை விளக்க விவரங்களை கொடுக்கும் முன் ஒரே ஒரு கேள்வியினை போட்டு பதிலை தேடினாலே போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அந்த கேள்வி:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக வரும் இந்த 123 ஒப்பந்தம் 2005ம் ஆண்டு மத்திய அரசு கையெழுத்துயிட்டது. அப்போது இதனை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரமோ, கூட்டணி விலகலோ எந்த ஓட்டுப்பொறுக்கிக் கட்சி செய்தது?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பதிலை தேடினால் வருவது &lt;strong&gt;'இல்லை'&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;இன்று எல்லா வேலைகளும் முடிந்து 123 ஒப்பந்தம் அமுலுக்கு வர வேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இப்ப 123 ஒப்பந்தம் மூலம் நம் நாடு அடையப்போவதை முதலில் பார்த்துவிட்டு ஓட்டுப்பொறுக்கிகளின் முகத்திரைகளை கிழிப்பது சரியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது மொத்த மின்சக்தி தேவையில் 3% ஆக உள்ள அணுமின்சார உற்பத்தியினை இன்னும் 15 ஆண்டுகளுக்கு பிறகு தேவையான மின்சக்தி தேவையில் 7% ஆக மாற்ற 3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அணு உலைகளை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்குவது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதும் விற்காத இந்த அணு உலைகளை வெறும் 4% அளவு மின்சாரத்தை அதிகரிப்பதற்காக 3 லட்சம் கோடியினை கொடுத்து எந்த மடையனாவது வாங்குவானா...உலகிலேயே தோரியம் அதிகமாக இருக்கும் இரண்டாவது நாடான இந்தியாவில் தோரியத்தை விடுத்து யுரேனித்தை இப்படி வாங்குவானா... இதல மின்சாரத்தேவை அதிகரிக்கும் என்று மக்கள் வரிப்பணத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்வானா... என இந்திய ஓட்டுப்பொறுக்கிகளை சட்டையினை பிடிக்க வேண்டிய அளவிற்கு மேலே உள்ள பொருளாதார ரீதியான காரணம் ஒன்றே போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் 123 ஒப்பந்தத்தின் - தாய் ஒப்பந்தமான இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தம் என்பது இந்தியாவை அமெரிக்காவின் அரசியல் ரீதியில் நிரந்தர அடிமையாக மாற்றும் பல்வேறு சரத்துகளுடன் அமுலுக்கு வருகிறது.&lt;br /&gt;1. அமெரிக்காவிற்கு எவன் எதிரியோ அவன் இந்தியாவிற்கும் எதிரி, எவனெல்லாம் அமெரிக்காவின் நண்பனோ அவனெல்லாம் இந்தியாவின் நண்பன்.&lt;br /&gt;இதனடிப்படையில் தான் ஈரானுக்கு எதிராக 2 முறை இந்தியா வாக்களித்தது.&lt;br /&gt;2. நிமிட்ஸ் போன்ற அணுசக்தி கப்பல்களை இந்திய கடலோரத்தில் அனுமதிக்க வேண்டும்.&lt;br /&gt;3. அவன் படைகள் தங்கும் இடமாக பேட்டை ரவுடியாக இந்தியா இருக்க வேண்டும்.&lt;br /&gt;4. அவனுடன் ராணுவ ரீதியில் உதவிக்கு இந்திய படைகளை அனுப்ப வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல சரத்துகளை கொண்டது.... சொல்லி மாளாது என்பதால் இத்துடன் முடிக்கலாம். இப்ப சொல்லுங்க, இவ்வளவு அடிமைத்தனங்களை கொண்டு உள்ள ஒப்பந்தத்தை நிறைவேற்றிய ஓட்டுப்பொறுக்கிகளை சட்டையினை மட்டும் பிடித்தால் போதுமா?&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி கிடைக்கலை, வேலைவாய்ப்பு கிடைக்கலை, மருத்துவம் கிடைக்கலை, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு - பெட்ரோல் டீசல் விலையில் பாதி அளவு வரி - வீட்டுவாடகை உயர்வு இவை அனைத்தையும் மனதில் ஓட்டுவிட்டு மேலே உள்ள கேள்வியினை மனதில் எழுப்பி பாருங்கள்.... மானம் உள்ள ஒவ்வொருவரின் ரத்தமும் கொதிக்காமல் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி ஓட்டுப்பொறுக்கிகளின் முகத்திரை இதோ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாஜக&lt;/strong&gt; :&lt;br /&gt;&lt;br /&gt;இவன் தான் 123 ஒப்பந்ததின் ஆரம்ப கட்ட வேலைகளை பார்த்தவன். தற்போது கூட நாங்கள் ஆட்சிக்கு வந்தா இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற மாட்டோம் என்றா சொல்லுகிறான். கிடையாது, தற்போது உள்ள வடிவத்தில் நிறைவேற்றமாட்டோம் என்று தான் சொல்கிறான். அதிமுகவின் நிலைப்பாடும் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;போலிக்கம்யூனிஸ்டுகள்&lt;/strong&gt; :&lt;br /&gt;&lt;br /&gt;4 ஆண்டுகளாக ஒப்பந்தத்தின் வேலைகள் அனைத்தும் நிறைவேறுவதற்கும், தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கும் ஆட்சியினை ஆதரித்து துணை புரிந்த கட்சி. தற்போது கூட ஒப்பந்தத்தை விளக்கும் இவன், இவையெல்லாம் மறுகாலனியாக்கத்தின் வெளிப்பாடு தான் என்பதை மட்டும் சொல்ல மாட்டான். மேலும் தான் ஆளும் மாநிலங்களில் இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தி மக்களை நேரிடையாக கொலை செய்தும் வருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக,பாமக,ராஷ்ரிய ஜனதாதளம்:&lt;br /&gt;&lt;br /&gt;இவைகள் பலமுறை ஆட்சிக்கு வந்து கொள்ளையடித்த பணத்தை விட மறுகாலனியாக்கத்திலேயே உச்சகட்ட ஒப்பந்தமான 123 ஆதரிப்பதன் மூலம் கொள்ளையடிக்க முடியும் என்பதால் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நிரந்தர அடிமைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதனாலதான் இன்று&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;சமாஜ்வாதி கட்சி- பணமும், அம்பானிக்கு சில சலுகைகளும் கொடுத்ததும் 'கோமாளி' கலாம் ஆதரிக்கும் ஒப்பந்தம் என தனது முந்தைய முடிவை மாற்றுகொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தரகு முதலாளி அம்பானி எம்பிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் தருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;கொலைகாரன் சிபு சோரன் அமைச்சர் பதவி கொடுத்ததும் ஆதரிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வானுர்தி நிலையத்திற்கு சரண்சிங் பெயரை வைத்தது அஜித் சிங் ஆதரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப கூட எவனும் ஒப்பந்தத்தினை எதற்கு எதிர்க்கின்றோம் என்றோ, எதற்கு ஆதரிக்கிறோம் என்றோம் சொல்ல மாட்டேன் என்கிறானுங்க. காங்கிரசை நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கிறோம், எதிர்க்கிறோம் என சுருக்கி அடக்கி வாசித்து மக்களை ஏமாற்றும் தங்கள் மோசடிகளை தொடர்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுல கூடுதல் சேதி இது போன்ற ஒப்பந்தங்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சொல்லுங்கள் இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதையினை. பாராளுமன்றம் என்பது பன்றி தொழுவம் தான் என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒன்று மட்டும் உறுதி:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டுப்பொறுக்கிகள் இன்று தப்பித்து கொள்ளலாம், ஆனால் இந்த நாட்டையும் மக்களையும் நேசிக்கும் கைகள் வசம், அன்று பாரிசிலிருந்து இன்று காத்மாண்டு வரை உயர்ந்து நிற்கும் கைகள் வசம் இந்திய நாடு வரும் போது ஏற்படுத்தப்படும் மக்கள் சர்வாதிகார மன்றங்கள் முன் தப்பிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பிறப்பிக்கப்படும் ஆணைதான் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1....2.....3..... பாராளுமன்ற &amp;amp; சட்டமன்ற பன்னிகளை பிடியுங்கள்!&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-8723988462862998482?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/8723988462862998482'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/8723988462862998482'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2008/07/123.html' title='1...2...3...பாராளுமன்ற &amp; சட்டமன்ற பன்னிகளை பிடியுங்கள்!'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-2110964763088752639</id><published>2008-07-08T03:16:00.000-07:00</published><updated>2008-07-08T03:18:01.932-07:00</updated><title type='text'>அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க தாசர்கள் அடம் பிடிப்பது ஏன்?</title><content type='html'>&lt;div align="justify"&gt;விவசாயப் பொருளாதார நெருக்கடியும் உணவு நெருக்கடியும் முற்றி, அவற்றின் விளைவாக விவசாயிகளின் எழுச்சியும் உணவுக் கலகங்களும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அடுத்தடுத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் படுதோல்விகளைக் கண்டு வருகிறது. இன்னும் பத்து மாதங்களில் கிரமமான கால முறைப்படியே தேர்தல்கள் வந்தால் கூட, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பும் அருகிப் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கூட, மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம்; ஆட்சி கவிழ்ந்து விடும் என்று "இடதுசாரி'க் கூட்டணிக் கட்சிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன. இருந்தபோதும், ""என்ன ஆனாலும் சரிதான்; பிரதமர் பதவியிலிருந்து விலக நேர்ந்தாலும், ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டாலும் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை அமலாக்கியே தீரவேண்டும்'' என்பதில் உறுதியாக இருக்கிறார், மன்மோகன் சிங். முதுகெலும்பே இல்லாத இந்த மண் புழுவுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு துணிச்சல்? உலகையே கட்டி ஆளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர் ஆணவத்தோடு அது கொடுக்கும் நிர்பந்தம், அதனிடம் இந்த அடிமை காட்டும் விசுவாசம் இவற்றின் வெளிப்பாடுதான் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எப்பõடுபட்டாவது நிறைவேற்றியே தீருவோம் என்று மன்மோகன் சிங் சோனியா கும்பல் அடம்பிடிப்பதன் இரகசியம். இதற்காக அந்தக் கும்பல் அடைந்த ஆதாயம் பற்றிய உண்மை பின்னொரு காலத்தில் அம்பலமாகும். அல்லது அணுசக்தி ஒப்பந்தத்தினால் போர்வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பீரங்கி வண்டிச் சக்கரத்தில் பிணைக்கப்பட்டு இந்த நாடு இழுபடும்போது பல உண்மைகள் தெரிய வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நலன்களுக்கு மிகமிக இன்றியமையாதது என்றும், இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலாக்கப்படாவிட்டால் இந்தியா ஒரு உலகப் பொருளாதார வல்லரசாக பாய்ந்து முன்னேறுவது தடைப்பட்டுப் போகும் என்றும் மன்மோகன் சோனியா கும்பல் மட்டுமல்ல, அதற்கு எதிர்த்தரப்பில் நிற்கும் அரசியல் எதிரிகளான அத்வானி மோடி கும்பல் கூட வாதிடுகிறது. ஆனால் உண்மையோ வேறுவிதமாக உள்ளது. ""இந்தியா தற்போது மொத்தம் 1,27,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு நிகர உற்பத்தி வளர்ச்சி விகிதப்படி 201617 ஆம் ஆண்டு 3,37,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையை எட்டிவிட வேண்டும். இந்த அளவு மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை என்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (யாருடைய நலனுக்கான பொருளாதார வளர்ச்சி என்பது ஒருபுறம் இருந்த போதிலும்) கடுமையாக பாதிக்கப்படும். கடுமையான எரிசக்தி (மின்சார) பற்றாக்குறை நெருக்கடி ஏற்படும்; அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அதாவது நாட்டின் எதிர்கால எரிசக்தித் தேவையை நிறைவேற்றுவதற்கான அவசியத்துக்காகத்தான் அமெரிக்காவுடனான இந்த அணுசக்தி ஒப்பந்தம். இது முழுக்க முழுக்க பொருளாதார ரீதியிலான சிவிலியன் தேவைக்கான ஒப்பந்தம்தான். இராணுவ ரீதியிலானதோ, அரசு தந்திர ரீதியிலானதோ பிற பொருளாதார ரீதியிலானதோ இல்லை. அணுஆயுதத் தயாரிப்புக்கான சோதனை உட்பட இந்தியாவின் உள்நாட்டுவெளிநாட்டுக் கொள்கைகளைக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடியதோ அல்ல'' என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் வாதிடுவதைப் போல அமெரிக்காவுடனான இந்திய அணுசக்தி ஒப்பந்தம் இந்திய நாட்டு நலன்களுக்கானது தான் என்றால், அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்போ, பின்போ நாட்டு மக்கள் முன் பகிரங்கமாக வைத்து, நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் திறந்த, விரிவான வாதங்கள் நடத்துவதற்கு பதில் முற்றிலும் இரகசியமாக சதித்தனமாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டது ஏன்? ஜூன் 25க்குள் சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டே தீரவேண்டும் என்று துடித்த மன்மோகன் சோனியா கும்பல், அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குக் கூட காட்ட மறுப்பது ஏன்? அந்நிய ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும் அந்த இரகசிய ஒப்பந்த விவரம் இவர்களுக்கு தெரியக் கூடாதா? ""தேசிய நலன்களுக்கான இரகசிய உடன்பாடுகள் நிறைந்த'' தாகக் கூறப்படும் அந்த ஒப்பந்தம், உண்மையில் ஒரு தேசத் துரோக ஒப்பந்தம்தான். அதனால் மன்மோகன் சோனியா கும்பல் அதை இரகசியமாக வைப்பதிலும் அமலாக்குவதிலும் இவ்வளவு அக்கறை காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உண்மை இந்து மதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் தெரியும். ஆனால், ""இந்திய தேசிய நலன்களுக்கான''தென்று ஏகபோக உரிமை கொண்டாடும் இந்த கும்பல், உண்மையில் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை. இதைப் பகிரங்கமாகவே ஒப்புக் கொள்ளும் அக்கும்பல் அந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் தனக்கும் ஒரு பங்கு வேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறது. ஒப்பந்தத்துக்குத் தாங்கள் எதிரானவர்கள் அல்ல; தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அணுஆயுதப் பரிசோதனைக்கான இந்தியாவின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் மறுபரிசீலனைக்குப் பிறகு ஒப்பந்தத்தை முடிப்போம் என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் போலத்தான், நாட்டின் மின் உற்பத்தித் தேவைக்கு மிகவும் இன்றியமையாதது என்று கூறி அமெரிக்காவின் ""என்ரான்'' நிறுவனத்துடன் (ஜனநாயக முற்போக்கு சக்திகளின்) கடும் எதிர்ப்பையும் மீறி ஒரு துரோகத்தனமான ஒப்பந்தம் போட்டுக் கொண்டது, மகாராட்டிராவிலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு. அந்த ஒப்பந்தம் இலஞ்சஊழல் நிறைந்த தேச துரோகமென்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பல் என்ரானுடன் மறுபேரம் பேசி மறுஒப்பந்தம் போட்டுக் கொண்டது. பின்னர் அந்தத் திட்டமே, இந்திய நாட்டை அமெரிக்க மின்நிறுவனம் பகற்கொள்ளையடிப்பது என்று நிரூபணமாகியது. இதைப்போன்றே துரோகமிழைத்து அமெரிக்காவுடனான மறுபேரம், மறுஒப்பந்தம் போட்டு ஆதாயம் அடையவே இந்து பாசிச ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பல் துடிக்கிறது. அதனால், தற்போதைய ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டே, ஒப்பந்தத்தை அமலாக்காமல் போனால் மன்மோகன் சிங்கின் நம்பகத்தன்மையும் அதிகாரமும் ஆளுமையும் பறிபோய் விடும் என்று உசுப்பேற்றி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பராமரிப்பதற்கு மின் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்க வேண்டும் என்பது உண்மைதான் என்றபோதும், அதற்கு அணுசக்தி மின்உற்பத்திதான் ஒரே வழி, சிறந்த வழி என்பதும், அதையும் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்நாட்டிலிருந்து அணு உலைகளையும் அணுசக்திக்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்துதான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் உண்மையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2006ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி நாட்டின் மொத்த மின்உற்பத்தியில் 3 சதவீதம். அதாவது 3,900 மெகாவாட் மட்டுமே அணு மின்சக்தி ஆகும். இந்தியஅமெரிக்க அணுமின்சக்தி ஒப்பந்தம் முழுமையாகவும் சரியாகவும் அமலானால் கூட, 2016ஆம் ஆண்டில் மொத்த மின் உற்பத்தியான 3,36,000 மெகாவாட் என்ற அளவில் 6 சதவீதம் மட்டுமே — அதாவது 20,000 மெகாவாட் தான் அணு மின்சக்தியாக இருக்கும். இதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும் இன்றியமையாததாகவும் இருக்கும் என்று அமெரிக்க தாசர்கள் புளுகித் தள்ளுகிறார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய அணு உலைகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும். இதனால் அமெரிக்க ஏகபோக முதலாளிகளும் அவர்களின் கூட்டாளிகளான இந்தியத் தரகு முதலாளிகளும் கொழுப்பதற்கான வழிவகை செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்ல, அணு மின் உற்பத்தி அமெரிக்காவிலேயே இலாபகரமானதாயில்லை என்பதால், கடந்த 30 ஆண்டுகளில் புதிய அணுமின் திட்டங்கள் எதுவும் அங்கு நிறுவப்படவேயில்லை. அங்கேயே காலாவதியாகிப்போன தொழில்நுட்ப அடிப்படையிலான கழித்துக் கட்டப்பட்ட அணுமின் உலைகளை நமது நாட்டின் தலையில் கட்டுவதற்கு அமெரிக்கா எத்தணிக்கிறது. அதோடு, இந்தியாவின் அணுமின் உற்பத்தி, மற்றும் அணுஆயுதச் சோதனை மற்றும் தயாரிப்புக்கான மூலப்பொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தி ஆகிய அனைத்தையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, உலகப் போர் வெறியனான அமெரிக்காவின் உலக மேலாதிக்க யுத்ததந்திரத்தின் சேவகனாக இந்தியாவை மாற்றிக் கொள்வது ஆகிய உள்நோக்கங்களுக்காகவும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈடேற்றிக் கொள்ள முயலுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நேர்மாறாக ஒப்பீட்டு ரீதியில் மலிவான செலவில், நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையானவாறு நீர்மின் சக்தி, அனல் மின்சக்தி மற்றும் சொந்த தொழில்நுட்ப அடிப்படையிலான அணு மின்சக்தி ஆகியவற்றை நமது நாடு சுயசார்பாகவே வளர்த்துக் கொள்ள முடியும் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அனல்மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி ஆதாரம் நமது நாட்டிலேயே இருக்கும் அதேசமயம், மொத்தம் 1,50,000 மெகாவாட் அளவு நீர்மின் உற்பத்திக்கான வாய்ப்பிருந்த போதும் 33,000 மெகாவாட் அளவே நீர்மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. நேபாளம், பூட்டானுடன் தகுந்த ஒப்பந்தங்கள் அடிப்படையில் 55,000 மெகாவாட் நீர்மின் சக்தியை இறக்குமதி செய்து கொள்ளவும் முடியும். ஈரானுடனான குழாய் வழி பெட்ரோலிய எரிவாயு இறக்குமதி திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் நாட்டின் எரிசக்தித் தேவையை முற்றிலுமாகச் சமாளித்துவிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு இருந்தபோதும், அமெரிக்காவுடனான அடிமைத்தனமான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவது என்று மன்மோகன் சோனியா மட்டுமல்ல. அத்வானி மோடி முதலிய துரோகிகளும் உறுதியாக இருக்கின்றனர். யார் அமெரிக்க எஜமானனுடன் விசுவாசமாக நடந்து கொண்டு பேரங்கள் பேசி அதிக ஆதாயம் அடைவது என்பதில்தான் இவ்விரு கும்பல்களுக்கிடையில் வேறுபாடு உள்ளது. ஆனால் மதவாத சக்திகளை எதிர்ப்பதுதான் முதன்மையானது என்று கூறிக் கொண்டு போலி சோசலிச, போலி கம்யூனிச, போலி மார்க்சிச இடதுசாரிக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுடன் ஊடலும் கூடலுமான உறவு வைத்துக் கொண்டு, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் அதேசமயம், இந்த அரசு கவிழ்ந்து போகவும் விடமாட்டோம் என்று சந்தர்ப்பவாத நாடகமாடுகிறது. ஆரம்பத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகத் தொடங்கிய இடதுசாரி கூட்டணி, பிறகு அதன் அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், ஒப்பந்தம் குறித்த தமது கவலைகளை சந்தேகங்களைப் போக்க வேண்டும் என்றும் இறங்கி, இதற்காக ஒப்பந்தத்தையும், அமெரிக்காவின் ""ஹைட்'' சட்டத்தையும் ஆராய்வதற்கான கூட்டுக் கமிட்டி அமைப்பது என்பதை ஏற்றுக் கொண்டது. சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் நிபந்தனைகளை ஏற்கும் ஒப்பந்த நகல் தயாரிப்பதையும் ஏற்றுக் கொண்டது. இப்போது இந்த நகலை இறுதியாக்கி இந்தியா கையொப்பமிட்டு விட்டால் போதும்; அமெரிக்க நாடாளுமன்றம் இந்தியாவுடனான தனது அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி விடும். அப்புறம் அது அமலுக்கு வந்துவிடும். இப்போது இந்த இறுதி நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவிடத்தான் இடதுசாரிக் கூட்டணி எத்தணிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்தித் தேவையை எப்படி உத்தரவாதப்படுத்துவது என்ற அமெரிக்கத் தாசர்களின் வாதத்துக்குள் அரசியல் நிர்பந்தம் காரணமாக சிக்கிக் கொண்டு விட்ட இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த விவகாரத்திலும் சமசரசரணடைவு தவிர வேறு வழி கிடையாது. ஆனால், நாட்டுக்குத் தேவையானது எரிசக்தித் தேவையை உத்தரவாதப்படுத்துவதல்ல; எரிசக்தித் துறையின் சுயசார்பும் இறையாண்மையும், மறுகாலனியாதிக்கத்திலிருந்து விடுதலையும்தான்.&lt;br /&gt;· ஆர்.கே.&lt;br /&gt;புதிய ஜனநாயகம்   july 2008 &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-2110964763088752639?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/2110964763088752639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/2110964763088752639'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2008/07/blog-post.html' title='அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க தாசர்கள் அடம் பிடிப்பது ஏன்?'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-8255844435686039106</id><published>2008-05-15T07:24:00.000-07:00</published><updated>2008-05-15T07:31:45.472-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மறுகாலனியாதிக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடிமை சாசனம்'/><title type='text'>கோமாளியின் பேச்சே போதும் இந்திய அடிமைகளுக்கு - அமெரிக்க உளவாளி தகவல்</title><content type='html'>&lt;a href="http://bp2.blogger.com/_lh78FA00hMw/SCxIl_ctSLI/AAAAAAAAABE/c1nDkAY-1Mk/s1600-h/123kalam.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5200611487230281906" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_lh78FA00hMw/SCxIl_ctSLI/AAAAAAAAABE/c1nDkAY-1Mk/s400/123kalam.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-8255844435686039106?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/8255844435686039106'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/8255844435686039106'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2008/05/blog-post.html' title='கோமாளியின் பேச்சே போதும் இந்திய அடிமைகளுக்கு - அமெரிக்க உளவாளி தகவல்'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_lh78FA00hMw/SCxIl_ctSLI/AAAAAAAAABE/c1nDkAY-1Mk/s72-c/123kalam.JPG' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-1577526853349855489</id><published>2008-01-28T01:46:00.000-08:00</published><updated>2008-02-01T00:06:24.034-08:00</updated><title type='text'>"ஏகாதிபத்தியத்திற்கு கச்சிதமாக செய்யப்பட்ட அடிமை நான்" - கனிமொழி உரைவீச்சு</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;123- அணுசக்தி ஒப்பந்தம் எவ்வாறு இந்தியாவிற்கு மிகவும் நன்மைபயக்கிறதென்பதை மிகவும் சிரமப்பட்டு நீண்டகால ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறார் கனிமொழி.&lt;br /&gt;..&lt;br /&gt;இந்தியாவுக்கு அதிக இடம் கொடுத்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ், வாஷிங்கடன் போஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் தன் (அமெரிக்க) அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதையும், இதே போன்ற ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள பாகிஸ்தான் வலியுறுத்துவதையும் வைத்து இந்திலிருந்தே தெரியவில்லையா? இது எவ்வளவு அவசியமென்று என்கிறார் கனிமொழி. இதைப் போன்ற கவித்துவமான கண்டுபிடிப்புக்களால் தான் அவர் கவிஞர் என்றழைக்கப்படுகிறார் போலும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா! கவித்தமிழே!&lt;/strong&gt;&lt;br /&gt;.....&lt;br /&gt;இந்த மானங்கெட்ட ஒபந்தத்தை எதிர்க்கும் அணுவிஞ்ஞானிகள், அரசியல், பொருளாதார நிபுணர்கள் என எவருடைய கருத்துக்களையும் உங்கள் கண்கள் படித்ததா? படித்திருந்தாலும் கண்டிப்பாய் அவை உங்கள் வாயிலிருந்து வந்திருக்காது. எங்களுக்குத் தெரியும் அடிமைகளின் வாய்கள் ஆண்டைகளின் எச்சில்களுக்காகவே மட்டும்தான் காத்திருக்குமென்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"சீனாவை போலவே இந்தியாவும் மின் உற்பத்திக்கு நிலக்கரியை பெரிதும் நம்பியிருக்கிறது. சீனா 2020க்குள் அணு ஆலைகள் மூலம் 40000 MW மின்சக்தி உற்பத்தி செய்ய தயாராகிவருகிறது. இந்தியாவிக்கும் 2020க்குள் 30000 MW மின்சக்தி உற்பத்தி செய்யும் எண்ண்மிருக்கிறது. ஆனால் 123 யை கையெழுத்தாகாமல் அது சாத்தியமில்லை" என்கிறார் கனிமொழி. எழுத்தின் மூலமாக மக்களின் மீது ஆதிக்கம் செய்யும் படைப்பாளியின் ஆவணம் இங்கே தீர்ப்பு சொல்கிறது.&lt;br /&gt;..&lt;br /&gt;&lt;strong&gt;சரி '123 ஒப்பந்தத்தை' பற்றி சுருக்கமாக பார்ப்போம்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;..நம் நாட்டில் கிடைக்கின்ற தோரித்துடன் ஓரளவு புளூட்டோனியத்தை சேர்த்து செறிவூட்டி அணுஆற்றலை பெற முடியும் என்பதலில் தற்போது நல்ல முன்னேற்றத்தை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த 30 ஆண்டு சிந்தனையை அமெரிக்காவிற்கு அடகு வைக்க போகிறது இந்திய அரசு. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இன்று அணுசக்தியிலிருந்து 3% மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது இதனை 7% ஆக மாற்ற அதாவது வெறும் 4% அதிகப்படுத்த (அதுவும் 2020-ல் தான்) 123 யை நிறைவேற்ற துடிக்கிறது அரசு. அமெரிக்கா போன்ற நாடுகளிலே அணுசக்தியிலிருந்து 2.5% தான் மின்சாரம் எடுக்கின்றனர். பாதுகாப்பு காரணம் காட்டி இதனை அதிகப்படுத்த அங்குள்ள மக்கள் சம்மதிக்கவில்லை. இது போல உலகம் முழுவதும் விலை போகாத அணு உலைகளை இந்தியா தலையில் கட்ட நினைக்கிறது அமெரிக்கா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதை தவிர அரசியல் ரீதியில் "அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையினை" அப்படியே இந்தியா ஏற்க வேண்டும்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உண்மை இவ்வாறு இருக்க, தோரியம் சார்ந்த அணுசக்தி தொழில் நூட்பத்தை உருவாக்க நீண்ட காலமாகுமென்றும் கவலையுறுகிறார் கனிமொழி. உண்மைதான் போராளிகள் நீண்டகாலமாக போராடிக்கொண்டு இருக்கின்றார்கள், அவர்களுக்கு நீண்ட காலமென்பது சலிப்பூட்டுவதாக இருக்காது. ஆனால் காலில் விழுபவர்களுக்கோ ஒவ்வொரு நொடியும் கவலையாகத்தான் இருக்கும், நமக்கு முன் எவனாவது முந்திக் கொள்வானோயென்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஏற்கனவே ஒவ்வொரு இந்தியனின் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் கடனின் அளவு ஏகத்திற்கும் எகிரிக்கொண்டிருக்கும் போது 15 லட்சம் கோடி ரூபாயை இவ்வொப்பந்தத்தின் மூலம் முதலீடு செய்து அவனை ஒரேடியாக புதைக்குழிக்குள் அனுப்பும் நிகழ்ச்சிபோக்கு தான் 123 - என்பதனைத் தவிர வேறொன்றும் இல்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;காலனி ஆதிக்கத்தின் பழைய பாதிப்பு மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய பயங்களை மனதைவிட்டு அகற்றுவதற்கு ஒரே தாயத்து 123 ஒப்பந்தம் தான் என்கிறார் கனிமொழி, மேலும் சிலர் பொதுப்படையாக " அணுசக்தி எரிபொருளை நிறுத்தவோ, தரப்பட்டதை தன்னிச்சையாக எடுத்துக்கொள்ளவோ அமெரிக்க அதிபரால் முடியும்" என்று பேசுவதாக கூறுகிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கனிமொழி அவர்களே அது சிலர் அல்ல! ஆகப் பெரும்பான்மையினர். ஆனால் அமெரிக்காவின் எச்சிலுக்காக நக்கி பிழைக்கும் உங்களை போன்றவர்கள் தான் சிறுபான்மையினர். இந்த சிறுபான்மை துரோகிகளை இன்றைய செய்தி ஊடகங்களில் தேடமுடியாது, உங்களை போன்றவர்களை விரட்டியடிக்கும் போராட்ட காலத்தில் வெளிவரும் புரட்சிகர ஏடுகளில் தான் காண முடியும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த வாரிசு போல இன்னொரு வாரிசான 'கார்த்திக் சிதம்பரம்' (கனிமொழியின் கருத்து அமைப்பின் பார்ட்னர்) என்பவரும் இதே போல 123 நாட்டு நலனுக்கு சிறந்தது, தோரியம் மூலம் அணுசக்தி கிடைக்க ரெம்ப காலம் ஆகும், அடிமை ஒப்பந்தத்தால் ஒரு தீமையும் இல்லை என சென்னையில் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டு இருந்ததை சொல்லியே ஆக வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கலைஞருக்கும், ப.சிதம்பரத்துக்கும் வார்த்து எடுத்த மாதிரி வாரிசு அமைந்து உள்ளது. இது பன்னாட்டு நிறுவனத்திற்கு நல்லதாக இருந்தாலும் இந்திய நாட்டுக்கு நல்லதல்ல. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நன்றி &lt;a href="http://seithivimarshanam.blogspot.com/"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;செய்தி விமர்சனம்&lt;/span&gt; &lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-1577526853349855489?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/1577526853349855489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/1577526853349855489'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2008/01/blog-post_28.html' title='&quot;ஏகாதிபத்தியத்திற்கு கச்சிதமாக செய்யப்பட்ட அடிமை நான்&quot; - கனிமொழி உரைவீச்சு'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-6772957781523875861</id><published>2008-01-27T01:44:00.000-08:00</published><updated>2008-01-27T01:45:51.910-08:00</updated><title type='text'>"அணுசக்தி ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை" - உச்சநீதி மன்றம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நாட்டை அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஓட்டுமொத்தமாக அமெரிக்காவுக்கு அடிமையாக்க கூடிய ஒப்பந்தம் தான் இந்த &lt;a href="http://123-agreement.blogspot.com/"&gt;அணுசக்தி ஒப்பந்தம்.&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதனை கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரும் வெளிப்படையாக ஆதரித்தும், எதிர்க்கிறோம் என்ற பெயரில் ( NGO ஸ்டையில்) ஆதரிக்கும் போலிகளும் என அடிமை சாசனம் நிறைவேற்றுவதற்கு இசைவு தெரிவித்துவிட்டார்கள். வேலைகளும் மும்மூரமாக நடக்கிறது. எந்த கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிக்காத நம்ம விஞ்ஞானி கோமாளி கலாம் கூட 123-க்கு முழு ஆதரவு. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"அணுசக்தி ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை, அரசியல் சாசனத்தில் அதற்கு இடமில்லை" - உச்சநீதி மன்ற அறிவிப்பு மேலே உள்ள ஏகாதிபத்திய தாசர்களில் யாருடைய பேச்சை அம்பலப்படுகிறது என்பது தான் செய்தி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வேற யாரு, இந்த நாடாளுமன்ற பன்றிதொழுவத்தை நம்பச்சொல்லி இதன் மூலம் "மக்கள் விடுதலையினை சாதிக்க முடியும்" என புருடா விடும் போலிக் கம்யூனிஸ்டுகள் தான். ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஓட்டெடுப்பு கூட இல்லாமல் விவாதித்து நாட்டை மீட்டு விடுவோம் என்ற போலிகள் முகத்தில் இன்று அறைந்து சொல்கிறது உச்ச நீதிமன்றம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தா.பாண்டியன்களையும், பிரகாஷ்கரத்துகளையும் இவர்கள் தலைமையில் இருக்கும் அடிமட்ட தோழர்கள் கேட்க வேண்டிய ஒரே கேள்வி "இனி மேலும் நாடாளுமன்ற முறையினை நம்பச்சொல்லி நாம் வலம் வருவதற்கு என்ன அடிப்படை" என்பது தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நன்றி &lt;a href="http://seithivimarshanam.blogspot.com/"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;செய்தி விமர்சனம்&lt;/span&gt; &lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-6772957781523875861?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/6772957781523875861'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/6772957781523875861'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2008/01/blog-post_27.html' title='&quot;அணுசக்தி ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை&quot; - உச்சநீதி மன்றம்'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-301656203041685722</id><published>2008-01-26T01:42:00.000-08:00</published><updated>2008-01-27T01:46:11.294-08:00</updated><title type='text'>நீங்க நல்லவரா, கெட்டவரா? அ.(மெரிக்க) மார்க்ஸ்</title><content type='html'>&lt;div align="justify"&gt;நாயகன் படத்தில் ஒரு வசனத்தை கேட்டிருப்போம், குழந்தை கமலைப் பார்த்து "நீங்க நல்லவரா? கெட்டவரா?" எனக் கேட்கும் அதற்கு பதில் சொல்ல முடியாமல் நா தழுதழுத்து துடித்து சொல்வார் கமல், "தெரியலையே"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;குழந்தை ரவுடியை இனங்காண்பதில் புரிதல் இல்லாததால் கேட்ட கேள்வி அது. ஆனால் இந்த அந்தோணிசாமி மார்க்சுகளின் கேள்விகள் நமக்கு தெளிவான புரிதலை ஏற்படுத்துகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'தீராநதி ஜனவரி'யில் இதழில் அ.மார்க்ஸ் அவர்கள், கனிமொழி 123 ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து பேசியதை கடிந்து கொள்ளும் போது இறுதியில் ஒரு கேள்வியினை போடுகிறார் பின்வருமாறு "எல்லாம் சரி, இதுதான் திமுகவின் கொள்கையா?"&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதேபோல 'த சண்டே இந்தியன் இதழில்' அ.மார்க்ஸ் அவர்கள், திமுக வின் பலமும், பலவீனமும் என்ற கட்டுரையின் இறுதியில் இப்படி முடிக்கிறார்; "இன்று உலகமய சூழலில் மேலெழும் பொருளாதாரப் பிரச்சினைகள் கணக்கில் கொள்ளாமல் ஆதரிக்கும் நிலைப்பாட்டை திமுக எடுப்பது போல தோன்றுகிறது" &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;ஐயா அ.மார்க்ஸ் அவர்களே,&lt;/u&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கனிமொழி வார்த்தைக்கு வார்த்தை "இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை எங்க கட்சி ஆதரிக்கிறது, எங்க தலைவர் கலைஞர் அவர்களும் ஆதரிக்கிறார்" என கூறிப்பிட்டு உள்ளார். இவ்வாறு கனிமொழி என்ற 'அருவருடி ' ஒப்புதல் வாக்குமூலமாக தந்த பின்னும் , உங்களுக்கு "எல்லாம் சரி, இதுதான் திமுகவின் கொள்கையா?" என கேள்வி வருகிறது என்றால் என்ன அர்த்தம்?. மக்களை இப்படி நீங்க நல்லவரா, கெட்டவரா என கேள்வி கேட்கும் அளவிலேயே வைத்திருக்க விரும்பும் கூட்டத்தை சேர்ந்தவர் நீங்கள் என்பது தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அடுத்து "உலகமயமாக்கலை அப்படியே திமுக ஆதரிப்பது போல தோன்றுகிறது" என வினா தொடுக்கிறீர்கள், என்ன கேள்வி இது. அண்ணாவே காசு சம்பாதிக்கும் என்ற காரணத்தால தான் திக விலிருந்து வந்து திமுகவை ஆரம்பித்தார். அடுத்து கலைஞர் அதை கைப்பற்றி (திமுக முன்னணியில் இருந்த தலைவர் அல்ல கலைஞர்) இன்று தனது குடும்ப சொத்தாக மாற்றி, 5 முறை முதல்வராக இருந்து கிட்டதட்ட 80,000 கோடிகளுக்கு மேல சேர்த்துவிட்டார்.(மாறன் பிரிவுக்கு முன் மதிப்பு) உலகமயமாக்கலை தான் நாட்டோட வளர்ச்சிக்கு என காங்கிரஸ், பாஜக வரை ஆதரிப்பது போல கலைஞரும் தன் கொள்கையாக எடுத்து நடைமுறைபடுத்தி வருகிறார். இப்ப 2007 வந்து "தோன்றுகிறது" என்றால் என்ன அர்த்தம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;என்ன வெங்காயம் தோன்றுகிறது. அப்பட்டமாக அறிவித்துவிட்டார்கள் படுத்தால் அமெரிக்காவுக்குதான் படுப்போம் என்று பிறகு இப்படி தோன்றுவது ஏகாதிபத்திய அருவருடிகளை காப்பதற்காக எழுந்ததாகவே இருக்க முடியும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உலகமயமாக்கலையும், இந்துமத பாசிசத்தையும் பற்றி எழுதும் நீங்கள் தான் இப்படி திமுக குறித்து சந்தேகங்களையும், காந்தி குறித்து சந்தேகங்களையும் எழுப்பி அவர்களை நியாயப்படுத்த முற்படுகிறீர்கள். எதிரியினை குறித்து குழப்பத்தினை விளைவிக்கும் இது போன்ற பிரச்சாரம் ரெம்ப காலத்திற்கு நீடிக்க முடியாது என்பதே வரலாறு தரும் படிப்பினை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நன்றி &lt;a href="http://seithivimarshanam.blogspot.com/"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;செய்தி விமர்சனம்&lt;/span&gt; &lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-301656203041685722?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/301656203041685722'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/301656203041685722'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2008/01/blog-post.html' title='நீங்க நல்லவரா, கெட்டவரா? அ.(மெரிக்க) மார்க்ஸ்'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-4912527761458604154</id><published>2007-11-21T01:48:00.000-08:00</published><updated>2007-11-21T01:49:38.181-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மறுகாலனியாதிக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடிமை சாசனம்'/><title type='text'>அமெரிக்க - இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கிவெறிவோம்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;அமெரிக்க - இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கிவெறிவோம்!&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;அமெரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தத்தைக் கிழத்தெறிவொம்!!&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;"தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம்&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவின் அடியாளாகவும் அடிமையாகவும் இந்தியாவை மாற்றியிருக்கிறது, மன்மோகன் சிங் அரசு. நமது அணு மின்நிலையங்களையும் ÷தாரியத்தைப் பயன்படுத்தி சுயசார்பாக நம் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் அணு தொழில்நுட்பத்தையும் முடக்கவும் திருடவும் அமெரிக்காவுக்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் வழிசெய்து கொடுத்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இது வெறும் அணுசக்தி ஒப்பந்தமல்ல; ஜூலை 2005இல் இந்திய அரசு அமெரிக்காவுடன் இரகசியமாகச் செய்து கொண்ட இராணுவ ஒப்பந்தத்தின் ஓர் அங்கம். அதன்படி, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இந்திய இராணுவத்தை ஒரு காலாட்படையாக அனுப்பி வைக்க மன்மோகன் அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. இதனடிப்படையில்தான் ஈரானைத் தாக்குவதற்காக அனுப்பப்பட்ட நிமிட்ஸ் கப்பல் சென்னை துறைமுகத்தினுள் அனுமதிக்கப்பட்டது.அமைச்சரவைக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு, இனி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை நிராகரித்தாலும் இதனை ரத்து செய்ய முடியாது என்று திமிராகப் பேசுகிறார், பிரதமர். இப்படித்தான் மறுகாலனியாக்கம் என்ற படுகுழிக்குள் இந்தியாவைத் தள்ளிய ""காட்'' ஒப்பந்தமும் 1994இல் இதேபோல திருட்டுத்தனமாக நம்மீது திணிக்கப்பட்டது. அந்த மறுகாலனியாதிக்க அடிமைத்தனத்தின் உச்சகட்டம்தான் இந்த அடிமை ஒப்பந்தங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த உண்மைகளை விளக்கியும், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராட அறைகூவியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழகமெங்கும் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன. இவ்வமைப்புகளின் சார்பில் வெளியிடப்பட்ட பல்லாயிரக்கணக்கிலான துண்டுப் பிரசுரங்களும், ""அடிமைஅடியாள்அணுசக்தி!'' எனும் சிறுவெளியீடும் உழைக்கும் மக்களிடம் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்று, இப்பிரச்சார இயக்கத்துக்கு வலுவூட்டின. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்டு, 29ஆம் தேதியன்று தமிழகமெங்கும் இப்புரட்சிகர அமைப்புகள் செயல்படும் பகுதிகளில் இத்துரோக ஒப்பந்தத்திற்கு எதிராக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;செங்கொடிகள் உயர்ந்தோங்க, விண்ணதிரும் முழக்கங்களுடன் சென்னை, திருச்சி, தஞ்சை, மதுரை, கோவை, ஓசூர், திருப்பத்தூர், சிவகங்கை, தருமபுரி, சேலம், கடலூர் மற்றும் புதுவை மாநிலத்தின் காரைக்கால் ஆகிய நகரங்களில் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஜனநா யக உணர்வும் கொண்ட பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், தொழில்நுட்பவாதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்டு இவ்வ மைப்புகளின் முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அரங்கக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் மூலமாக கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் இவ்வமைப்புகள் இப்பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பு.ஜ. செய்தியாளர்கள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-4912527761458604154?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/4912527761458604154'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/4912527761458604154'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2007/11/blog-post_21.html' title='அமெரிக்க - இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கிவெறிவோம்!'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-6045676302029434249</id><published>2007-11-15T00:30:00.000-08:00</published><updated>2007-11-21T01:48:06.846-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போலிகக் கம்யூனிஸ்டுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓட்டுப்பொறுக்கிகள்'/><title type='text'>சர்வதேச அணுசக்தி கழகத்துடன் பேச்சு நடத்தலாம்....போலிகளின் வளர்ச்சி!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://bp2.blogger.com/_lh78FA00hMw/RzwDtpNO0PI/AAAAAAAAAA8/3fyOnvbWDNk/s1600-h/Image(196).jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5132981757985870066" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_lh78FA00hMw/RzwDtpNO0PI/AAAAAAAAAA8/3fyOnvbWDNk/s400/Image(196).jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"கருத்து ஒற்றுமை" ஏற்படுத்துவோம் என்று மக்களை ஏமாற்றி வந்த போலிக் கம்யூனிஸ்டுகள் தற்போது 'சர்வதேச அணுசக்தி கழகத்திடம் பேச்சு நடத்தலாம்', ஆனால் அதன் அம்சங்களை எங்களுடன் விவாதிக்கனும் என்று அறிவித்து உள்ளனர். எதிர்க்கிற மாதிரியே 123-யை நிறைவேற்றிட எப்படியெல்லாம் வேலை செய்கிறார்கள் இந்த எதிரிகள் என்பது தெரிகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நந்திகிராமில் நாங்கள் எங்கள் குண்டர் படையை வைத்துத்தான் போராடும் மக்களை தாக்கி வருகிறோம் என புத்ததேவ் அறிவிச்சுட்டார். 123 -லேயும் அப்படி வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது தானே போலிகளே !!&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-6045676302029434249?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/6045676302029434249'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/6045676302029434249'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2007/11/blog-post.html' title='சர்வதேச அணுசக்தி கழகத்துடன் பேச்சு நடத்தலாம்....போலிகளின் வளர்ச்சி!'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_lh78FA00hMw/RzwDtpNO0PI/AAAAAAAAAA8/3fyOnvbWDNk/s72-c/Image(196).jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-7316419184043262826</id><published>2007-09-16T22:31:00.001-07:00</published><updated>2007-09-16T22:32:36.801-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மறுகாலனியாதிக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடிமை சாசனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='hindutva'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓட்டுப்பொறுக்கிகள்'/><title type='text'>அமெரிக்க பேரரசர் ஜார்ஜ் புஷ் ஆசியுடன் இந்திய ஓட்டுப் பொறுக்கிகள் வணங்கும்........ '123 விநாயகர்'</title><content type='html'>&lt;a href="http://bp0.blogger.com/_lh78FA00hMw/Ru4Rab9friI/AAAAAAAAAA0/7VhNb3BW_Fg/s1600-h/123%2Bvinayakar.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5111041772992048674" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_lh78FA00hMw/Ru4Rab9friI/AAAAAAAAAA0/7VhNb3BW_Fg/s400/123%252Bvinayakar.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-7316419184043262826?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/7316419184043262826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/7316419184043262826'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2007/09/123_16.html' title='அமெரிக்க பேரரசர் ஜார்ஜ் புஷ் ஆசியுடன் இந்திய ஓட்டுப் பொறுக்கிகள் வணங்கும்........ &apos;123 விநாயகர்&apos;'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_lh78FA00hMw/Ru4Rab9friI/AAAAAAAAAA0/7VhNb3BW_Fg/s72-c/123%252Bvinayakar.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-1211057322830427291</id><published>2007-09-07T08:28:00.000-07:00</published><updated>2007-09-07T08:34:03.713-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மறுகாலனியாதிக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடிமை சாசனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோமாளி'/><title type='text'>நான் விஞ்ஞானி இல்லை கோமாளிதான் !! கலாம்-இன் ஒப்புதல் வாக்குமூலம் !!</title><content type='html'>&lt;div align="justify"&gt;இன்று நாடு மறுகாலனியாக்கப்பட்டு வருவதன் உச்சக்கட்டம் தான் அணுசக்தி ஒப்பந்தம் , இந்தியாவின் அரைகுறை இறையாண்மையையும் காவு கேட்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;2005 இல் அமெரிக்காவுடன் போடப்பட்ட இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு சரத்து தான் இந்த 123 ஒப்பந்தம். 123 ஒப்பந்தம் உள்பட மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் (நாட்டை அன்னியனுக்கு விற்பதில்) ஒத்து ஊதி இருந்திட்டு இப்ப எதிர்க்கிற மாதிரி நடிக்கிற போலி கம்யூனிஸ்டுகளை போல ஒத்து ஊதின இன்னொரு சுகபோகி நம்ம அரசவை கோமாளி கலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;லட்சக்கணாக்கான விவசாயி தற்கொலை செய்த நாட்டில், 83 கோடி பேருடைய தினசரி வருமானம் ரூ 20 ஆக இருக்கும் நாட்டில் அனைத்தையும் மூடி மறைத்து இந்திய நாடு 2020 வல்லரசு ஆகிவிடும் என்று நாடு படுதீவிரமாக மறுகாலனியாக்கப்பட்டு வருவதை மூடிமறைத்த இந்த கோமாளியும் 2005ல் போடப்பட்ட அடிமை சாசனம் (123) பற்றி வாய் திறக்கவே இல்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;.&lt;br /&gt;இப்போது அடிமை சாசனம்(123) அமுல்படுத்த போகிற போது எதிர்க்கிற மாதிரி நாடகம் ஆடுகிற போலிகளை விட அப்பட்டமான அமெரிக்க அடிமை நாயாக காட்டி கொண்டு இருக்கிறார் கலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;.&lt;br /&gt;விஞ்ஞானிகள், நாட்டுப்பற்றாளர்கள், பத்திரிக்கையாளார்கள் என அனைவரும் 123 என்பது ஒரு அடிமை சாசனம் என்று கிழித்து வருகின்ற இந்த சூழ்நிலையில்; கலாம் நேற்று 'அணுசக்தி ஒப்பந்தம் அபூர்வமானது; முக்கியமானது' என்று கூறி தான் ஒரு கோமாளிதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://bp1.blogger.com/_Lkyn-bv2oUY/Rt0nUplc7jI/AAAAAAAAAGo/Sidv5u_WcBc/s1600-h/kalam.jpg"&gt;&lt;/a&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://bp3.blogger.com/_lh78FA00hMw/RuFuk6fJNJI/AAAAAAAAAAk/zpx6qAlkZ-g/s1600-h/kalam.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5107485032869082258" style="CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_lh78FA00hMw/RuFuk6fJNJI/AAAAAAAAAAk/zpx6qAlkZ-g/s200/kalam.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த ஆளு விஞ்ஞானியாக இருந்திருந்தால் "அடிமை சாசனம்" பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கும். கோமாளி யாச்சே ! அதுனால தான் ஒப்பதத்தைப் பற்றியோ அதனுடைய சரத்துகளைப் பற்றியோ வாய்திறக்காமல் ஒப்பந்தம் முக்கியமானது என்று 'மண்' மோகன் சப்பைக்கட்டுகளை விட கேவலமாக சப்பைக்கட்டு கட்டுகிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;.&lt;br /&gt;&lt;strong&gt;இதை விட அபாயகரமானது கோமாளியின் ' 2020 வல்லரசு' கனவு !&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;.&lt;br /&gt;.நாட்டின் நிலை என்னவென்றே தெரியாமல் பேசுகிறார் கலாம். மறுகாலனியாதிக்கத்துக்கு உதரணமாக சென்னையை எடுத்துக் கொண்டால் -&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;சென்னை குடிசைகளில் 86% பேர் ஒரு வேளைதான் சாப்பிட்டு வருகிறார்கள்.. &lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;44% குடிசைப்பெண்கள் ரத்த சோகையால் செத்துக்கொண்டிருக்கிறார்கள்...&lt;br /&gt;ஆட்சியாளர்களோ நிமிட்ஸ் கப்பலில் வந்திறங்கும் அமெரிக்க கொலையாளிகளுக்கு கோடம்பாக்கத்து துணைநடிகைகளைக் கூட்டிக்கொடுத்துக் காவல் நிற்கிறார்கள் &lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;சென்னை குடிசைகளில் 21 சதவீதம் இளைஞர்களுக்கு ஒரு வேளை பட்டினிதான் பரிசாகக் கிடைக்கிறது. &lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;நகர விரிவாக்கம் என்று அவர்களில் 75000 குடும்பங்களை சென்னையை விட்டுத் துரத்த உத்தரவு போடுகிறது உலக வங்கி..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;a href="http://bp2.blogger.com/_Lkyn-bv2oUY/Rt0nU5lc7kI/AAAAAAAAAGw/bfjLZQw0m84/s1600-h/kalam+2.jpg"&gt;&lt;/a&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://bp2.blogger.com/_lh78FA00hMw/RuFulqfJNKI/AAAAAAAAAAs/QhnolTIorf0/s1600-h/kalam%2B2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5107485045753984162" style="CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_lh78FA00hMw/RuFulqfJNKI/AAAAAAAAAAs/QhnolTIorf0/s200/kalam%252B2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்ப வேலை கொடு என்கிற மக்களை பார்த்து அணுகுண்டு தர்றேன் என்கிறார்கள் ஆட்சியாளர்கள்; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கனவு காணச்சொல்லுகிறார் கலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட கோமாளியின் யோசனைகளை வைத்தும் சிலர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்க (மக்களை கொள்ளையிட) கிளம்பி இருப்பது; கலாம் ஒப்புதல் வாக்குமூலத்தை விட நாட்டிற்கு அவர் ஏற்படுத்திய '2020' அபாயம் பயங்கரமானது என்பதை காட்டுகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;நன்றி:&lt;a href="http://blackboards.blogspot.com/2007/08/123.html"&gt;கோபா&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;br /&gt;Related:&lt;/div&gt;&lt;div align="right"&gt;..&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;a href="http://blackboards.blogspot.com/2007/08/123.html"&gt;அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;.&lt;br /&gt;&lt;a href="http://blackboards.blogspot.com/2007/08/123_27.html"&gt;123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;..&lt;a href="http://www.tamilcircle.net/unicode/puthiyakalacharam/2007/may/may_2007_02.html"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;a href="http://poarmurasu.blogspot.com/2007/08/60_15.html"&gt;60 ஆண்டு கால சுதந்திரம் யாருடைய நலன்களுக்காக பயன்பட்டு இருக்கிறது !!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://kedayam.blogspot.com/2007/08/blog-post_31.html"&gt;மலபார் பன்னாட்டு கப்பல் பயிற்சியும் திரிபுவாதி சந்திப்பின் பித்தலாட்ட புரட்சியும்&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-1211057322830427291?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/1211057322830427291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/1211057322830427291'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2007/09/blog-post_07.html' title='நான் விஞ்ஞானி இல்லை கோமாளிதான் !! கலாம்-இன் ஒப்புதல் வாக்குமூலம் !!'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_lh78FA00hMw/RuFuk6fJNJI/AAAAAAAAAAk/zpx6qAlkZ-g/s72-c/kalam.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-4903681313448220123</id><published>2007-09-04T22:05:00.000-07:00</published><updated>2007-09-04T22:07:09.276-07:00</updated><title type='text'>உங்களது எதிர்காலத்துக்காகவே இதைச் செய்கிறேன் ? - மண்மோகன் !!</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://bp1.blogger.com/_lh78FA00hMw/Rt45TKfJNII/AAAAAAAAAAc/wxdeEYxwU-g/s1600-h/manmohan-n-deal.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5106582028880000130" style="CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_lh78FA00hMw/Rt45TKfJNII/AAAAAAAAAAc/wxdeEYxwU-g/s320/manmohan-n-deal.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p align="right"&gt;Related:..&lt;br /&gt;&lt;a href="http://blackboards.blogspot.com/2007/08/123.html"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;.&lt;/span&gt;&lt;a href="http://blackboards.blogspot.com/2007/08/123_27.html"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#ff0000;"&gt;..&lt;/span&gt;&lt;a href="http://www.tamilcircle.net/unicode/puthiyakalacharam/2007/may/may_2007_02.html"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://poarmurasu.blogspot.com/2007/08/60_15.html"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;60 ஆண்டு கால சுதந்திரம் யாருடைய நலன்களுக்காக பயன்பட்டு இருக்கிறது !!&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://kedayam.blogspot.com/2007/08/blog-post_31.html"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மலபார் பன்னாட்டு கப்பல் பயிற்சியும் திரிபுவாதி சந்திப்பின் பித்தலாட்ட புரட்சியும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div align="right"&gt;&lt;span style="color:#ff0000;"&gt; நன்றி:&lt;a href="http://blackboards.blogspot.com/2007/08/123.html"&gt;கோபா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-4903681313448220123?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/4903681313448220123'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/4903681313448220123'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2007/09/blog-post_04.html' title='உங்களது எதிர்காலத்துக்காகவே இதைச் செய்கிறேன் ? - மண்மோகன் !!'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_lh78FA00hMw/Rt45TKfJNII/AAAAAAAAAAc/wxdeEYxwU-g/s72-c/manmohan-n-deal.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-7723781033221987529</id><published>2007-09-04T20:22:00.000-07:00</published><updated>2007-09-04T08:29:23.344-07:00</updated><title type='text'>123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !</title><content type='html'>&lt;div align="justify"&gt;பிரணாப் முகர்ஜி போட்ட கள்ளத்தனமாக இராணுவ ஒப்பந்தம் 2005-இலேயே அம்பலமாகிவிட்டது. அமெரிக்காவின் ஆணைப்படிதான் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது என்பதும் அடுத்து அம்பலமானது. எனினும் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அப்போதெல்லாம் மார்க்சிஸ்டுகள் திரும்பப் பெறவில்லை. மாறாக, அமெரிக்க இராணுவமும் இந்திய இராணுவமும் மே.வங்களத்திலேயே கூட்டு போர் ஒத்திகை நடத்துவதற்கு போலீசு பாதுகாப்புக் கொடுத்தாரக்ள்.&lt;br /&gt;..&lt;br /&gt;"அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு எதிராகப் எதிராகப் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்போவதாக" என்ற சென்ற ஆண்டு பூச்சாண்டி காட்டினார் பிரகாஷ் காரத். "அப்படி தீர்மானம் கொண்டு வந்தால் இந்த அரசே இருக்காது" என்று பிரணாப் முகர்ஜி மார்க்சிஸ்டுகளை மிரட்டினார். உடனே சரணடைந்தார்கள்.இன்றைக்கு சவடால் அடிக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"உலகமயமாக்கத்தை எதிர்க்கவில்லை, அது மனிதமுகத்துடன் இருக்கவேண்டும்", "சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்க்கவில்லை, விவசாயிகளுக்கு போதுமான நட்ட ஈடு கொடுத்து நிலத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்". "பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்குவதை எதிர்க்கவில்லை, தொழிலாளர்களின் வேலைக்கு உத்திரவாதம் தரவேண்டும்" - இதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல். இப்போது , "அணுசக்தி ஒப்பந்தம் வேண்டாம் என்று சொல்லவில்லை, நாட்டின் இறையாண்மைக்கு பெரும் பாதிப்பு வந்துவிடக் கூடாது" என்று பசப்புகிறாரக்ள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"தனிப் பெரும்பான்மை இல்லாத ஒரு சிறுபான்மை அரசு துரோகத்தனமான ஒப்பந்தத்தைத் திருட்டுத்தனமாக இந்திய மக்கள் மேல் திணித்திருக்கிறது. இந்த அரசைக் கவிழ்ப்பதில் என்ன குற்றம்?" என்று நாடாளுமன்ற அரசியலின் வரம்புக்குட்பட்டு கேள்வி எழுப்பும் தைரியமும்கூட இவர்களுக்கு இல்லை.&lt;br /&gt;..&lt;br /&gt;"இந்த அரசு நிலைக்குமா என்பதை நாங்கள் ஏன் சொல்ல வேண்டும், அதை காங்கிரசு முடி செய்து கொள்ளட்டும்" என்று பேடித்தனமாக மழுப்புகிறார்கள்.&lt;br /&gt;..இந்த பசப்பல்களுக்கும், மழுப்பல்களுக்கும் காரணம் இருக்கிறது. "பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் சலுகைகளை வாரி வழங்குவதன் மூலம் தான் நாட்டைத் தொழில்மயமாக்கி முன்னேற்ற முடியும்" என்ற கருத்தில் மன்மோகனுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.அதனால்தான் சிங்கூரிலும் நந்திக்கிராமிலும் எத்தகைய அட்டூழியங்கள் நடந்தாலும் மார்க்சிஸ்டுகளுக்குக் கொள்கை பூர்வமாக ஆதரவுக் கரம் நீட்டுகிறார் &lt;a href="http://i160.photobucket.com/albums/t183/karumpalakai/bush---dog.jpg"&gt;மன்மோகன் சிங்,&lt;/a&gt; " அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்குமாறு புத்ததேவைத் தொலைபேசியில் கூப்பிட்டு உரிமையோடு கோரிக்கை வைக்கிறார்.கட்சித் தலைமை கூடி முடிவெடுப்பதற்கு முன்னதாகவே "காங்கிரசு அரசை கவிழ்க்க மாட்டோம்" என்று முந்திக் கொண்டு அறிக்கை விடுகிறார் ஜோதிபாசு. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அது மட்டுமல்லல் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் முகம் சுளித்து வருத்தப்படும் படியான காரியம் எதையும் மார்க்சிஸ்டுகள் ஒருக்காலும் செய்ய மாட்டார்கள்.மேலும், அமெரிக்காவின் வால் மார்ட்டையும் கொலைகார யூனியன் கார்பைடையும் மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க பாக்கு வைத்து அழைக்கும் மார்க்சிஸ்டு கட்சி, அமெரிககாவுக்கு எதிராக அத்து மீறிப் பேச முடியுமா? அதனால்தான் அடக்கி வாசிக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"முழுவதும் நனைந்த பின் முக்காடு எதற்கு?" என்கிறார் மன்மோகன் சிங். "முக்காட்டை எடுப்பதற்கு மட்டும் நாங்கள் அனும்திக்கவே மாட்டோம்" என்று முழங்குகிறார்கள் மார்க்சிஸ்டுகள் இதுதான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருவருக்கும் உள்ள 'கொள்கை' வேறுபாடு.இன்றைக்கு 'பாஸ்' பொத்தானைத்தான் அமுக்கினோம் என்கிறார் யெச்சூரி.நெருக்கடி எப்ப வந்தது என்று கேட்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவர்களுடைய வலைப்பதிவர் சந்திப்பு சொல்கிறார்...இந்த ஒப்பந்தமே நாங்கள் எதிர்த்தது (?) காரணமாகத்தான் மக்களுக்கு தெரியவந்துருக்கிறது என்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இது குறித்து தோழர் சந்திப்புக்கு சின்ன கட்டபொம்மன் அவர்கள் போட்ட பதில் பின்னூட்டத்தை கருத்து சுதந்திரம் மிக்க சந்திப்பு அவர்கள் பிரசுரிக்காமல் விட்டதால் அதனை இங்கு இணைத்துள்ளோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தோழர் சந்திப்பு அவர்களே!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அணு சக்தி ஒப்பந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்தியதில் இடதுசாரிகள் எனக் கருதிக்கொள்பவர்களின் பங்களிப்பை ஒத்துக்கொள்ளும் முன் ஒரு விசயம்.. இது ஏதோ தனியானதோர் ஒப்பந்தம் போலவும் இதற்கும் அமெரிக்க ராணுவ உடன்பாட்டுக்கும் சம்பந்தமில்லாதது போலவும் தோற்றத்தை உருவாக்குவது ஏன்? 2005இலேயே அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது..அதன் தொடர்ச்சியாகத்தானே 123? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதெல்லாம் ஏதோ இன்றைக்குதான் தெரிந்தது போல பாராளுமன்றத்தில் சவடால் அடித்தது தவிர போலிகள் சாதித்தது என்ன?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கடந்த 2 ஆண்டுகளாக இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லாமல் இருந்தது ஏன்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நாட்டை அடிமையாக்குகிறது இந்த அரசு என்பது தெளிவான பின்னும் ஆதரவை திரும்பப்பெறுவதில் என்ன தயக்கம்? தேர்தலை சந்திக்கத் தயங்குவதுதானே? வங்காள விவசாயிகள் சிந்திய ரத்தம் வரும் தேர்தலில் காவு கேட்டு விடும் எனும் பயமா? காரத்தும், யெச்சூரியும் மாத்தி மாத்தி அடித்த சவடால்கள் கடைசியில் "வாபஸ் பெறுவதைப் பற்றி காங்கிரசு முடிவெடுக்கட்டும்" என்று பிளேட்டையே மாத்திப் போட்டதைப் பார்க்கும்போது, தப்பித்தவறி யெச்சூரியோ, காரத்தோ கோடம்பாக்கம் பக்கம் வந்தார்களென்றால் வடிவேலுவின் மார்க்கெட் சரிந்து விடும் என்பது நிச்சயம்! &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;10 Comments:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;a name="c9034356470764880542"&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.blogger.com/profile/16941027358884552642" rel="nofollow"&gt;சந்திப்பு&lt;/a&gt; said...&lt;br /&gt;கம்யூனிச எதிர்ப்பு அமெரிக்க ஏஜன்டுகளே... இதோ கீழே இருக்கும் அறிக்கையை படியுங்கள்.... இடதுசாரிகள் 2005ஆம் ஆண்டு வெளியிட்ட கூட்டறிக்கை. இந்திய - அமெரிக்க இராணுவ உடன்பாட்டிற்கு எதிரானது. கண்ணை மூடிக் கொண்டு கம்யூனிச அவதூறை பரப்புவதன் மூலம் நீங்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகளாகி விடமுடியாது. காட்டுக்குள்ளே இருப்பவர்களக்கு நாட்டுக்குள் நடப்பது என்ன வென்று புரியாது. அதனால்தான் கல்லை கண்ணாடி வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு எரிகிறீர்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;LEFT PARTIES PROTEST INDO-US AGREEMENT Reject This Framework Of Indo-US Relations: Karat Characterising the new framework for India-US defence relationships as against the security and ...........................................&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a title="comment permalink" href="http://blackboards.blogspot.com/2007/08/123_27.html#9034356470764880542"&gt;3:57 PM&lt;/a&gt; &lt;a title="Delete Comment" style="BORDER-RIGHT: medium none; BORDER-TOP: medium none; BORDER-LEFT: medium none; BORDER-BOTTOM: medium none" href="http://www.blogger.com/delete-comment.g?blogID=31282524&amp;postID=9034356470764880542"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;a name="c1122474878008422452"&gt;&lt;/a&gt;சின்ன கட்டபொம்மன் said... &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;சந்திப்பு வலைதளத்தில் அணுசக்தி ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பதிவிற்கு நான் மறுப்பெழுதி,சந்திப்பு பிரசுரிக்க மறுத்த பின்னூட்டத்தை இங்கே வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;################################&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தோழர் சந்திப்பு அவர்களே!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அணு சக்தி ஒப்பந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்தியதில் இடதுசாரிகள் எனக் கருதிக்கொள்பவர்களின் பங்களிப்பை ஒத்துக்கொள்ளும் முன் ஒரு விசயம்.. இது ஏதோ தனியானதோர் ஒப்பந்தம் போலவும் இதற்கும் அமெரிக்க ராணுவ உடன்பாட்டுக்கும் சம்பந்தமில்லாதது போலவும் தோற்றத்தை உருவாக்குவது ஏன்? 2005இலேயே அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது..அதன் தொடர்ச்சியாகத்தானே 123?இதெல்லாம் ஏதோ இன்றைக்குதான் தெரிந்தது போல பாராளுமன்றத்தில் சவடால் அடித்தது தவிர போலிகள் சாதித்தது என்ன?கடந்த 2 ஆண்டுகளாக இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லாமல் இருந்தது ஏன்?நாட்டை அடிமையாக்குகிறது இந்த அரசு என்பது தெளிவான பின்னும் ஆதரவை திரும்பப்பெறுவதில் என்ன தயக்கம்? தேர்தலை சந்திக்கத் தயங்குவதுதானே? வங்காள விவசாயிகள் சிந்திய ரத்தம் வரும் தேர்தலில் காவு கேட்டு விடும் எனும் பயமா? காரத்தும், யெச்சூரியும் மாத்தி மாத்தி அடித்த சவடால்கள் கடைசியில் "வாபஸ் பெறுவதைப் பற்றி காங்கிரசு முடிவெடுக்கட்டும்" என்று பிளேட்டையே மாத்திப் போட்டதைப் பார்க்கும்போது, தப்பித்தவறி யெச்சூரியோ, காரத்தோ கோடம்பாக்கம் பக்கம் வந்தார்களென்றால் வடிவேலுவின் மார்க்கெட் சரிந்து விடும் என்பது நிச்சயம்!################################### &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;&lt;a title="comment permalink" href="http://blackboards.blogspot.com/2007/08/123_27.html#1122474878008422452"&gt;4:29 PM&lt;/a&gt; &lt;a title="Delete Comment" style="BORDER-RIGHT: medium none; BORDER-TOP: medium none; BORDER-LEFT: medium none; BORDER-BOTTOM: medium none" href="http://www.blogger.com/delete-comment.g?blogID=31282524&amp;postID=1122474878008422452"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a name="c981591773746777729"&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.blogger.com/profile/13651521686274350021" rel="nofollow"&gt;கோபா&lt;/a&gt; said... &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சந்திப்பு...மே.வங்காளத்துல 15 பேரை சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்தி சென்னை பகுதியில் பலத் தெருமுனை கூட்டங்கள் போட்டு பேசத் தெரியுது.ஆனா நாட்டை அடமானம் வைக்கிற ஒப்பந்தத்தை எதிர்க்குறோம் என்று அறிக்கை மட்டும் விட்டுட்டு பாருங்க என்கிறீர்களே...மக்களிடம் இந்த ஒப்பந்தத்தை அம்பலப்படுத்த விடாமல் தடுத்த சக்தி எது?&lt;br /&gt;&lt;a title="comment permalink" href="http://blackboards.blogspot.com/2007/08/123_27.html#981591773746777729"&gt;4:59 PM&lt;/a&gt; &lt;a title="Delete Comment" style="BORDER-RIGHT: medium none; BORDER-TOP: medium none; BORDER-LEFT: medium none; BORDER-BOTTOM: medium none" href="http://www.blogger.com/delete-comment.g?blogID=31282524&amp;postID=981591773746777729"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;&lt;a name="c2047169398144798520"&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.blogger.com/profile/13651521686274350021" rel="nofollow"&gt;கோபா&lt;/a&gt; said...&lt;br /&gt;மக்களிடம் இந்த ஒப்பந்தத்தை அம்பலப்படுத்த விடாமல் உங்களை தடுத்த சக்தி எது ?&lt;br /&gt;&lt;a title="comment permalink" href="http://blackboards.blogspot.com/2007/08/123_27.html#2047169398144798520"&gt;5:05 PM&lt;/a&gt; &lt;a title="Delete Comment" style="BORDER-RIGHT: medium none; BORDER-TOP: medium none; BORDER-LEFT: medium none; BORDER-BOTTOM: medium none" href="http://www.blogger.com/delete-comment.g?blogID=31282524&amp;postID=2047169398144798520"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a name="c6360218116447263220"&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.blogger.com/profile/16941027358884552642" rel="nofollow"&gt;சந்திப்பு&lt;/a&gt; said... &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;கோபா இந்திய நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இந்த விசயத்திற்காக நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டம் - பிரச்சார இயக்கங்களை நடத்தி வருகிறோம். மேலும் நாளைய தினம் தமிழகத்தில் நடைபெறும் மறியல் இயக்கத்தின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று இந்த உடன்பாடு. எங்களைப் பொறுத்தவரை தத்துவமும் - நடைமுறையும் இணைந்தே இருக்கும்.&lt;br /&gt;&lt;a title="comment permalink" href="http://blackboards.blogspot.com/2007/08/123_27.html#6360218116447263220"&gt;5:33 PM&lt;/a&gt; &lt;a title="Delete Comment" style="BORDER-RIGHT: medium none; BORDER-TOP: medium none; BORDER-LEFT: medium none; BORDER-BOTTOM: medium none" href="http://www.blogger.com/delete-comment.g?blogID=31282524&amp;postID=6360218116447263220"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;&lt;a name="c6845609217719063174"&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.blogger.com/profile/13651521686274350021" rel="nofollow"&gt;கோபா&lt;/a&gt; said... &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சந்திப்பு,2 ஆண்டுகளாக 123 ஒப்ப்ந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்த என்ன செய்தீர்கள் என்று கேட்டால்; போன வாரம் நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டம் போட்டோம் என்கிறீர்கள்.அதுதான் தெரிந்ததுதானுங்க, இப்பத்தான் எதிர்க்கிறீரக்ள் அதுகூட சும்மாதான் என்று தானுங்க நாங்க சொல்கிறோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நேற்று நிலவரம் தெரியுமா !! &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;காங்கிரசுடன் இடதுசாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை முடிவில் 'கருத்து வேறுபாட்டை போக்க கூட்டுகுழு' அமைக்க முடிவு என்று அறிவித்து உள்ளனர்.அடிமைச் சாசனம் என்று ஒத்துகொள்கிறீர்கள், அதுல திருத்தம் பண்ண 'மண்'மோகனும் சரி அவருடைய பாஸ் புஷ்-ம் சரி ஏத்துக்கிற மாட்டோம் என்று தெளிவுபட சொல்லிட்டாங்க.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதுனால கூட்டுக்குழு- வின் நோக்கம் என்ன?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பி.ஜே.பி நேற்றே சொல்லிட்டார்கள் 'நாங்க 123 யை எதிர்க்க மாட்டோம்' என்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உங்களால் அப்படி நேரடியாக சொல்ல முடியாது என்பதால் கூட்டுகுழு, அது, இது என்று பசப்புகிறீர்கள்.&lt;br /&gt;&lt;a title="comment permalink" href="http://blackboards.blogspot.com/2007/08/123_27.html#6845609217719063174"&gt;9:14 AM&lt;/a&gt; &lt;a title="Delete Comment" style="BORDER-RIGHT: medium none; BORDER-TOP: medium none; BORDER-LEFT: medium none; BORDER-BOTTOM: medium none" href="http://www.blogger.com/delete-comment.g?blogID=31282524&amp;postID=6845609217719063174"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;a name="c1870335420091708773"&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.blogger.com/profile/06297821975329283078" rel="nofollow"&gt;பாவெல்&lt;/a&gt; said...&lt;br /&gt;தோழர் கட்டபொம்மன்எதுக்கு இந்த 'சந்திப்பு' கோமாளிக்கு 'தோழர்'என்ற மதிப்புக்குறிய வார்த்தைகளையெல்லாம்பயன் படுத்துகிறீர்கள்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சந்திப்பு ஒரு கூலிக்குமாரடிக்கும் "அப்பாவி"அவருக்கு டாடாஸ்டுகளின்நிலைபாடுகளை கூட சரியாகவிளக்கி பேசத் தெரியாது,கேட்டு தான் சொல்வார்.CPM கட்சியில் உள்ள உண்மையானதொன்டனுடைய உணர்வை,அந்த தலமையின் துரோகத்தனத்தைஅறியாத 'தோழர்களின்' உணர்வை நாம்சந்திப்பிடம் எதிர்பார்க்க கூடாது.ஏனெனில் சந்திப்பு CPM என்கிற தனியார்நிறுவனத்தில் "தொழிலாளி"யாக பணிபுரிகிறார்.எனவே அவருக்கு தெரிந்த "அமெரிக்க ஏஜென்ட், காடு,துப்பாக்கி, நக்சலைட்" போன்ற வார்த்தகளை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பார் அப்ப தானே அவருக்கு"கூலி" கிடைக்கும்.எனவே நான் சொல்ல வருவது என்ன என்றால்,அண்ணன் சந்திப்புக்கு நாம் புரிய வைப்பதற்குஒன்றுமே இல்லை என்பது தான் !&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஏம்பா சந்திப்பு நீம் பாட்டுக்கு ஏன் தத்துவம், நடைமுறைன்னெல்லாம்பேசிக்கிட்டிருக்க,இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா தெரியல ?&lt;br /&gt;&lt;a title="comment permalink" href="http://blackboards.blogspot.com/2007/08/123_27.html#1870335420091708773"&gt;10:00 PM&lt;/a&gt; &lt;a title="Delete Comment" style="BORDER-RIGHT: medium none; BORDER-TOP: medium none; BORDER-LEFT: medium none; BORDER-BOTTOM: medium none" href="http://www.blogger.com/delete-comment.g?blogID=31282524&amp;amp;postID=1870335420091708773"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a name="c1401358319838066295"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-7723781033221987529?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/7723781033221987529'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/7723781033221987529'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2007/09/123_04.html' title='123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-1914763085983913828</id><published>2007-09-04T15:21:00.000-07:00</published><updated>2007-09-04T03:25:00.898-07:00</updated><title type='text'>அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://i160.photobucket.com/albums/t183/karumpalakai/bush---dog.jpg"&gt;&lt;img style="WIDTH: 200px; CURSOR: hand" alt="" src="http://i160.photobucket.com/albums/t183/karumpalakai/bush---dog.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசி 70,000 மக்களைக் கொன்று குவித்ததுடன் இன்றுவரை அங்கே பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாகப் பிறக்கும் அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது அமெரிக்கா. அதற்கு 3 நாட்களுக்குப் பிறகு இன்னொரு ஜப்பானிய நகரமான நாகசாகியில் தனது கொலைவெறியை அரங்கேற்றி 74,000 மக்களைக் கொன்று குவித்தது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மனித குலத்தையே வேரறுக்கக் கூடிய இந்த அணு ஆயுதத்தை முதன்முதலில் மனிதன் மீது பிரயோகித்த பெருமையைத் தன்னுடைய தாக்கிக் கொண்டாலும், அந்த அணுசக்தியிலிருந்து பலன் பெற்று மின்சாரம் தயாரிக்கும் வழிமுறை அமெரிக்காவிடம் இல்லை. சோவியத் ரஷ்யாவில்தான் 1954 ஆம் ஆண்டு முதன் முதலில் அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1951 ல் இருந்தே இந்தியாவில் அணுசக்தி குறித்த ஆராய்ச்சிகளையும், அணு உலைகளை அமைத்து அணுசக்தியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவது பற்றியும் இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என அழைக்கப்படும் ஹோமி பாபா திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அப்போதிருந்தே உலக அளவில் அணுசக்தித் துறையில் மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டி போட்டு வளர்ந்து வருகிறது. இன்றளவும் அதிவேக ஈனுலைகள் என்ற அணுசக்தித் தொழில்நுட்பத்தில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. தோரியம் எனும் தனிமத்தைக் கொண்டு இயங்கக் கூடிய இந்த "அதிவேக ஈனுலைகள்" யுரேனியம் கொண்டு இயங்கும் மற்ற நாட்டு அணு உலைகளை விட 600 மடங்கு அதிக சக்தியைக் கொண்டது என்று முன்னாள் இந்திய அணுசக்தித்துறைத் தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இது மட்டுமின்றி வேறெந்த நாட்டின் உதவியுமின்றி சொந்தநாட்டிலேயே தயாரித்து, இதுவரை இரண்டு முறை அணு குண்டு வெடித்துச் சோதனை நடத்தியுள்ளது இந்தியா.இவ்வாறு மின்சாரத் தேவைக்கான அணுசக்தி ஆராய்ச்சி தொடங்கி, பக்கத்து நாடுகளை மிரட்டி அணுகுண்டு வெடிப்பது வரை இந்தத் துறையில் சொந்தத் தொழில்நுட்பத்தையே இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ரஷ்யாவின் உதவியுடன் கல்பாக்கத்திலும், அமெரிக்காவின் உதவியுடன் தாராப்பூரிலும் அணுமின் நிலையங்களை நிறுவினாலும் அவை முற்றிலும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாகவே இருந்துள்ளன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;..ஆனால் இப்போது '123 ஒப்பந்தம்' என்ற பெயரில் அமெரிக்காவுடன் இந்தியா செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆப்பறையும் விதத்தில் வந்துள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்ததின்படி அடுத்த 40 ஆண்டுகளுக்குத் இந்தியா அமெரிக்காவிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்ளும். அப்படி இறக்குமதி செய்யும் யுரேனியத்தைக் கொண்டு மின்சாரம் மட்டுமே தயாரிக்க வேண்டும், அணுகுண்டு தயாரிக்கக் கூடாது. மீறி அணுகுண்டு தயாரித்தால் அமெரிக்கா கொடுத்த யுரேனியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும். இந்த யுரேனியத்தை நம்பி இந்தியா பல லட்சம் கோடி செலவில் அணு உலைகளை உருவாக்கியிருந்தாலும் அது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அணுகுண்டு வெடிக்காவிட்டாலும் அமெரிக்காவின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும், வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் இந்தியா ஒத்துழைப்புத் தரவேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஏற்கனவே இரண்டு முறை ஈரான் -க்கு எதிராக ஐ.நா வில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா வாக்களித்து உள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்போது ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு தாக்குதல் தொடுக்குமானால் அப்போது இந்தியா கூலிப்படை அனுப்பி உதவ வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அதேபோல மற்ற நாடுகள் அனுமதிக்காத 'நிமிட்ஸ்' போர்க் கப்பலை இந்தியக் கடலோரத்தில் இந்தியா அனுமதித்து உள்ளது. அந்த கப்பல் போர்க்கழிவுகளை கொட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதேபோல எதிர்காலத்திலும் இதுபோன்ற கப்பல்களை தங்கு தடையின்றி வந்து போக அனுமதிக்க அமெரிக்கா நிர்பந்திக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அணு ஆராய்ச்சியை இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு, குறைந்த விலைக்கு நடத்தித் தர அமெரிக்கா கோருகிறது.அணு உலைகளை கண்காணிக்க நிபுணர்குழுவினை இந்தியாவுக்குள் வந்து போக அணுமதிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது.. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட நாசகார, மோசடியான ஒப்பந்தத்தை தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்ட யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால் அமெரிக்க அடிமை நாயாய் சேவகம் செய்யும் மன்மோகன் சிங் இதனை ஏற்று கொண்டுவிட்டார். மக்களையே சந்திக்காமல், தேர்தலிலேயே நிற்காமல் இந்த நாட்டின் பிரதம மந்திரியாய் உட்கார்ந்து கொண்டு இப்படி தாய்நாட்டை அமெரிக்காவுக்கு விலை பேசியுள்ளார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"நீ என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள், உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள். ஆனால் ஒப்பந்தத்தை திரும்ப பெற முடியாது. குறைந்த பட்சம் இது குறித்து விவாதம் செய்ய முடியாது." என்று மன்மோகன் சிங் கூறிகிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அமெரிக்க எஜமானன் போட்ட உத்தரவை இந்திய அடிமைகள் பரிசீலிப்பதா என்று இவர் விடும் அறிக்கைகளைப் படிக்கும் போது சிறிதளவேனும் தேசப்பற்றுடைய எவருக்கும் ரத்தம் கொதித்துப் போகும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதையெல்லாம் விட்டுவிட்டு அணு குண்டு வெடிக்க முடியாது என்று கூறி இதனை எதிர்க்கிறது பா.ஜ.க. இந்த தேசவிரோத ஒப்பந்தம் நிறைவேறனுமா, வேண்டாமா என்று இவர்கள் கூறுவதில்லை. என்ன செய்ய முடியும், காங்கிரஸ் அல்சேஷன் என்றால் பா.ஜ.க டாபர்மேன் இல்லையா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்தத்தை குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவைத்ததே வாஜ்பாயிதான் என்று குட்டை உடைத்துவிட்டார் எம்.கே.நாராயணன் (இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) அத்தோடு இவர்களின் குலைக்கும் சத்தம் ஓய்ந்துவிட்டது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"ஒப்பந்ததை ரத்து செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டிய போலிக் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து" மன்மோகன் சிங் "உங்களால் என்ன செய்ய முடியும், ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்வீர்கள்; வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எனது எஜமானனுக்குச் சேவை செய்ய முடியாத ஆட்சி இருந்தாலென்ன போனால் என்ன கருதுகிறார் போலும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தப் பிரதமர் பதவி அமெரிக்கா எனக்குப் போட்ட பிச்சை, 123 ஒப்பந்தத்திற்காக அதனை இழக்கவும் நான் தயங்கமாட்டேன் என்று கூறிய உடன் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு பா.ஜ.க வின் மதவெறி நினைவுக்கு வர ஆட்சியையெல்லாம் கவிழ்க்க மாட்டோம் சும்மா இது பற்றி விவாதம் மட்டும் பண்ணினால் போதும், ஓட்டெடுப்பு கூட வேண்டாம் என்று இறங்கிவந்தார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால் மன்மோகன் சிங்கோ தான் பிடித்த அமெரிக்க உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டு சிறிது கூட இறங்காமல் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என விவாதம்கூட செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உடனே 'தோழர்கள்' கடுமையான விளைவுகள் நேரிடும் என்று திரும்பவும் லாவணிபாட ஆரம்பித்து விட்டனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கடந்த 100 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்டு, உலகம் முழுவதிலும் பல லட்சம் மக்களைக் கொன்று குவித்த ஒரு ரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய மிருகம் அமெரிக்கா. அதன் காலடியில் நமது நாட்டை,அதன் இறையாண்மையை, நமது எதிர்காலத்தை, மற்ற நாடுகளுடன் நமது உறவை அடமானம் வைக்கும் அடிமைச்சாசனம்தான் 123 ஒப்பந்தம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த உண்மை எல்லா அரசியல்வாதிக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;நன்றி:&lt;a href="http://blackboards.blogspot.com/2007/08/123.html"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கோபா&lt;/span&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-1914763085983913828?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/1914763085983913828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/1914763085983913828'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2007/09/123.html' title='அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-2602586272000726447</id><published>2007-09-02T16:11:00.000-07:00</published><updated>2007-09-02T07:13:38.780-07:00</updated><title type='text'>அணுசக்தி ஒப்பந்தம்:அம்மணமானது 'தேசியம்' !</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://bp1.blogger.com/_lh78FA00hMw/RtrE9KfJNHI/AAAAAAAAAAU/WMiAdZVtPDc/s1600-h/123-amanam.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5105609682643924082" style="CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_lh78FA00hMw/RtrE9KfJNHI/AAAAAAAAAAU/WMiAdZVtPDc/s320/123-amanam.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p align="right"&gt;நன்றி: &lt;a href="http://puthagapiriyan.blogspot.com/2007/09/2007.html"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"புதிய ஜனநாயகம்" செப் 2007&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_lh78FA00hMw/RtrExKfJNGI/AAAAAAAAAAM/EZAm4-jDzBs/s1600-h/123-amanam.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-2602586272000726447?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/2602586272000726447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/2602586272000726447'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2007/09/blog-post_2142.html' title='அணுசக்தி ஒப்பந்தம்:அம்மணமானது &apos;தேசியம்&apos; !'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_lh78FA00hMw/RtrE9KfJNHI/AAAAAAAAAAU/WMiAdZVtPDc/s72-c/123-amanam.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-5751033504275767889</id><published>2007-09-02T13:05:00.000-07:00</published><updated>2007-09-02T07:09:24.023-07:00</updated><title type='text'>அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் ! அடிமை அடியாள் அணுசக்தி !!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/n-deal-india.jpg"&gt;&lt;img style="WIDTH: 200px; CURSOR: hand" alt="" src="http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/n-deal-india.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a name="9074613024401763054"&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அடிமையாக மாட்டோம்,அடியாளாக மாட்டோம் !&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மறுகாலனியாக்கம் என்ற படுகுழிக்குள் இந்தியாவைத் தள்ளிய காட் ஒப்பந்தமும் இப்படித்தான் நம் மீது திணிக்கப்பட்டது, 1994-இல் அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் ஒரு அதிகாரிகள் குழுதான் அதிலும் கையெழுத்திட்டது. பிறகு நாடாளுமன்றம் அதற்குத் தலையாட்டியது. அந்த மறுகாலனியாக்கம்தான் இன்று நாள் தோறும் மக்களை மரணக்குழியில் தள்ளி வருகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மறுகாலனியாதிக்க அடிமைத்தத்தின் கோரமான உச்சக் கட்டம்தான் இந்த அனுசக்தி ஒப்பந்தமும் இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தமும்! மறுகாலனியாதிக்கக் கொள்கை பொதுத்துறைகளைப் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரைவார்த்திருக்கிறது. விளைநிலங்களைப் பிடுங்கி பன்னாட்டு முதலாளிகளுக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறது. விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது. இப்போது அது நம்முடைய மானத்தையும், பெயரளவு இறையாண்மையையும் கூடத் காவு கேட்கிறது. ஆக்கிரமிப்பு வெறி பிடித்த அமெரிக்க வல்லரசுக்கு நம்மையும் நம் நாட்டையும் அடியாளாக மாறச் சொல்கிறது. இதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? இந்த அவமானத்தைச் சகித்துச் கொள்ளப் போகிறோமா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நாட்டுபற்றும் தன்மான உணர்ச்சியும் கொண்ட ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டும். இந்தத் துரோக ஒப்பந்தத்தை முறியடிக்கக் களத்தில் இறங்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கியெறிவோம்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அமெரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பின் ஆசியத்தளமாக இந்தியாவை மாற்றியமைப்போம்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;- வெளியீட்டில் இருந்து&lt;br /&gt;..&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;தொடர்புக்கு:&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி&lt;br /&gt;110/63,என்.எஸ்.கே சாலை,&lt;br /&gt;கோடம்பாக்கம்,&lt;br /&gt;சென்னை-600 024போன்:94448 34519&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;பிரதிகள் கிடைக்குமிடம்:.&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இரா.சீனிவாசன்&lt;br /&gt;புதிய கலாச்சாரம்&lt;br /&gt;16,முல்லைநகர் வணிக வளாகம்,&lt;br /&gt;2-வது நிழற்சாலை,&lt;br /&gt;அசோக் நகர்,&lt;br /&gt;சென்னை - 600 083&lt;br /&gt;..&lt;br /&gt;நன்கொடை ரூ 5/-&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நன்றி : &lt;a href="http://puthagapiriyan.blogspot.com/"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புத்தகப் பிரியன்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-5751033504275767889?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/5751033504275767889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/5751033504275767889'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2007/09/blog-post_1943.html' title='அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் ! அடிமை அடியாள் அணுசக்தி !!'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-7345996425485582018</id><published>2007-09-02T11:09:00.001-07:00</published><updated>2007-09-02T07:16:15.367-07:00</updated><title type='text'>அமெரிக்க விசுவாசமே அடிமையின் சுவாசம்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;அக்டோபர் 9ஆம் நாள், ஹவதேரி என்ற இடத்தில் வடகொரியா வெற்றிகரமாக அணுசக்தி சோதனையை நடத்தியது. அச்செயல் கிழக்கு ஆசியாவின் அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும் பேராபத்தானது என்றும் கடும் கண்டனத்துக்குரிய இரகசியமான அணு ஆயுதப் பரவல் என்றும் முதன்முதலாகக் குரலெழுப்பிய நாடு இந்தியாதான். அதைத் தொடர்ந்து வடகொரியாவின் அண்டை நாடுகளும், உலகின் அணு ஆயுத வல்லரசுகளும் அதை அப்பட்டமான, மிக மோசமான ஆத்திரமூட்டும் செயல் என்று வன்மையாகச் சாடின. உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு வடகொரியாவுக்கு எதிராக பல தடைகளை விதித்து, உலக வல்லரசுகளின் முன்பு மண்டியிடும்படி உத்திரவு போட்டது. வடகொரியா அதை ஏற்கவில்லை என்பது வேறு விசயம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;ஆனால், இப்போது அணுசக்தி சோதனை நடத்தியதற்காக வடகொரியாவிற்கு எதிராக முதலில் தனது கடும் எதிர்ப்பைக் காட்டியது இந்தியாதான்; 1974இல் முதன்முறையாகவும் 1998இல் மீண்டும் அணுசக்தி சோதனை நடத்தியதன் மூலம் நீண்ட காலத்துக்குப் பிறகு அணு ஆயுதப் பரவலுக்குக் காரணமாக இருந்தது இந்தியாதான்; ஆனால், ""இந்தியாவோடு வடகொரியாவை ஒப்பிடவே கூடாது, இரண்டும் வேறு வேறு வகையான செய்கைகள்'' என்று மூர்க்கமாக வாதிடும் இந்தியா,&lt;br /&gt;""இரகசியமான அணு ஆயுதப்பரவல்'' என்று சாடுகிறது. அதாவது, வடகொரியா தனது அணுசக்தி சோதனை முழுக்க முழுக்க தனது சொந்தத் தொழில்நுட்ப அடிப்படையிலானது என்று கூறியபோதிலும், அது பாகிஸ்தானுடன் கூட்டுச் சேர்ந்து நடத்தியது என்று சாதிக்கிறது, இந்தியா. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;பாகிஸ்தானைவிட எல்லா இராணுவத் துறைகளிலும் வலிமையான நாடு இந்தியா என்று மூன்று போர்களில் இந்தியாவின் மேலாண்மை நிரூபிக்கப்பட்டு விட்டது. இருந்தபோதும் பாகிஸ்தானை உருட்டி மிரட்டிப் பணிய வைக்கவும், தெற்காசியாவில் தனது பிராந்தியத் துணை வல்லரசு மேலாதிக்க விரிவாக்க நலன்களுக்காகவும் இந்தியா மீண்டும் மீண்டும் அணுசக்தி சோதனைகளை நடத்தியது. ஆனால், இந்தியாவின் இந்தச் செயல், உடனடியாகவே பாகிஸ்தானையும் அணுசக்திச் சோதனையிலும் இரண்டு நாடுகளும் மேலும் மேலும் ஆயுதக் குவிப்பு போட்டியிலும் ஈடுபடவே வழிவகுத்தன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;இப்போது இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே அணு ஆயுத முனைகளைக் கொண்ட ஏவுகணை சோதனைகளும் உற்பத்திகளும் செய்வதில் ஒருவரை ஒருவர் விஞ்சுவதற்கான போட்டியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தெற்கு ஆசிய அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளின் அணு ஆயுதஏவுகணை சோதனைகளுக்கும் உற்பத்திக்கும் எவ்வித நியாயமான காரணங்களும் இல்லாத அதேசமயம், இவ்விரு நாடுகளின் எஜமானனாகவும் அணு ஆயுத மேல்நிலை வல்லரசாகவும் உள்ள அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்வெறிதான், வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனை மற்றும் உற்பத்தி முயற்சிகளுக்கு மூலகாரணமாகவும் தூண்டுதலாகவும் இருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;கம்யூனிச சீனா மற்றும் ரசிய சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் அணு ஆயுதக் கவசத்தின் கீழ் இருந்தவரை வடகொரியா அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளில் இறங்கவில்லை. சீனாவில் முதலாளியம் நிலைநாட்டப்பட்ட பிறகு, அமெரிக்காவுடனான பனிப்போரில் சோவியத் ஒன்றியம் தோற்றுப்போன பிறகு, அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொண்ட வடகொரியா, 1985இல் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. 1992இல் சர்வதேச அணுசக்தி முகமையோடு ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டது. இதற்குக் காரணம் ஜப்பானிலும், கொரிய வளைகுடாவிலும் அமெரிக்கா குவித்து வைத்திருக்கும் அணு ஆயுதங்களை விலக்கிக் கொள்வதாக வாக்களித்தது. ஆனால் அமெரிக்கா அவ்வாறு செய்யாததோடு, வடகொரியாவில் உள்ள அணு ஆயுதம் அல்லாத வசதிகளையும் மேற்பார்வையிட வேண்டும் என்று நிர்பந்தித்து, ஆப்ஃகான், ஈராக்கோடு வடகொரியாவையும் சேர்த்து ""சாத்தான்களின் அச்சு நாடுகள்'' என்று அறிவித்தது. அமெரிக்காவின் ஆட்சி மாற்றத் திட்டத்துக்கான இலக்குகளில் ஒன்றாக வடகொரியாவை வைத்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;கொசாவோ, ஆப்ஃகான், ஈராக் என்று அடுத்தடுத்து பாசிச ஆக்கிரமிப்புப் போர்களை அமெரிக்கா தொடுத்ததோடு, வடகொரியாவும் அதன் தாக்குதலுக்கு இலக்காகும் என்று அச்சுறுத்தப்பட்டது. இந்த நிலையில் 2003ஆம் ஆண்டே அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய வடகொரியா, அணு ஆயுத சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வெற்றியும் கண்டுள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;""அணு ஆயுதப் போரில் வெல்லும் ஆற்றல் பெற்றிராத எந்தவொரு நாட்டு மக்களும் ஒரு சோகமான சாவையே எதிர்கொள்ள வேண்டி வரும்; அந்த நாட்டின் இறையாண்மை வெட்டிச் சிதைக்கப்படும். இது உலகின் பல்வேறு நாடுகளுக்கும், அமெரிக்காவின் காட்டாட்சி இரத்தம் சிந்தி புகட்டியுள்ள கசப்பான அனுபவம்'' என்று தமது அணு ஆயுதச் சோதனையை ஆறு நாட்களுக்கு முன்பே அறிவித்த வடகொரிய அயலுறவுத்துறை அமைச்சர் கூறினார். இது அமெரிக்க விசுவாசிகளான மன்மோகன் சிங்குகள் மறுக்க முடியாத அப்பட்டமான உண்மை நிலையாகும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின்படியே கூட, ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் மோசமான அச்சுறுத்தல் வரும்போது, அந்த நாடு அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதற்குத் தடையில்லை. அதன் 10வது பிரிவின்படி, ""தனது நாட்டின் அதீத நலன்களுக்குக் குந்தகம் ஏற்படும் எனில், இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தோடு தொடர்புடைய மிகமிக முக்கியமான நிகழ்வுகள் நடந்துவிட்டதாக கருதினால், எந்தவொரு நாடும் தனது தேசிய இறையாண்மையைப் பயன்படுத்தி இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம். ஒப்பந்த நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கும் மூன்று மாதங்கள் முன்னதாக அந்த நாடு தனது விலகலைக் குறித்துத் தெரிவிக்க வேண்டும்.'' இங்கே குறிப்பிடப்படும் வகையிலான பேராபத்தை எதிர் கொண்டுள்ள வடகொரியா, மூன்றாண்டுகளுக்கு முன்னதாகவே அறிவித்து, அந்த தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகி விட்டது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;ஆனால், வடகொரியாவைப் போன்றதொரு ஆபத்து எதுவும் இல்லாத இந்தியா, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தையே ஏற்காத இந்தியா, 30 ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதப் பரவலுக்குக் காரணமாக இருந்த இந்தியா, வடகொரியாவின் மிகவும் அவசியமான தற்காப்பு முயற்சியை கடுமையாகக் கண்டிக்கிறது. வடகொரியாவைப் போலவே, அமெரிக்க பாசிச ஆக்கிரமிப்புப் போர் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி முகாமையில் இந்தியா ஓட்டளித்திருக்கிறது. அதன்மூலம் அமெரிக்கா, ஈரானை உருட்டி மிரட்டவும் ஆக்கிரமிப்புப் போர்தொடுக்க சாக்குப் போக்குச் சொல்வதற்கும் துணை புரிந்திருக்கிறது. இதன் விளைவாக, ஈரானுடனான இந்தியாவுக்கான தரை வழி எண்ணெய்க் குழாய் திட்டம் முறிந்து போனபோதும், அமெரிக்க விசுவாசமே முக்கியமானது என்று கருதி அதன் நிர்பந்தத்துக்குப் பணிந்து போயுள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;அக்.9 அணு ஆயுத சோதனையின் மூலம், உலகின் அணு ஆயுத "வல்லரசு' நாடாகியிருக்கும் வடகொரியா, அந்த வரிசையில் எட்டாவது நாடுதான். ஏற்கெனவே, ஏழு நாடுகள் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் செய்து குவித்து வைத்திருக்கின்றன. இவை தவிர இருபது நாடுகளில் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் அமெரிக்கா நிறுத்தி வைத்திருக்கிறது. உலகின் பெருங்கடல்வழித் தடங்களில் கூட அமெரிக்கப் போர்க் கப்பல்கள் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் ஏராளமாகச் சுமந்து திரிகின்றன. அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் முற்றாக ஒழிப்பதற்கான வழிவகையின்றி, அணு ஆயுதப் பரவலுக்கு எதிராக வெறுங்கூச்சல் போடுவது, சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது; பாசிசப் போர் வெறிபிடித்த அமெரிக்காவுக்குத் துணை போவதுதான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;எண்பதற்கும் மேலான அமெரிக்க சி.ஐ.ஏ.வின் படுகொலை முயற்சிகளைக் கண்டும் அஞ்சாத, எண்பது வயதுக்கும் மேலான கிழவன் ஃபிடல் கேஸ்ட்ரோவும், அமெரிக்காவின் வாசலில் நின்று கொண்டு அதன் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûக்கு சவால் விடும் வெனிசுலா அதிபர் சாவேசிடம் தெரியும் நெஞ்சுரம் கண்டு உலகமே வியக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;ஆனால், இந்தியப் பிரதமர் மன்மோகனின் கோழைத்தனமும் துரோகத்தனமும் கண்டு உலகமே கைகொட்டிச் சிரிக்கிறது. ஈரானுக்கு எதிராக வாக்களிக்கும்படி அமெரிக்க அயலுறவுச் செயலர் கண்டலிசா ரைஸ் உத்தரவு போடுகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு உறுப்பினர் தேர்தலில் வெனிசுலாவுக்கு எதிராக வாக்களிக்கும்படி அதிபர் புஷ் தொலைபேசியில் கூப்பிட்டு மிரட்டுகிறார். மன்மோகன் சிங்கோ தண்டனிட்டு தலைமேற்கொண்டு செய்து முடிக்கிறார். மும்பை குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் பங்கு குறித்த ஆதாரங்களை அமெரிக்க அதிகாரிகளின் காலடியில் சமர்ப்பிக்கிறது, இந்தியா ஏதோ அமெரிக்க சி.ஐ.ஏ.வுக்குத் தெரியாத இரகசியம் போல! &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;எல்லாம் அமெரிக்காவுடனான இந்தியாவின் இராணுவ ஆயுத ஒப்பந்தங்களை குறிப்பாக, அணுசக்தி ஒப்பந்தத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் என்று மன்மோகன் சிங்கும் அவரது கோயபல்சுகளும் பிரச்சாரம் செய்கின்றனர். இந்தியாவின் இந்த ஒப்பந்தமே எவ்வளவு துரோகத்தனமானதென்று இந்திய அணுசக்தி அறிஞர்களே கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்; அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் திருத்தங்களே அதை பறைசாற்றுகின்றன (பார்க்க ஆக. 2006 புதிய ஜனநாயகம் தலையங்கம்). சரியாகச் சொல்வதானால், செத்துப் பிறந்த குழந்தையான இந்திய இறையாண்மைக்கு ""திவசம்'' கொடுக்கும் புரோகிதர் வேலையைத்தான் மன்மோகன் சிங் செய்து கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.tamilcircle.net/unicode/puthiyajananayagam/2006/nov_06/02_nov_unicode_2006.html"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;puthiyajananayagam 2006 Nov&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-7345996425485582018?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/7345996425485582018'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/7345996425485582018'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2007/09/blog-post_189.html' title='அமெரிக்க விசுவாசமே அடிமையின் சுவாசம்!'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-4878179087205322858</id><published>2007-09-02T09:42:00.000-07:00</published><updated>2007-09-02T07:01:58.155-07:00</updated><title type='text'>இந்திய – அமெரிக்க ஆணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க அடிவருடிகளின் அரிதாரம் கலைந்தது</title><content type='html'>&lt;div align="justify"&gt;இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அறிக்கை கையெழுத்தான நாளில் இருந்தே, அதனை அடிமைச் சாசனம் என அம்பலப்படுத்தி, நாம் எழுதி வருகிறோம். அதேசமயம், அமெரிக்க அடிவருடிகள் அனைவரும், ""அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை வல்லரசாக்கப் போவதாக''க் கூறி, இந்திய மக்களின் காதுகளில் பூ சுற்றி வந்தார்கள். இந்தக் கெட்டிக்காரர்களின் குட்டை, இன்று அமெரிக்காவே புட்டு வைத்து விட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னிபந்தனையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் இந்தியா அமைதிக்கான அணுசக்தி கூட்டுறவுச் சட்டம், ""இந்தியா எவ்வளவு யுரேனியத்தைக் கையிருப்பில் வைத்திருக்கலாம் என்பதில் தொடங்கி இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது முடிய அனைத்தையும் தீர்மானிக்கும் உரிமை இனி இந்திய நாடாளுமன்றத்திற்குக் கிடையாது; அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தான் உண்டு'' எனப் பச்சையாகக் குறிப்பிட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;காலனிய ஆட்சி காலத்தில் மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் மகாராணியின் கீழ் காலனிய இந்திய அரசு செயல்பட்டதைப் போல, இப்பொழுது, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் "சுதந்திர' இந்திய அரசு செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்திய நாடாளுமன்றத்துக்குக் கூடத் தெரிவிக்காமல், அமெரிக்காவில் வைத்துதான் கடந்த ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அறிக்கையில் மன்மோகன் சிங் கையெழுத்துப் போட்டார். இந்த அறிக்கை கையெழுத்தாகி (ஜூலை, 2005) ஒன்பது மாதங்கள் கழித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மார்ச் 2006இல் இந்தியாவிற்கு வந்தபொழுது, அணுசக்தி ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அப்பொழுதுதான், ""இந்தியாவில் உள்ள அணு உலைகளை, சிவில் அணு உலைகள், இராணுவ அணு உலைகள் என இரண்டாகப் பிரிக்க வேண்டும்; சிவில் அணு உலைகளை சர்வதேச அணுசக்தி முகாமையின் கண்காணிப்புக்கு உட்படுத்த இந்தியா முன்வர வேண்டும்; அணுகுண்டுகள் தயாரிக்கத் தேவைப்படும் யுரேனிய வகைகளை உற்பத்தி செய்வதைத் தடை செய்யும் பல்நாட்டு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்'' என்பன உள்ளிட்டு, அமெரிக்கா விதித்த பல்வேறு நிபந்தனைகளை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பது மறுக்க வழியின்றி அம்பலமானது. இதன் பிறகுதான், இந்திய அணு விஞ்ஞானிகள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கத் தொடங்கினர்.&lt;br /&gt;இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களைச் சமாதானப்படுத்தும் முகமாக, மன்மோகன் சிங் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே சில வாக்குறுதிகளைக் கொடுத்தார்; அணுசக்தி விஞ்ஞானிகளையும் நேரடியாகச் சந்தித்துப் பேசியதோடு, இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ""ஹைட் சட்டம்'' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமெரிக்கச் சட்டமோ, மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குப்பைக் கூடைக்குள் வீசியெறிந்து விட்டது.&lt;br /&gt;···&lt;br /&gt;""சமூகப் பயன்பாட்டுக்கான அணு ஆற்றல் தொடர்பாக இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும்; சிவில் அணு உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருளைச் செறிவூட்டுவது; கனநீரை உற்பத்தி செய்வது உள்ளிட்ட உரிமைகளை இந்தியாவிற்குத் தருவதோடு, அவற்றுக்கான தொழில்நுட்பத்தையும்; சாதனங்களையும் பெறும் உரிமை இந்தியாவிற்கு வழங்கப்பட வேண்டும்; சிவில் அணு ஆற்றல் தொடர்பாக மேலை நாடுகள் அனுபவிக்கும் அதே உரிமைகள் இந்தியாவிற்கும் கிடைக்கும் என்ற வாக்குறுதியை அமெரிக்கா வழங்க வேண்டும்'' இது, பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளுள் ஒன்று.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அணு உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருளான யுரேனியத்தைச் செறிவூட்டவும், மீண்டும் புத்தாக்கம் செய்யவும் பயன்படும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஏற்கெனவே தன்னிறைவு அடைந்துள்ள இந்தியா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவில் இருந்து முன்னேறிய தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்து கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்தது. குறிப்பாக, உள்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் யுரேனியம் இந்தியாவின் தேவைகளை ஈடு செய்ய முடியாமல் பற்றாக்குறையாக இருப்பதால், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தியபிறகு, அதனை இந்தியாவிலேயே செறிவூட்டிக் கொள்ளும் உரிமையும் கிடைக்கும் என இந்திய அரசு எதிர்பார்த்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால், அமெரிக்கச் சட்டமோ, இந்த உரிமைகளையும், இதற்கான தொழில்நுட்பத்தையும் இந்தியாவிற்கு வழங்கக் கூடாது எனத் தடை விதித்திருக்கிறது. மேலும், அமெரிக்கா உள்ளிட்டு 45 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள அணுஆற்றல் வழங்குவோர் குழுமம், இந்த உரிமையை தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விடாமல் அமெரிக்கா பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியா அமெரிக்கா இடையே அணு ஆற்றல் கூட்டுறவு தொடர்பாகப் பேச்சு வார்த்தை தொடங்கிய பொழுது, இந்தியா, ""தனது சிவில் அணு உலைகளை, தனது விருப்பப்படிதான் சர்வதேச அணு ஆற்றல் கமிசனின் கண்காணிப்புக்கு உட்படுத்தும்'' எனக் கூறியதாகவும், அதன் பின்னர்தான் தனது நிலையை மாற்றிக் கொண்டு, ""தனது சிவில் அணு உலைகளை, அவற்றின் ஆயுட்காலம் முழுவதும் எவ்வித நிபந்தனையும் இன்றி சர்வதேச அணு சக்தி முகாமையின் கண்காணிப்புக்கு உட்படுத்தச் சம்மதித்ததாகவும்'' கூறப்படுகிறது. ""இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளுக்குத் தேவைப்படும் எரிபொருளை, அந்த அணுஉலைகளின் ஆயுட்காலம் முழுவதும் வழங்குவதற்கு அமெரிக்கா உறுதியளித்த பிறகே, இந்தியா தனது நிலையை மாற்றிக் கொண்டதாக'' மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அமெரிக்கச் சட்டமோ, ""இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளை ஆயுட்காலம் முழுவதும் வழங்குவதற்கு எவ்வித உறுதியும் அளிக்காததோடு, இந்த அணு உலைகளுக்குத் தேவைப்படும் எரிபொருளை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இந்தியா இறக்குமதி செய்து சேமித்து வைக்கவும்'' தடை விதித்திருக்கிறது. மேலும், அமெரிக்காவை ஓரங்கட்டிவிட்டு, அணு ஆற்றல் வழங்குவோர் குழுமத்தைச் சேர்ந்த மற்ற நாடுகளிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய இந்தியா முயன்றால், அதனையும் தடுக்க வேண்டும் என இச்சட்டம் குறிப்பிடுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அவனின்றி ஓரணுவும் அசையாது என்பது போல, அமெரிக்காவின் விருப்பம், கண்காணிப்பின்றி, இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளை இயக்கும் சுதந்திரத்தை இந்தியாவிற்குத் தரக்கூடாது என்பதுதான் இச்சட்டத்தின் நோக்கம்.&lt;br /&gt;""அணுகுண்டு சோதனைகளை இந்தியா நடத்தியிருப்பதால், இந்தியாவிற்கு அணுஆயுத வல்லரசு என்ற தகுதி வழங்கப்பட வேண்டும்; அமெரிக்கா, ரசியா, சீனா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய ஐந்து அணு ஆயுத வல்லரசுகளை எந்தளவிற்கு சர்வதேச அணுசக்தி கமிசன் கண்காணிக்குமோ, அதைப் போலத்தான் இந்தியாவையும் கண்காணிக்க வேண்டும்; இதற்காக, சர்வதேச அணுசக்தி கமிசனில் இந்தியாவிற்கெனத் தனி விதிமுறைகளை உருவாக்க வேண்டும்'' எனக் கோரியிருப்பதாக, மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அமெரிக்கச் சட்டம் இவற்றுள் ஒன்றைக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே, இந்தியாவின் 14 அணு ஆலைகள் அணு சக்தி கமிசனின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என மன்மோகன் அளித்திருந்த வாக்குறுதிக்கு மாறாக, அணுசக்தி கமிசனின் கண்காணிப்புக்கு இந்தியா உட்படுத்தப்பட்ட பிறகுதான், ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என அமெரிக்கச் சட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;""அமெரிக்காவின் கண்காணிப்பாளர்கள் இந்திய அணு உலைகள் பக்கம் சுற்றுவதை அனுமதிக்க மாட்டோம்'' என நாடாளுமன்றத்தில் சூளுரைத்தார், மன்மோகன் சிங். அமெரிக்கச் சட்டமோ, ""அமெரிக்கா அணுசக்தித் துறையைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் இந்தியாவின் சிவில் அணு உலைகளைக் கண்காணித்து, அவை பயன்படுத்தப்படும் விதம் பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;""அமெரிக்க அதிபர், இந்தியாவின் அணுசக்தி பயன்பாடு குறித்து ஆண்டுதோறும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு நன்னடத்தைச் சான்றிதழ் தரவேண்டும்; அதன் அடிப்படையில்தான் இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும்'' என்ற நிபந்தனையை அமெரிக்கா இப்பேச்சு வார்த்தையின் தொடக்கத்திலேயே விதித்தது. இந்த நிபந்தனைக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்தும், விஞ்ஞானிகளிடமிருந்தும் வந்த எதிர்ப்பையடுத்து, மன்மோகன் சிங், ""இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என நாடாளுமன்றத்தில் வாக்குறுதி கொடுத்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அமெரிக்கச் சட்டமோ, ""சான்றிதழ்'' என்ற வார்த்தைக்குப் பதிலாக, ""மதிப்பீடு'' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு மேல், வேறெந்த சலுகையினையும் வழங்கவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;""இந்தியாவில் கட்டப்படும் புதிய அணுக்கரு உலைகள் பற்றி; அணு ஆயுத உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டால், அம்மாற்றங்கள் பற்றி; அணுகுண்டினைத் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருளின் சேமிப்பு பற்றி; அவை என்னென்ன வகையான மூலப்பொருள் என்பது பற்றி; சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் வராத, இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அணு உலைகளின் செயல்பாடு பற்றி; ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு யுரேனியம் இந்தியாவிலேயே வெட்டி எடுக்கப்படுகிறது; அதில் எவ்வளவு யுரேனியம் அணுகுண்டு தயாரிப்பதற்காக ஒதுக்கப்படுகிறது; அணுசக்தியின் மூலம் ஓர் ஆண்டில் எவ்வளவு யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது'' என்பது பற்றியெல்லாம் அமெரிக்க அதிபர் ""மதிப்பீடு'' செய்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அளிக்கவேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;""இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை அமெரிக்காவின் கொள்கைகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்; அணு ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையைச் செயல்படுத்துவதில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.''&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;""பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை (அணுகுண்டு) உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள ஈரானைக் கட்டுப்படுத்தவும்; தேவை ஏற்பட்டால் ஈரானின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு, இந்தியா முழுமையாகவும், ஊக்கத்தோடும் ஒத்துழைப்புத் தர வேண்டும்'' என அமெரிக்கச் சட்டம் குறிப்பிடுகிறது. இதனைப் பச்சையாகச் சொன்னால், இந்தியா, அமெரிக்காவின் உளவாளியாக, அடியாளாகச் செயல்பட வேண்டும் என்பதுதான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியா வருங்காலத்தில் புதிதாக அணுகுண்டு சோதனைகளை நடத்தாமல் தடுப்பதற்காக, ""அணுகுண்டு தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதைத் தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளில் இந்தியாவும் ஒத்துழைக்க வேண்டும்'' எனக் குறிப்பிடும் இச்சட்டம், ""எந்தக் காரணத்தை முன்னிட்டாவது, இந்தியா மீண்டும் அணு ஆயுதச் சோதனைகளை நடத்துமானால், அமெரிக்கா இந்தியா அணு சக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தை, அமெரிக்கா ஒருதலைபட்சமாக முறித்துக் கொள்ளலாம்; இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கு அளித்த சாதனங்கள் அனைத்தையும், அமெரிக்கா திரும்பப் பெற்றுவிட வேண்டும்; ஒப்பந்தம் முறிந்து போன பிறகும்கூட, இந்தியாவின் சிவில் அணுஉலைகளை மூன்றாவது நபர்கள் கண்காணிப்பதை அமெரிக்கா உறுதி செய்து கொள்ள வேண்டும்'' என நிபந்தனைகளை விதித்திருக்கிறது.···இந்தியாவின் அரைகுறை இறையாண்மையைக் கூட உருவிக் கொண்டுவிட்ட இந்தச் சட்டம், இந்திய அரசிற்கும் அமெரிக்க அரசிற்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவரும் இரகசியப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளுமே, இந்த விசயம் குறித்து கூட்டுக் களவாணிகளாகத்தான் செயல்பட்டு வந்துள்ளன.&lt;br /&gt;அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான என்ரானையே தூக்கியெறியத் தெம்பில்லாத பா.ஜ.க., இந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் எனக் கோருவதை, கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையோடுதான் ஒப்பிட முடியும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;1998இல் பா.ஜ.க. ஆட்சியில் இரண்டாம் முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியபின், ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதாரத் தடையில் இருந்து தப்பிக்க, அப்பொழுது பிரதமராக இருந்த வாஜ்பாயி, ""இனி இந்தியா அணுகுண்டுப் பரிசோதனை நடத்தாது'' என ஐ.நா. மன்றத்திலேயே வாக்குறுதி அளித்தார். அப்பொழுது பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா, இந்தியாவின் அணு உலைகளைக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரச் சம்மதிப்பதாக, அமெரிக்காவின் உள்துறைச் செயலராக இருந்த காலின் பாவெல்லிடம் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் உருவாவதற்கு இவைதான் அடிப்படைகள் என்கிறது அமெரிக்கா. அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பா.ஜ.க. போட்டுச் சென்ற கோட்டில், காங்கிரசு ரோடு போட்டுவிட்டது என்பதுதான் உண்மை.&lt;br /&gt;···&lt;br /&gt;இந்த ஒப்பந்தம் இந்தியாவின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவோ, இந்தியாவை வல்லரசாக்கும் நோக்கத்திற்காகவோ உருவாக்கப்படவில்லை. இந்தியா பாகிஸ்தான் ஈரான் நாடுகளிடையே உருவாகவிருந்த எரிவாயு ஒப்பந்தத்தைத் தகர்ப்பதற்காக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அரசுதந்திரம்தான் இந்த ஒப்பந்தம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;""ஈரானுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால், இந்தியாவிற்கு அணுசக்தி துறையில் உதவுவோம்; இந்தியாவை வல்லரசாக்குவோம்'' என ஆசைகாட்டிய அமெரிக்கா, ""இதற்கு மறுத்தால், இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்போம்'' என கடந்த மார்ச் 2005இல் மிரட்டல் விட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இது ஒருபுறமிருக்க, ""புதிய நூற்றாண்டுக்கான அமெரிக்காவின் திட்டம்'' ஆசியாவில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்டுத்தக் கோருகிறது. அமெரிக்காவின் இந்த மேலாதிக்க நோக்கத்திற்கு இந்தியாவை அடியாளாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது, அமெரிக்கா. ஏற்கெனவே சீன எதிர்ப்பில் மூழ்கிப் போயிருக்கும் இந்தியா; தெற்காசியாவில் அமெரிக்காவின் அடியாளாக அங்கீகாரம் பெறுவதற்கு ஏங்கிக் கொண்டிருந்த இந்தியா, அமெரிக்கா வீசியெறிந்த இந்த எலும்புத் துண்டை, அணுசக்தி ஒப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா இந்தியா இடையே நடக்கவிருக்கும் அணுசக்தி வியாபாரத்தில் தனியார் முதலாளிகளும் பங்கு பெறலாம் என்பதால், இந்தியத் தரகு முதலாளிகள் அனைவரும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்கிறார்கள். 4,50,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள இந்த வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் இலாபத்திற்காகவே, ""இறையாண்மை, சுயசார்பு'' போன்ற பழைய முகமூடிகளை அவிழ்த்து வீசிவிடத் தயாராகி வருகிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அதனால்தான், நாட்டின் சுயமரியாதைக்கே எதிராக உள்ள இந்தச் சட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கத் துணியாத மன்மோகன் சிங் கும்பல், ""இந்தச் சட்டம் அமெரிக்க அதிபரைத்தான் கட்டுப்படுத்தும்; இந்தியாவை அல்ல'' என சால்ஜாப்பு சொல்கிறார். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியா அமெரிக்கா இடையே உருவாகவுள்ள ""123 ஒப்பந்தத்தில்'' ங்""ஹைட்'' சட்டத்தின் அடிப்படையில் இந்தியா அமெரிக்கா இடையே கையெழுத்தாகவிருக்கும் ஒப்பந்தத்தின் பெயர் தான் "123 ஒப்பந்தம்'. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகுதான் இந்தியாஅமெரிக்கா இடையே அணுசக்தி கூட்டுறவும், வர்த்தகமும் தொடங்கப்படும்.சி இந்த விதிகளைச் சேர்க்க அனுமதிக்க மாட்டோம் என வீராப்பு பேசுகிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;""அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இந்தியா பணிந்து போன இரகசியம் மார்ச் மாதம் அம்பலமானபொழுது, அமெரிக்கச் சட்டம் வரட்டும் எனக் கூறி நம்மை முட்டாளாக்கினார்கள்; அமெரிக்க சட்டம் வந்த பிறகு "123 ஒப்பந்தம்' வரட்டும் எனக் கூறி நம்மை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள்'' என மன்மோகன் சிங்கின் வீராப்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் ஏ.என். பிரசாத் அம்பலப்படுத்துகிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சர்வதேச அணுசக்தி கமிசனில் ஈரானுக்கு எதிராக இந்தியா மூன்று முறை வாக்களித்தது; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட வெனிசுலாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என வெள்ளை மாளிகையில் இருந்துவந்த தொலைபேசி மிரட்டலைப் பூசி மெழுகியது போன்ற விவகாரங்கள், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்காதான் தீர்மானிக்கிறது என்பதை ஏற்கெனவே அம்பலப்படுத்தியுள்ளன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் மீது இந்தியா ஒரு துப்பாக்கி ரவையைக் கூடச் சுட முடியாது என்ற கேவலமான உண்மையும், நாடாளுமன்றத் தாக்குதலின் பின் நடத்தப்பட்ட படை திரட்டலின் பொழுது பச்சையாகத் தெரிந்துவிட்டது. எனவே, புதிய அணுகுண்டு சோதனைகள் நடத்த வேண்டிய தேவையும் இந்தியாவிற்குக் கிடையாது.இப்படிப்பட்ட நிலையில், அமெரிக்கச் சட்டத்தில் உள்ள நிபந்தனைகள், ""123 ஒப்பந்தத்தில்'' சேர்க்கப்பட்டாலும், சேர்க்கப்படாவிட்டாலும், இந்தியாவின் அமெரிக்க அடிவருடித்தனத்தில் எந்த மாற்றமும் வந்துவிடாது என்பதே உண்மை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் நாடே மறுகாலனியாக்கப்பட்டு வரும் வேளையில், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையும், அணுசக்திக் கொள்கையும் மட்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடின்றிச் சுதந்திரமாக இயங்க முடியும் என நம்புவதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால், போலி கம்யூனிஸ்டுகளோ, கடந்த ஆண்டு ஜூலையில் புஷ்ஷûக்கும், மன்மோகன் சிங்குக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, அமெரிக்கச் சட்டமும், 123 ஒப்பந்தமும் இருக்க வேண்டும் எனக் கூச்சல் போடுகிறார்கள். அடியாளாக இருந்தாலும், கொஞ்சம் கௌரவமான அடியாளாக இருக்க வேண்டும். (இசுரேலைப் போல!) என்பதுதவிர, இந்த எதிர்ப்புக்கு வேறு பொருள் கிடையாது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;· செல்வம்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://www.tamilcircle.net/unicode/puthiyajananayagam/2007/jan/puthjanayagam_jan_unicode_08.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;puthiyajananayagam 2007 jan&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-4878179087205322858?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/4878179087205322858'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/4878179087205322858'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2007/09/blog-post_02.html' title='இந்திய – அமெரிக்க ஆணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க அடிவருடிகளின் அரிதாரம் கலைந்தது'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-4270108635589068931</id><published>2007-09-01T10:54:00.000-07:00</published><updated>2007-09-02T06:48:00.196-07:00</updated><title type='text'>மானங்கெட்ட சிங்கின் துரோகம் அணுசக்தி என்ற பெயரால் அரசியல் இராணுவ அடிமைத்தனம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக, இந்தியப் பொருளாதாரமும் எல்லா உற்பத்தி மற்றும் விநியோகத் துறைகளும் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப் பிடிக்குள் சிக்கி வருவதை நாமறிவோம். இந்தப் பொருளாதார அடிமைத்தனத்தை விஞ்சும் அளவில் அரசியல் மற்றும் இராணுவ அடிமைத்தனத்திற்கான சங்கிலிகள் நம்மீது பூட்டப்படுகின்றன. தனது குறைந்தபட்ச செயல்திட்டத்தில், பாரதிய ஜனதாவைப் போலன்றி தன்னை ஒரு அமெரிக்க எதிர்ப்பாளனாக சித்தரித்துக் கொண்டது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால், பதவியில் அமர்ந்த மறுகணமே தன் நோக்கத்தைத் தெளிவாக வெளியிட்டார், மன்மோகன். ""அமெரிக்கா ஒரு வல்லரசு என்ற உண்மையை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.... உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் அமெரிக்கா மிக முக்கியப் பாத்திரம் வகிக்கிறது... எனவே, இருக்கின்ற சர்வதேச அமைப்புகளை நமது ஆதாயத்திற்கேற்ப நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்'' என்றார். பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் இந்த அமெரிக்க உளவாளியின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், நமது நாட்டை மீளவே முடியாத அடிமைப் படுகுழிக்குள் தள்ளி வருகின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;ஜூன் 18,2005 அன்று புஷ்ஷûம் மன்மோகனும் அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கை, அதைத் தொடர்ந்து ஜுன் 28ஆம் தேதியன்று பிரணாப் முகர்ஜியும் ரம்ஸ்ஃபீல்டும் இணைந்து வெளியிட்ட இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தம், அதனைத் தொடர்ந்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சியில் அமெரிக்காவின் ஆணைக்கிணங்க இரானுக்கு எதிராக மூன்று முறை இந்தியா அளித்திருக்கும் வாக்கு, இதே காலகட்டத்தில் முடக்கப்பட்டிருக்கின்ற இரான் இந்தியா எண்ணெய் எரிவாயுக் குழாய் திட்டம், தற்போது புஷ் வருகையை ஒட்டி திணிக்கப்படக் காத்திருக்கும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஆகிய இவையனைத்தும் அமெரிக்க சிலுவையில் நிரந்தரமாக இந்தியாவை அறைந்து விடுவதற்கான ஆணிகள். இவை தனித்தனி ஆணிகள் என்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை என்றும் உளவாளி மன்மோகன் சிங் தொடர்ந்து புளுகி வந்தபோதிலும், உண்மை வெகு வேகமாக அம்பலமாகி வருகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;இந்தியாவின் அதிகரித்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேவைகளை நிறைவு செய்வது, உலகச் சந்தையின் விலையேற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதன் மூலம் அந்நியச் செலாவணி இழப்பை தவிர்ப்பது, கப்பல் மூலம் எண்ணெய் எரிவாயு தருவிக்கும் செலவை இல்லாமல் செய்வது, இரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எண்ணெய்க் குழாய் அமைப்பதன் மூலம் இந்தியா பாகிஸ்தானிடையே சமாதானம் நிலவுவதற்கான பொருளாதார அவசியத்தை உருவாக்குவது என்ற நோக்கங்களை முன்வைத்து இரான் இந்தியா எரிவாயுக் குழாய் ஒப்பந்தம் சென்ற ஆண்டில் உருவாக்கப்பட்டது. மூன்று நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் இருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;இரு நாடுகளுக்கிடையே மட்டுமின்றி, எண்ணெய் எரிவாயு வளம் மிக்க இரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலிருந்து தென்கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட எல்லா ஆசிய நாடுகளையும் குழாய் மூலம் இணைப்பதற்கான திட்டமும் உருவாக்கப்பட்டிருந்தது. ஆசியப் பகுதிகளில் அமெரிக்க மேலாதிக்கத்தைத் தடுக்கும் நோக்கில் ரசியா மற்றும் சீனாவால் உருவாக்கப்பட்ட ஷாங்காய் கூட்டமைப்பின் அமர்வுகளில் இந்தியா இரான் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்து கொண்டுமிருந்தன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்தத்தை தகர்ப்பதற்காகவே மார்ச் 2005இல் இந்தியாவிற்கு "விஜயம்' செய்த அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் கன்டலிசா ரைஸ், தங்களால் ரவுடி அரசாகக் கருதப்படும் இரானுடன் இந்தியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டால் பொருளாதாரத் தடையை எதிர்நோக்க வேண்டிவரும் என்று வெளிப்படையாக எச்சரித்தார். தன்னுடைய எரிசக்தித் தேவைகளுக்கு, கரியமில வாயுவை வெளியிட்டு சுற்றுச்சூழலை மாசாக்காத அணுசக்தியைப் பயன்படுத்துவது நல்லதென்றும் அதற்கு அமெரிக்கா உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியாவை உலக வல்லரசாக்குவது என்று அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;கபடமும் திமிரும் நிறைந்த இந்தப் பேச்சை அரசு உடனே கண்டித்திருக்க வேண்டும். மாறாக, பிரதமர் மானங்கெட்ட சிங் அமெரிக்காவிலிருந்து இதை வழிமொழிந்தார். இரானிலிருந்து எரிவாயு கொண்டு வருவது பாதுகாப்பற்றது என்றும், அதற்கு எந்த வங்கியும் கடன் கொடுக்காது என்றும் அறிவித்ததுடன் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சி எடுத்த மணிசங்கர் அய்யரை பதவியிலிருந்து தூக்கினார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சுற்றுச்சூழல் குறித்த அமெரிக்காவின் அக்கறைக்கு விளக்கம் தேவையில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர்தான், எரிவாயு இறக்குமதி செய்து அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பதாகக் கூறிய அமெரிக்க என்ரானுக்கு இந்திய அரசு அனுமதி அளித்தது. பிறகு என்ரான் திவாலான பின் அந்த நிறுவனம் வாங்கிய கடன் 3300 கோடி ரூபாயை நம் வரிப்பணத்திலிருந்து கட்டியிருக்கிறது மன்மோகன் அரசு. இன்று அதே அமெரிக்கா எரிவாயுவை விட அணுசக்தி சிறந்தது என்று சொன்னவுடனே "ஆமாம்' என்று தலையாட்டுவதுடன் அணுசக்தி என்ற பெயரால் அடுத்த அடிமைத்தனத்திற்கு நாட்டை தயார்படுத்துகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அணுசக்தித் துறையைப் பொருத்தவரை, அதன் சிவில் பயன்பாட்டுக்கும் (மின்சாரம் போன்றவை) இராணுவப் பயன்பாட்டுக்கும் இடையில் வேறுபாடு இருந்தாலும், இவற்றின் அடிப்படையாக அமையும் ஆய்வுகளில் வேறுபாடு இல்லை. மேலும், அணுவெடிப்பு சோதனை நடத்தியுள்ள இந்தியா, அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (கேகூ) கையெழுத்திடவும் மறுத்து வரும் நாடுமாகும். இதன் காரணமாக, அவ்வப்போது பொருளாதாரத் தடைகள் விதிப்பதுடன், அணுசக்தி தயாரிப்புக்குத் தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இந்தியாவுக்கு வழங்க அணு ஆயுத வல்லரசுகள் மறுத்தும் வருகின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியாவில் யுரேனியம் கிடைப்பதில்லை என்றாலும், அணுசக்தி தயாரிக்கப் பயன்படும் தோரியம் என்ற தாதுப்பொருள் ஏராளமாக (உலக இருப்பில் 75மூ) உள்ளது. துவக்கமுதலே இந்தியாவின் அணுசக்தி ஆய்வுகள் தோரியத்தை மையமாக வைத்து செய்யப்படுவதால், இந்த ஆய்வில் முன்னிலை வகிக்கிறோம் என்றும் இறுதிக்கட்ட ஆய்வில் உள்ள நாம் வெகு விரைவில் இத்துறையில் உலகின் முதல் நாடாகிவிடுவோம் என்றும் கூறுகிறார், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் ஏ.என்.பிரசாத். இதன் மூலம் ஆண்டுக்கு 5,30,000 மெகாவாட் மின்சாரத்தை அடுத்த 300 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூறுகிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மன்மோகன் சிங் கும்பல் அமெரிக்காவில் கையெழுத்திட்டிருக்கும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், தோரியத்திலிருந்து அணுசக்தி தயாரிக்கும் இந்த சுயசார்பான ஆய்வை ஒழித்துக் கட்டி, யுரேனியத்தை, அதாவது அமெரிக்க இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை இந்தியா மீது திணிக்கிறது. அணுமின்சார உற்பத்தி தோற்றுவிக்கும் அணுக்கழிவிலிருந்துதான் அணு ஆயுதம் தயாரிக்கப்படுவதால், இந்த அணுக்கழிவுகள் அனைத்தையும் தன்னிடம் ஒப்படைத்துவிட வேண்டுமென அமெரிக்கா கோருகிறது. மேலும், சிவில் உற்பத்திக்குத் தரப்படும் யுரேனியம் ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படாமல் இருக்கிறதா என்று கண்காணிக்கும் அதிகாரமும், இந்திய அணு ஆய்வுகளை சோதனையிடும் அதிகாரமும் தனக்கு வேண்டுமென்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்தம் ஒரு அடிமைச் சாசனம் என்று எதிர்க்கும் இந்திய அணு விஞ்ஞானிகள் அனைவரும், அணுசக்தித் துறையில் அமெரிக்கா முன்னிலை வகிக்கவில்லை என்றும், தற்போதைய நமது மொத்த மின் சக்தி தேவையில் 3மூ மட்டுமே அணுசக்தியிலிருந்து கிடைப்பது என்பதால் இந்த ஒப்பந்தமே அர்த்தமற்றது என்றும் குமுறுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால், இவையெதையும் மன்மோகன் அரசு பொருட்படுத்தவில்லை. அணுசக்தி ஆய்வில் முன்னேறிய நாடு என்ற "பிரம்மரிஷி' பட்டத்தை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கவிருப்பதாகவும், ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பிடிக்க இது உதவுமென்றும், அதாவது ரைஸ் கூறியது போல இந்தியாவை அமெரிக்கா வல்லரசாக்குமென்றும், அதற்காக இத்தகைய தியாகங்களைச் செய்யலாமென்றும் நியாயப்படுத்துகிறது. ஆனால், இந்தியாவை "அணு ஆய்வில் முன்னேறிய நாடு' என்று தாங்கள் கருதவில்லையென்றும், அணு ஆய்வில் ஈடுபட்டுவரும் நாடு என்று மட்டுமே கருதுவதாகவும் கூறி குட்டை உடைத்துவிட்டார், அமெரிக்க வெளியுறவுத்துறை இணைச்செயலர் பிரான்ஸ்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இருந்தபோதிலும், புஷ் வருகையையொட்டி இந்திய அமெரிக்க அணுசக்தி கூட்டு என்ற பெயரிலான இந்த அடிமை ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துடிக்கிறது மன்மோகன் அரசு. ஏனெனில், இதற்கான அடிப்படை இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தில் இருக்கிறது. ஆசியப் பகுதியில் சீனாவுக்கு எதிரான அமெரிக்க அடியாளாக இந்தியாவை மாற்றும் ஜூலை, 2005 ஒப்பந்தம் இந்த அணுசக்தி அடிமைத்தனத்தை முன் நிபந்தனையாகக் கொண்டது. இந்தியாவில் சீனத்தை குறிவைத்து பாட்ரியட் ஏவுகணைகளை நிறுவுவது, பனிமலைகள் முதல் பாலைவனம் வரை அனைத்து வாய்ப்புகளையும் கொண்ட இந்தியாவில் தனது ஆக்கிரமிப்புப் போருக்கான பயிற்சிகளை அமெரிக்க இராணுவம் மேற்கொள்வது, அமெரிக்காவின் எதிர்கால ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் காலாட்படையாக இந்திய இராணுவம் பங்கு பெறுவது, 32,000 கோடி ரூபாய்க்கு அமெரிக்காவிடமிருந்து ஆயுதக் கொள்முதல், அமெரிக்கஇந்திய கடற்படைகள் இணைந்து இந்து மாக்கடல் பிராந்தியத்தில் ரோந்து சுற்றுவது என்பன போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியது அவ்வொப்பந்தம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வல்லரசு என்ற பெயரில் அமெரிக்க அடியாளாக நியமனம் பெறத்துடிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்தக் கனவுதான் இரானுக்கு எதிரான அநீதியான தீர்மானத்தில் இந்தியாவை கையெழுத்திட வைத்திருக்கிறது. உலக நாடுகளும் மக்களும் கண்டு வெறுக்கும் இசுரேலைப் போன்ற ஆனால் அதைவிடத் தரம் தாழ்ந்த அடியாளாக நம் நாடு மாற்றப்படுகிறது. மறுகாலனியாக்கம் தோற்றுவிக்கும் பொருளாதார அடிமைத்தனத்தினும் கொடிய இந்த அடியாள்தனத்திலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டுமானால் உளவாளி மன்மோகன் சிங் அரசு உடனே தூக்கியெறியப்பட வேண்டும். அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் மறுகாலனியாதிக்கத்திற்கும் எதிரான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படவேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ரஹீம்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://www.tamilcircle.net/unicode/puthiyajananayagam/2006/march/mar_2006_03u.html"&gt;&lt;strong&gt;puthiyajananayagam 2006 march&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-4270108635589068931?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/4270108635589068931'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/4270108635589068931'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2007/09/blog-post_01.html' title='மானங்கெட்ட சிங்கின் துரோகம் அணுசக்தி என்ற பெயரால் அரசியல் இராணுவ அடிமைத்தனம்'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-1220891413732099471</id><published>2007-09-01T09:51:00.000-07:00</published><updated>2007-09-02T06:50:51.965-07:00</updated><title type='text'>இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்- அம்பலமாகிறது அடிமைச் சாசனம்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;இந்தியாவின் எதிர்கால மின்சாரத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யவிருக்கும் கற்பக விருட்சமாகவும் "இந்தியாவும் ஒரு அணுஆயுத வல்லரசுதான்' என்பதற்கு அமெரிக்காவின் வாயிலிருந்து கிடைத்த பிரம்மரிஷிப் பட்டமாகவும் மன்மோகன் சிங் கும்பலால் சித்தரிக்கப்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் உண்மை முகம் நான்கே மாதங்களில் அம்பலமாகியிருக்கிறது. தானாக அம்பலமாகவில்லை. 27 ஜூலை 2006 அன்று அமெரிக்க நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்தைச் சட்டமாக்குவதற்காக நிறைவேற்றியுள்ள திருத்தங்கள் இவற்றை அம்பலமாக்கியிருக்கின்றன. அவை பின்வரும் நிபந்தனைகளை விதிக்கின்றன:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;""1. இந்தியா இனி அணுஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது; கைவசம் இருக்கின்ற அணுஆயுதங்களை மெல்ல மெல்ல அழிப்பதையும் இறுதியில் அணுஆயுதங்களே இல்லாமல் செய்வதையும் உத்திரவாதப்டுத்த வேண்டும். இது எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்பது குறித்து அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;2. அணுஆயுதம் தயாரிப்பதற்குத் தேவையான மூலக்கூறுகளின் உற்பத்தியை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும். இந்தியா குறிப்பிட்ட கால இலக்கிற்குள் இந்த உற்பத்தியை நிறுத்துவதை அமெரிக்க அதிபர் உத்திரவாதப்படுத்த வேண்டும் என்பதுடன் இது குறித்தும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஆண்டுதோறும் அதிபர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;3. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டுமானால் அதற்கு முன் இந்தியாவின் அணு உலைகளை ஆய்வுக்கு உட்படுத்துவது தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் இந்தியா உடன்பாடு செய்து கொள்ள வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;4. இந்தியாவின் அணுசக்தித் திட்டங்கள், அவற்றின் உற்பத்தித் திறன், கையிலுள்ள அணு ஆயுதங்கள், அணுஆயுதம் தயாரிக்க உதவும் மூலக்கூறுகளின் கையிருப்பு, இந்தியாவில் ஆண்டுதோறும் வெட்டியெடுக்கப்படும் யுரேனியத்தின் அளவு ஆகிய எல்லா இரகசியங்கள் குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் அமெரிக்க அதிபர் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;5. அணு ஆயுதப் பரவல் தடுப்புக்காக அமெரிக்கா உருவாக்கியுள்ள (கட்டைப் பஞ்சாயத்து) அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக வேண்டும். 6. இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.''&lt;br /&gt;இவை மட்டுமின்றி, இந்த ஆண்டின் இறுதியில் கூடவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டில் நிறைவேற்றப்படுவதற்காகப் பின்வரும் திருத்தங்களும் தயாராக உள்ளன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;""1. இந்திய அணு உலைகள் அனைத்தையும் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வராதவரை தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;2. 14 அணுசக்தி நிலையங்களை மட்டும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கண்காணிப்புக்கு அனுமதிப்பதாக இந்தியா கூறியுள்ளதை ஏற்கவியலாது; மீதமுள்ள 8 அணுசக்தி நிலையங்களையும் கண்காணிப்புக்குள் கொண்டுவர வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;3. இரான் போன்ற அணுஆயுதமில்லாத நாடுகள் எத்தகைய கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனவோ, அதே விதமான கண்காணிப்புக்கு இந்தியாவும் உட்படவேண்டும்; இந்தியாவுக்கு அணுஆயுத நாடு என்ற சிறப்புத் தகுதியோ, விதிவிலக்கோ தரவியலாது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;4. சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் சோதனை மட்டுமின்றி அமெரிக்க அதிகாரிகளின் நேரடி சோதனைக்கும் இந்தியா உட்படவேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;5. இந்தியாவுக்குச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வழங்கலாமென அமெரிக்கா திருப்தியடையாத பட்சத்தில், யுரேனியம் விற்கும் பிற நாடுகளும் இந்தியாவிற்கு அதனை விற்பனை செய்யாமல் தடுக்க அமெரிக்க அரசு முயற்சிக்க வேண்டும்.''&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டு ஜூன் 18ஆம் தேதி புஷ்ஷýம் மன்மோகனும் அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும் இந்த ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்ட புஷ் மன்மோகன் சிங் உடன்பாட்டிலும் பூடகமாக மறைக்கப்பட்டிருந்த அமெரிக்க மேலாதிக்க நோக்கங்களை இந்தத் "திருத்தங்கள்' வெளிக் கொண்டு வந்திருக்கின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;""இந்தியாவின் இறையாண்மையையும் அணுசக்தி சுயசார்பையும் பாதிக்கின்ற எந்தவித நிபந்தனைகளுக்கும் உட்படமாட்டோம்'' என கடந்த மார்ச் மாதத்தில் இந்திய நாடாளுமன்றத்திற்கு உறுதிமொழி அளித்த மன்மோகன் சிங், அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 20 நாட்களாக இந்த திருத்தங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றபோது வாய் திறக்கவில்லை. ரசியாவில் நடைபெற்ற ஜி8 நாடுகளின் மாநாட்டிற்குச் சென்றிருந்த மன்மோகன் சிங்கிடம் தங்களது நிருபர் நிர்ப்பந்தித்துக் கேட்டபிறகுதான், திருத்தங்களின் சில அம்சங்கள் கவலையளிப்பதாக மன்மோகன் சிங் பதிலளித்தாரென்று தனது தலையங்கத்தில் (ஜூலை20) குறிப்பிடுகிறது. ""தி இந்து'' நாளேடு. அதன் பிறகு புஷ்ஷை சந்தித்த மன்மோகன் சிங், ""போட்ட ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக ஏன் மீறுகிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பவில்லை. ""நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. நாங்கள் எங்களுடைய நாடாளுமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. சில விசயங்கள் எங்களுக்கும் எங்கள் நாடாளுமன்றத்துக்கும் கவலை அளிக்கின்றன'' (இந்து, 18.7.06) என்று புஷ்ஷிடம் கவலை தெரிவித்தாராம். ஆவன செய்வதாக புஷ் உறுதியளித்துள்ளாராம்! &lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;""அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதம் குறித்து நானும் இந்திய வெளியுறவுச் செயலர் சியாம்சரணும் ஜூலை 10ம் தேதியன்று பாரிசில் 5 மணிநேரம் பேசியிருக்கிறோம்'' என்று கூறி மன்மோகன் சிங் கும்பலின் குட்டை உடைத்துவிட்டார் அமெரிக்க வெளியுறவுத்துறை இணைச்செயலர் நிகோலஸ் பர்ன்ஸ். "ஆவன செய்வதாக'க் கூறிய புஷ்ஷின் வெள்ளை மாளிகையோ நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள திருத்தங்களை வரவேற்றிருக்கிறது. திரைமறைவு பேரங்கள் முடிந்துவிட்ட நிலையில் இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகங்கள்தான் மன்மோகன் வெளியிடும் அறிக்கைகள் என்ற உண்மையை மன்மோகன் சிங்கே நிரூபிக்கிறார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அணுசக்திக் கமிசனின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் இந்தியப் பிரதிநிதியுமான ஏ.என். பிரசாத், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவரான ஏ.ஆர். கோபாலகிருஷ்ணன் என விஞ்ஞானிகள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துள்ளனர். அவர்களுடைய வாதங்கள் எதற்கும் மன்மோகன் கும்பல் பதிலளிக்கவில்லை. ""அனாவசியமாகப் பிரச்சினையை மிகைப்படுத்தாதீர்கள். செனட்டிலும் விவாதம் முடிந்து அமெரிக்க சட்டத்தின் இறுதி வடிவம் வரட்டும். அதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் நான் நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்கிறேன்'' என்பதுதான் மன்மோகன் சிங் கூறியுள்ள பதில்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;""அணு ஆயுதம் தயாரிக்கும் உரிமையைப் பறிப்பதால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே ஆபத்து'' என்று கூச்சலிட்டது பாரதிய ஜனதா. ""சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை வகுக்க முடியாமல் செய்து இந்தியாவை அமெரிக்காவின் உலக யுத்த தந்திரத் திட்டத்தில் பிணைக்கிறது; அணுசக்தி சுயசார்பை அழிக்கிறது'' என்று கூறி இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக "நாடாளுமன்றத்தின் உணர்வை வெளிப்படுத்தும் தீர்மானத்தை'க் கொண்டுவரப் போவதாக "எச்சரித்தது' சி.பி.எம். கட்சி. ""அத்தகையதொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் நான் இந்த அரசில் இருக்க மாட்டேன், இந்த அரசாங்கமும் இருக்காது'' என்று பதிலுக்கு சி.பி.எம்.மை எச்சரித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி. உடனே, தாங்கள் சி.பி.எம்.மின் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று நழுவியது பா.ஜ.க. ""அரசாங்கத்தை மிரட்டுவது எங்கள் நோக்கமல்ல, இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு சட்டகத்தை முன்மொழிவதுதான் எங்கள் நோக்கம்'' என்று விளக்கமளித்திருக்கிறார் "மார்க்சிஸ்டு' கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;புஷ் மன்மோகன் ஒப்பந்தம் என்பது சொக்கத்தங்கம் போலவும், அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் திருத்தங்கள்தான் பிரச்சினை என்பது போலவும் ஒரு பொய்ச்சித்திரம் ஓட்டுக்கட்சிகளாலும் ஊடகங்களாலும் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. மாறாக, இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் அனைத்தையும் அமெரிக்க தூதர் முல்ஃபோர்டு, கன்டலிசா ரைஸ், நிகோலஸ் பர்ன்ஸ் போன்ற பல அதிகாரிகளும் மார்ச் ஒப்பந்தத்திற்கு முன்னதாகவே பேசியுள்ளனர். இவை தொடர்பாக மன்மோகன் சிங் கூறிய பொய்களும் அப்போதே அம்பலமாகி இருக்கின்றன. (பு.ஜ. மார்ச், ஏப்ரல் 2006) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நாடாளுமன்றத்துக்கு மட்டுமின்றி அமைச்சரவைக்குக் கூடத் தெரியாமல் ஜூன், 18, 2005 அன்று மன்மோகன் சிங் புஷ்ஷடன் இணைந்து அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கையும், ஜூன் 28,2005இல் பிரணாப் முகர்ஜி அமெரிக்காவில் கையெழுத்திட்ட இராணுவ ஒப்பந்தமும்தான் மார்ச் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படைகள். அந்த அடிப்படையில்தான் இரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியில் இந்தியா வாக்களித்தது. இரானுடனான எரிவாயுக் குழாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டதற்கும் இதுதான் அடிப்படை. இந்தியாவின் அரசியல், பொருளாதார, இராணுவக் கொள்கைகள் இந்த அடிப்படையிலிருந்துதான் தீர்மானிக்கப்படுகின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆட்சியே போனாலும் ஒப்பந்தத்தை விடமுடியாது என்ற பிரணாப் முகர்ஜியின் மிரட்டலுக்கும், தேசிய கவுரவத்தின் மொத்தக் குத்தகைதாரர்களான பார்ப்பன பாசிஸ்டுகளின் "பல்டி'க்கும், அமெரிக்க ஒப்பந்தத்துக்கு ஆலோசனை வழங்குவதாக "மார்க்சிஸ்டுகள்' அடக்கி வாசிப்பதற்கும் வேறென்ன விளக்கம் இருக்கிறது? ஆசியாவுக்கான அமெரிக்க அடியாள் என்ற பதவியில் நியமனம் பெறுவதன் மூலம் மறுகாலனியாக்கத்தின் ஆதாயங்களைச் சுவைக்க வெறி பிடித்து அலைகின்றது இந்தியத் தரகு முதலாளிவர்க்கம். அதன் பொருட்டு "இறையாண்மை, சுயசார்பு' போன்ற பழைய உள்ளாடைகளை அவிழ்த்து வீசிவிட்டு அம்மணமாக நடனமாடவும் தயாராக இருக்கிறது. இநத நிர்வாண நிலையை எழுத்துபூர்வமாக உத்திரவாதப்படுத்த விரும்புகிறது அமெரிக்க வல்லரசு. ""நாமும் ஒரு வல்லரசு என்று கூறிக் கொள்வதால் அதைக் கொஞ்சம் இலைமறை காயாக செய்யக்கூடாதா?'' என்பதுதான் இப்போது நாடாளுமன்றத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் விவாதம். இந்தக் கேலிக்கூத்தின் முரண்நகையாக பத்தாண்டுகளுக்கு முன் பிரதமர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அமெரிக்க உளவாளிகள் என்ற பிரச்சினையை எழுப்பியிருக்கிறார் "தேசபக்தர்' ஜஸ்வந்த் சிங். இப்போது பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருப்பவரே ஒரு அமெரிக்க உளவாளிதானே!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://www.tamilcircle.net/unicode/puthiyajananayagam/2006/aug_06/01_aug06u.html"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;puthiyajananayagam 2006 aug&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-1220891413732099471?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/1220891413732099471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/1220891413732099471'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2007/09/blog-post.html' title='இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்- அம்பலமாகிறது அடிமைச் சாசனம்!'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6740612124965437837.post-8316483993888530120</id><published>2007-09-01T06:58:00.000-07:00</published><updated>2007-09-02T07:17:33.450-07:00</updated><title type='text'>அமெரிக்க-இந்திய இராணுவ-அணுசக்தி ஒப்பந்தங்கள்: அமெரிக்க அடிமைத்தனத்தில்</title><content type='html'>&lt;div align="justify"&gt;புதிய அத்தியாயம் பிரதமர் மன்மோகன் சிங், அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே இராணுவ ஒப்பந்தமொன்று கையெழுத்தானது; அவர் அமெரிக்கா சென்றிருந்த பொழுது, அணு சக்தி ஒத்துழைப்பு குறித்த மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எத்தனையோ ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் விட, தற்பொழுது கையெழுத்தாகியுள்ள இவ்விரு ஒப்பந்தங்களை வரலாற்றுத் திருப்பம் என்றும்; குறிப்பாக, அணுசக்தி குறித்த ஒப்பந்தம் இந்தியாவை வல்லரசாக்க உதவும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க ஆதரவாளர்கள் உற்சாகம் பீறிடக் குறிப்பிடுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இராணுவ ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நலன்களுக்கு ஏற்ற விதத்தில், இரு நாட்டுப் படைகளும் கூட்டாக இணைந்து, உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும். இரண்டாவதாக, ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் திட்டத்தில் இரு நாடுகளும் ஒத்துழைக்கும். மூன்றாவதாக, தரை, கடல், வான் வழியாக பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, இரு நாட்டுப் படைகளும் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும். நான்காவதாக, இரு நாடுகளும் இணைந்து ஆயுதம் மற்றும் இராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபடும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அணு சக்தி தொடர்பாக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, சமூகப் பயன்பாட்டுக்காக (மின்சாரம் உற்பத்தி செய்வது) இயக்கப்படும் அணு உலைகள்; இராணுவப் பயன்பாட்டுக்காக (அணுகுண்டு தயாரிப்பது) இயக்கப்படும் அணு உலைகள் என இந்தியா தனது அணு உலைகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும். சமூகப் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் அணு உலைகளை சர்வதேச அணுசக்தி கழகத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்; புதிதாக அணுகுண்டுச் சோதனைகள் நடத்தக் கூடாது; அணு ஆயுத நாடுகள் உருவாக்கியுள்ள, அணுகுண்டு தயாரிப்பதற்குப் பயன்படும் வேதிப் பொருட்களை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு இந்தியா நடக்க வேண்டும்; அணு ஆயுத நாடுகள் போட்டுள்ள ஏவுகணை சோதனை கட்டுப்பாடு குறித்த சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு, இந்தியா நடக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த இரண்டு ஒப்பந்தங்களையும், சாதாரண வர்ததக ஒப்பந்தம் போல பார்க்க முடியாது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கடைக்கண் பார்வைக்காக, இந்தியா, ""இதுதான் எங்களது அணுக் கொள்ளை''; ""இது தான் எங்களது இராணுவக் கொள்கை'' என்று கூறி வந்ததை தடாலடியாக மாற்றிக் கொண்டு விட்டது. சொல்லப் போனால், அமெரிக்காவின் மேலாதிக்க வெறிக்கு இந்தியாவைப் பலிகடா வாக்கும் அடிமைச் சாசனத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறது, மன்மோகன் சிங் கும்பல்.&lt;br /&gt;------&lt;br /&gt;இந்தியாவிற்குப் போலி சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்தே, ""அணி சேராமை எங்களது வெளியுறவுக் கொள்கை'' என வாய்ச்சவடால் அடித்து வருவது இந்தியாவின் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இப்பொழுதோ, இந்த வாய்ச்சவடால்களைக் கூட வெளிப்படையாக மூட்டை கட்டி வைத்துவிட்டு, அமெரிக்காவின் நாடு பிடிக்கும் ஆக்கிரமிப்பு போர்களில் இந்திய இராணுவத்தைக் கூலிப்படையாக அனுப்பும் உத்தரவாதத்தோடு இராணுவ ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்திராகாந்தி ஆட்சியின் பொழுது, சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தோடு, இந்தியா இராணுவ ஒப்பந்தமொன்றைப் போட்டுக் கொண்டது. (இந்தியாவின் அணிசேராக் கொள்கை அப்பொழுதே பல்லைக் காட்டிவிட்டது தனிக்கதை) அந்த இராணுவ ஒப்பந்தத்தைவிட, தற்பொழுது அமெரிக்க மேலாதிக்க வல்லரசோடு போடப்பட்டுள்ள இராணுவ ஒப்பந்தம் மிகவும் அபாயகரமானது. ஏனென்றால், இந்திய சோவியத் ஒப்பந்தத்தில் இந்திய இராணுவத்தைக் கூலிப்படையாக பயன்படுத்தும் விதிகள் இருந்ததில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்திய இராணுவத்தைக் கூலிப்படையாகப் பயன்படுத்துவது என்ற அம்சம் இந்த ஒப்பந்தத்தில் பச்சையாகச் சொல்லப்படவில்லை; ஆனால், அது, ""இந்திய அமெரிக்க நலன்கள் ஒத்துப் போனால்; ""ஜனநாயகத்தைப் பரப்புவது''; ""பன்னாட்டு நடவடிக்கை'' என்ற வார்த்தைகளின் பின்னே ஒளித்து வைக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒரு ஆக்கிரமிப்புப் போரின் மூலமாகவோ அல்லது அதிரடி அரண்மனைப் புரட்சிகளின் மூலமாகவோ தனது கைக்கூலிகளைப் பதவிக்குக் கொண்டு வருவதுதான் ""ஜனநாயகத்தைப் பரப்பும்'' அமெரிக்க பாணி. ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா நடத்தி வரும் அட்டூழியங்களை அதற்குள்ளாகவா மறந்து விட முடியும்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அமெரிக்க இராணுவத்துக்கு ஆலோசகராகச் செயல்படும் ஐ.ஏ.டி.ஏ.சி., என்ற அமைப்பு, ""ஆசிய கண்டத்தில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது; தீவிரவாதிகளைத் தேடுவது; பணயக் கைதிகளைக் காப்பாற்றுவது; அமெரிக்காவின் உயர் தொழில் நுட்ப சரக்குகளின் போக்குவரத்திற்குப் பாதுகாப்பு அளிப்பது போன்ற கடைகோடி இராணுவ நடவடிக்கைகளைச் செய்யக் கூடிய திறமைமிக்க கூட்டாளி கிடைத்தால், அமெரிக்கா தனது வலிமையை முழுமையாக தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும்'' எனக் குறிப்பிடுகிறது. அமெரிக்கா ஒதுக்கும் இந்தக் கடைகோடி வேலைகளைச் செய்யும் எடுபிடியாக இந்திய இராணுவத்தை மாற்றும் நோக்கத்தோடுதான் இந்த இராணுவ ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த் தேரில் இந்தியாவும் இப்போது பிணைக்கப்பட்டு விட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;""மேற்காசியாவில் ஈராக்கிற்கு அடுத்து ஈரானில் ஜனநாயகத்தைக் கொண்டு வருவது; கிழக்காசியாவில் அணு ஆயுத பலம் கொண்ட வடகொரியாவை மிரட்டிப் பணிய வைப்பது; மத்திய ஆசியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் வளத்தை தானே கபளீகரம் செய்வது; இவை எல்லாவற்றுக்கும் மேலாக சீனாவைத் துள்ளவிடாமல் கட்டிப் போடுவது'' என அமெரிக்கா, ஆசியாவைத் தனது மேலாதிக்கப் பிடிக்குள் வைத்துக் கொள்ளப் பல திட்டங்களை வைத்திருக்கிறது. இதற்கெல்லாம் இந்திய இராணுவம் கூலிப்படையாகப் பயன்படுத்தப்படும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;""பதற்றம் நிறைந்த மத்திய ஆசியா, தென்கிழக்காசியா, பாரசீக வளைகுடா பகுதிகளுக்கு அமெரிக்க போர் விமானங்கள் மிகவும் விரைவாகச் சென்றடைவதற்கு, இந்தியாவின் நவீன இராணுவக் கட்டுமானங்கள் பயன்படும்'' என்கிறார், அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த அதிகாரி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;""சீனாவின் அச்சுறுத்தலை எதிர் கொள்வதற்கு, அமெரிக்க இராணுவத்திற்கு 2020ஆம் ஆண்டு வாக்கில் ஒரு நண்பன் தேவைப்படும். இதற்கு இந்தியாவின் இராணுவ வலிமை பயன்படும் என்பதை நாம் மறுக்க முடியாது'' என்கிறது ஐ.ஏ.டி.ஏ.சி. அமைப்பு. 2020இல் இந்தியா, அமெரிக்காவின் கைக்கூலி நாடாக மாறிவிடும் என்பதைத்தான் வல்லரசாகிவிடும் எனப் பூசி மெழுகுகிறார்கள் போலும். தாதாவுக்குக் கீழ் வேலை பார்ப்பவனும் தாதா தானே!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அமெரிக்கா, ஈராக் மீது போர் தொடுத்து சதாம் உசேன் ஆட்சியைத் தூக்கியெறிந்த பின், அந்நாட்டில் சில வேலைகளை ""காண்டிராக்ட்'' எடுக்க இந்தியத் தரகு முதலாளிகள் முயன்றனர். இதற்காக இந்திய இராணுவத்தை ஈராக்குக்கு அனுப்பி வைக்கவும், அப்பொழுது ஆட்சியில் இருந்த பா.ஜ.க. அரசு தயாராக இருந்தது. ஆனால், உள்நாட்டில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக பா.ஜ.க. அரசால் படையை அனுப்ப முடியாமல் போனது; இதனால் அமெரிக்காவும் வேலைகளை இந்திய நிறுவனங்களுக்குத் தர மறுத்து விட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தற்பொழுது போடப்பட்டுள்ள இராணுவ ஒப்பந்தத்தின் காரணமாக, இனி, இது போன்ற எலும்புத் துண்டுகளைப் பரிசாகப் பெறுவதற்கு இந்திய ஆளும் கும்பலுக்குத் தடையேதும் இருக்காது. ""தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு''த் தலைமை தாங்கும் அமெரிக்காவிற்கு கறித்துண்டு என்றால், அதற்கு அடியாள் வேலை செய்யப் போகும் இந்திய ஆளும் கும்பலுக்கு எலும்புத் துண்டு என்பதுதான் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான ஒத்த நலன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியா ""அக்னி'', ""பிருத்வி'' ஆகிய ஏவுகணைகளைத் தயாரித்துச் சோதனைச் செய்வதையும்; அவற்றை இராணுவத்தில் சேர்ப்பதையும் ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் அமெரிக்கா, இந்த திட்டத்தை முடமாக்கும் நோக்கத்தோடுதான், ""பேட்ரியாட்'' ஏவுகணைகளை இந்தியாவிற்கு விற்கவும், அமெரிக்காவின் உலகு தழுவிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தில் இந்தியாவை இணைத்துக் கொள்ளவும் சம்மதித்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மேலாதிக்க போர் வெறிபிடித்த ரீகனின் ஆசைக் கனவான ""நட்சத்திர போர்'' (ஸ்டார் வார்ஸ்) என்ற நாசகாரத் திட்டத்தின் புதிய அவதாரம்தான் ஏவுகணை பாதுகாப்புத் திட்டம். உலகு தழுவிய அளவில் மின்னணு போரை நடத்துவதற்கான ஏற்பாட்டில் இணைந்ததன் மூலம், இந்திய ஆளும் கும்பல் ""அமைதி'', ""போர்களற்ற உலகம்'' என்ற வார்த்தைகளைப் பேசுவதற்கே அருகதையற்றதாகி விட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்திய இராணுவத்தையே அமெரிக்காவின் தத்துப் பிள்ளையாக மாற்றும் நோக்கத்தோடு போடப்பட்டுள்ள இந்த இராணுவ ஒப்பந்தத்தை, எந்தவொரு உயர் இராணுவ அதிகாரியும் எதிர்க்கவில்லை. இதற்குக் காரணம் இராணுவக் கட்டுப்பாடு அல்ல. அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கப் போகும் ஆயுதப் பேரத்தில் கிடைக்கப் போகும் கமிசன். கார்கில் போரில் செத்துப் போன இராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்குவதிலேயே கமிசன் அடித்த இராணுவக் கும்பல், பல்லாயிரக்கணக்கான கோடி அளவில் நடைபெறவுள்ள ஆயுத பேரத்தை சும்மா விட்டுவிடுமா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நம்மை ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், தனது மேலாதிக்க நோக்கங்களுக்காக ""போயர்'' போரிலும், முதல், இரண்டாம் உலகப் போர்களிலும் இந்திய இராணுவச் சிப்பாய்களைக் கூலிப் படையாகப் பயன்படுத்தியதைப் போல, அமெரிக்கா பயன்படுத்தும். டல்ஹெளசி பிரபு கொண்டு வந்த துணைப் படைத்திட்டம் இந்திய சுதேசி மன்னர்களின் படைகளை, பிரிட்டிஷ் இராணுவத்தின் தொங்கு சதையாக மாற்றியதைப் போல, இந்த இராணுவ ஒப்பந்தம் "சுதந்திர' இந்தியாவின் இராணுவத்தை அமெரிக்காவின் தொங்கு சதையாக மாற்றுகிறது. காலனிய காலந்தொட்டே இந்திய மக்களை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டு வளர்க்கப்பட்டுள்ள இந்திய இராணுவம், அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடும் பிற நாட்டு மக்களையும் இனி விட்டு வைக்காது.&lt;br /&gt;--------&lt;br /&gt;அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள் என்பதாலேயே , அணு ஆற்றலைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ள வட கொரியாவையும், ஈரானையும் ""போக்கிரி அரசுகள்'' எனத் திட்டித் தீர்க்கும் அமெரிக்க அதிபர் புஷ், இந்தியாவை, ""முன்னேறிய நவீன அணு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள பொறுப்பான நாடு'' எனப் பாராட்டுகிறார். நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டதற்குக் கிடைத்த பாராட்டு என்பதற்கு மேல், இதில் அலசி ஆராய்வதற்கு எதுவுமே இல்லை. ஆனால் அமெரிக்க அடிவருடிகளோ, இந்தப் பாராட்டைக் கேட்டவுடனேயே, ""இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக அமெரிக்கா மறைமுகமாக ஏற்றுக் கொண்டு விட்டதாக'' இதற்குப் பொழிப்புரை எழுதுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியாவில் உள்ள 15 அணு உலைகளில் ஒன்றுகூட சமூகப் பயன்பாட்டுக்காக (மட்டும்) இயக்கப்படவில்லை என்பதே உண்மை. ""இந்தியாவில் உள்ள அணு உலைகளை சமூகப் பயன்பாட்டுக்கானது, இராணுவப் பயன்பாட்டுக்கானது என இரண்டாகப் பிரிப்பது கடினம்'' என அணு விஞ்ஞானிகள் கூறியிருப்பதில் இருந்தே இதனைத் தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் இராணுவ ஒப்பந்தத்தின் மை உலரும் முன்பே, அணு சக்தி ஒப்பந்தத்திலும் இந்தியாவைக் கையெழுத்துப் போட வைத்துவிட்டது அமெரிக்கா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அணு ஆயுதப் பரவல் சட்டத்தில் கையெழுத்துப் போட முடியாது; சர்வதேச அணு சக்தி கழகத்தின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட முடியாது என்றெல்லாம் வீறாப்பாக முழங்கிக் கொண்டிருந்த இந்தியா, இன்று, அணுசக்தி தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றம் வகுக்கும் விதிகளுக்கும் கட்டுப்படுவதாக ஒப்புக் கொண்டுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒப்பந்தம் என்றால், அதில் கையெழுத்துப் போடும் இரண்டு தரப்புக்குமே சமமான அளவில் இலாபம் இருக்க வேண்டும். இந்தியா, தனது அணு சக்தி கொள்கையையே மாற்றிக் கொண்டுள்ளது. இதற்குப் பிரதிபலனாக அதிபர் புஷ், ""அணு தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குத் தர விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தளர்த்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் முயற்சி செய்வேன்; அணு ஆயுத வல்லரசு நாடுகளிடம், இந்தியாவை விதிவிலக்காகப் பாவித்து, அணு வேதிப் பொருட்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகளைத் தளர்த்துமாறு கோருவேன்'' என்ற வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்துள்ளார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியாவைச் சேர்ந்த அணு சக்தி விஞ்ஞானிகளோ, ""வாக்குறுதிகள் யாருக்கு வேண்டும்? எங்களுக்கு யுரேனியம் தான் வேண்டும்'' என்று முணுமுணுக்கிறார்கள். அடுத்தடுத்து பல அணு உலைகளை இந்தியா அமைத்திருந்தாலும், அவற்றுக்குத் தேவைப்படும் யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்வதற்கு அமெரிக்காவைத்தான் மலைபோல நம்பியிருக்கிறது. இந்திய அணுசக்தி துறையின் குடுமி, இன்று அமெரிக்காவின் கைகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது என்றுதான் இதிலிருந்து முடிவுக்கு வர முடியும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியாவிடம் அணுகுண்டுகள் இருக்கலாம். ஆனால், அவற்றைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவுமான உரிமையை இந்தியாவிடமிருந்து அமெரிக்கா இரகசியமாகப் பெற்றிருக்கக் கூடும். இல்லையென்றால், அணுகுண்டு வெடித்த நாயகன் வாஜ்பாயி, ""இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா தனக்கு தேவையான அணு ஆயுதப் பலத்தைத் தீர்மானிக்க முடியாமல் போகும்'' என்று ஏன் அச்சப்பட வேண்டும்? அமெரிக்கா, இந்தியாவைத் தனது நம்பகமான கூட்டாளி என்று ஏற்கும்பட்சத்தில், எந்த உரிமையை வேண்டுமானாலும் அமெரிக்காவின் காலடியில் சமர்ப்பிக்கும் எனப் பலமுறை நாம் சுட்டிக் காட்டியிருக்கிறோம். இந்த ஒப்பந்தம் அதனை உண்மை என நிரூபித்திருக்கிறது.&lt;br /&gt;--------&lt;br /&gt;அமெரிக்காவில் கையெழுத்தாகியுள்ள இந்த இரண்டு ஒப்பந்தங்களும் திடீரென்று உருவானவையல்ல் பா.ஜ.க. ஆட்சியின் பொழுது வெளியுறவுத் துறை மந்திரியாகவும், இராணுவ அமைச்சராகவும் இருந்த ஜஸ்வந்த் சிங்குக்கும், டால்போட் என்ற அமெரிக்க அதிகாரிக்கும் இடையே இரகசியமாக நடைபெற்று வந்த பேச்சு வார்த்தைகள் தான், இப்பொழுது அணு சக்தி ஒப்பந்தமாக உருவாக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஈராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்ப பா.ஜ.க. முயற்சி செய்ததை, காங்கிரசு சட்டபூர்வ ஒப்பந்தமாக இந்தியா மீது திணித்து விட்டது. அதாவது பா.ஜ.க. தொடங்கி வைத்ததை காங்கிரசு முடித்து வைத்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த இரண்டு ஒப்பந்தங்களும், கையெழுத்தாவது குறித்து நாடாளுமன்றத்தில் கூடத் தெரிவிக்காமல், மிகவும் இரகசியமாகவே பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. குறிப்பாக, இராணுவ அமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி கலந்தாய்வு ஒன்றில் பங்கு பெறுவதற்காக அöமரிக்காவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டுத் திரும்பினார். இனி, நாடாளுமன்றம் இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் அங்கீகரிக்கும் ரப்பர் ஸ்டாம்பு சேவையைச் செய்ய வேண்டியது தான் பாக்கி!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முதலாளித்துவ அறிஞர்களால் புனிதமாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தையே மதிக்காத காங்கிரசிடம், குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை மதித்து நடக்குமாறு போலி கம்யூனிஸ்டுகள் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு மாற்று என காங்கிரசைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் போலி கம்யூனிஸ்டுகளிடம், இந்தச் செக்கு மாட்டுத்தனத்தைத் தவிர வேறெதையும் நாம் எதிர்பார்க்க முடியாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, அமெரிக்க அடிமைத்தனத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது, போலி கம்யூனிஸ்டுகளின் தயவோடு என்பதே நடப்பு உண்மை!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;..&lt;br /&gt;முத்து&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.tamilcircle.net/unicode/puthiyajananayagam/2005/aug_2005/03u.html"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;puthiyajananayagam 2005 aug&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6740612124965437837-8316483993888530120?l=123-agreement.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/8316483993888530120'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6740612124965437837/posts/default/8316483993888530120'/><link rel='alternate' type='text/html' href='http://123-agreement.blogspot.com/2007/09/blog-post_1850.html' title='அமெரிக்க-இந்திய இராணுவ-அணுசக்தி ஒப்பந்தங்கள்: அமெரிக்க அடிமைத்தனத்தில்'/><author><name>தோழன்</name><uri>http://www.blogger.com/profile/09424476284420711434</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry></feed>
